பதில் ஜனாதிபதியாக ரணில்- சபாநாயகர் அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்பார் என தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிவிப்பொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தைச் சுற்றி பெருமளவு இராணுவத்தினர், காவல்துறை விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு  பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

pr3 பதில் ஜனாதிபதியாக ரணில்- சபாநாயகர் அறிவிப்பு

இதேவேளை ஹெலிகொப்டர்கள் உலங்குவானுார்திகள் தாழ்வாகப் பறக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.