இலங்கையில் மீட்கப்பட்ட தமிழக மீனவர் ராஜ்கிரணின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சிங்களப்படையால் கொண்டு செல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடலை உடனடியாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு குறைந்தது ரூ.1 கோடி இழப்பீடாக பெற்றுத் தர வேண்டும்!(2/3)#TNGovt #IndianGovt @PMOIndia @CMOTamilnadu
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 20, 2021
இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் மீனவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சில இடுகைகளையும் பகிர்ந்துள்ளார்.
காரைநகர் கடற்பரப்பிற்குள் நேற்றைய தினம் ஊடுருவிய இந்திய மீன்பிடிப் படகை கடற்படையினர் கைது செய்ய முயன்ற சமயம் கடற்படையினரினதும் மீனவர்களதும் படகு மோதியதில் இந்திய மீனவர்களின் படகு நொருங்கி கடலில் மூழ்கியது.