தொடர் போராட்டத்தின் 1580 ஆவது நாளில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில் கொரோனா தடுப்பு சுகாதார வழிகாட்டலுடன் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தை 10க்கு உட்பட்ட உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு நடாத்தியிருந்தனர். ஆனால் 10க்கும் அதிகமான காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்தில் கூடி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
அதே போல் வவுனியாவில் காணாமல் போன உறவுகளால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 1600 ஆவது நாளை இன்று எட்டிய நிலையில் அவர்களால் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.