இலங்கைக்கு Quad நாடுகள் உதவி செய்ய வேண்டும்-அமெரிக்கா

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண Quad நாடுகள் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என அமெரிக்காவின் வௌியுறவு தொடர்பிலான செனட் குழு (Senate Foreign Relations Committee) வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் Antony Blinken, ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi, இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் Penny Wong ஆகியோருக்கு செனட் சபை உறுப்பினரும் வௌியுறவு தொடர்பிலான செனட் குழுவின் தலைவருமான Bob Menendez அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இந்தியாவின் பங்கை பாராட்டுவதாகவும் அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Tamil News