சம்பந்தருக்கு வாக்களிக்கச் சொல்லும் ராஜபக்சவின் வேட்பாளர்

மகிந்த அரசுடன் கூட்டமைப்பு பின்கதவு பேச்சுக்களை நடத்துவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் திருக்கோணாமலையின் பெரமுன வேட்பாளர் சுசந்த புஞ்சிநிலமே தனக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள், வாக்குகளை இரா.சம்பந்தன் ஐயாவுக்கு போடுமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என்ற செய்தி அனைத்து திருக்கோணாமலை வாக்காளர்களுக்கு பெருத்த அதிர்ரச்சியைக் கொடுத்திருக்கின்றது.

திருமலையின் சிங்கள குடியேற்ற சூத்திரதாரியாக அடையாளப்படுத்தப்பட்ட அவர் தனக்கு போடுகின்ற வாக்குகளை இரா சம்பந்தன் ஐயாவுக்கு போடுமாறு திருக்கோணமலை வாக்காளர்களுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளமை சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது