313 Views
இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணவும் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் இணக்கம் தெரிவிப்பதாக 3 பீடங்களின் பீடாதிபதிகளுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
மாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உடன்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.