இலங்கையில் தேர்தல் நடத்தக் கோரி இத்தாலியில் போராட்டம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி இத்தாலியின் மிலன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த குழுவினர் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாகச் செயற்படும் அரசின் இந்த நடவடிக்கையை உடனடியாக தோற்கடிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.