இலங்கை ஒரு முக்கிய பிரச்சினை உள்ள நாடு- சர்வதேச நாணய நிதியம்

இலங்கையை செழிப்பான பாதையில் மீண்டும் கொண்டுசெல்ல முடியும் என சர்வதேச நாணயநிதியத்தின் ஆசிய பசுபிக்கிற்கான  இயக்குநர் கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஆசியா பசுபிக்கின் பொருளாதார நிலை குறித்து செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில்  அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு முக்கிய பிரச்சினை உள்ள நாடு என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை அடிப்படையாக கொண்ட திட்டம் நுண்பொருளாதார ஸ்திரப்படுத்தல் பணவீக்கத்தை குறைத்தல் போன்றவற்றை வலியுறுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதிஒருங்கிணைப்பு வருவாய் ஒருங்கிணைப்பினை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் வருவாய் திரட்டல் வரிவசூலிப்பு போன்றவற்றில் இலங்கை மிகவும் பின்னிலையில் உள்ளமைக்கும் இதுவும் ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்.

இதற்கு கோவிட்டிற்கு முன்னர்அவர்கள் முன்னெடுத்த கொள்கைளில் உள்ள தவறுகளே இதற்கு காரணம்  அவர்கள் வரிச்சலுகையை வழங்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சர்வதேச நாணயநிதியத்தின் நிதிஆதரவு திட்டம் என்பது வருவாய் அடிப்படையிலான ஒருங்கிணைப்பு ஆகும் இது பொருளாதாரத்திற்கு ஸ்திரதன்மையை வழங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மிகவும் உயர்நிலைக்கு சென்ற பணவீக்கத்தை கட்டுப்படுத்த சர்வதேச நாணயநிதியம் விரும்புகின்றது  என தெரிவித்துள்ள அவர் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் ஆட்சி மற்றும் ஊழல் விவகாரங்களிற்கும் தீர்வை காணமுயல்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி மற்றும் ஊழல் விவகாரம் குறித்து ஆழமான கண்டறிதலை மேற்கொண்ட முதல் நாடு இலங்கை எனவும் தெரிவித்துள்ள அவர் மேலும் இது இலங்கை வறியவர்கள் மற்றும் நலிந்தவர்களிற்கு எவ்வாறு உதவவேண்டும் என்பதை மையப்படுத்திய  திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் கடன்வழங்குநர்கள் உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்களை உள்ளடக்கிய கடன்வழங்குநர்களுடன் கடன் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான நல்லெண்ண முயற்சிகளை இலங்கை அடுத்த கட்டமாக மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை 2022 இல் 8.7 வீத வீழ்ச்சி காணப்பட்டது 2023 இல் இது 3வீதமாக காணப்படும சிறிய மீட்சி காணப்படும் எனவும் கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தவேண்டும் இதன் காரணமாக கடன்களை பேண்தகு தன்மை கொண்டமையாக  மாற்றலாம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தை இலங்கை குறைக்கவேண்டும் என் என்றால் அது வறியவர்கள் மீது சுமையை செலுத்துகின்றது வறியவர்கள் நலிந்தவர்களை காயப்படுத்துகின்றதுஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.