பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உணா்பூா்வமாக நடைபெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபி முன்பாக இடம்பெற்ற பொங்குதமிழ் பிரகடன உரையினை தொடர்ந்து பொங்குதமிழ் தூபிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாணவர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர்கள் என பெருந்தொகையானவா்கள் கலந்துகொண்டிருந்தனா்.
2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், ,தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இராணுவ அடக்குமுறைக்கு மத்தியிலும், பொங்குதமிழ் நிகழ்வு நடத்தப்பட்டு, பொங்கு தமிழ் பிரகடனமும் செய்யப்பட்டது.