வாக்குறுதிகளை கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவு இல்லை -ஜீ.எல்.பீரிஸ் விளக்கம்

264 Views

முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தனது ஆதரவை இழந்தது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று  பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் கணிசமான அந்நிய செலாவணியில் பங்களிக்கும் நேரத்தில்,குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் அனுப்பும் சூழலில். – இலங்கைக்கு ஆதரவை காட்டவில்லை.

மேலும், ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பது பொதுவான மரபு எனவும், எனினும் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் கூட வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

“இவ்வாறு ஏன் நடக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆணித்தரமான வாக்குறுதிகளை நாம் இலகுவாக எடுத்துக்கொண்டு அவற்றை மீறுவதே முக்கிய காரணம்” என பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் நாட்டின் சார்பில் உறுதிமொழி வழங்கிய அதேவேளை, தாம் ஜெனிவாவில் இருந்த போது, அந்த வாக்குறுதியை மீறுவதற்காக மாத்திரமே இவ்வாறு குறிப்பிட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply