இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என இலங்கை காவல்துறை தலைமையகம் இன்று அறி வித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடத்த இதுவரை அனுமதிக்கப்பட வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினரால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.