இலங்கைக்கான விமான  வேவைகளை நிறுத்தியது ப்ளய் டுபாய்

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரை மையப்படுத்திய ப்ளய் டுபாய் விமான வேவை இலங்கைக்கான தனது சேவைகளை இடை நிறுத்தியுள்ளது.

கடந்த 10ம் திகதி முதல் இவ்வாறு விமான சேவைகளை இடை நிறுத்தியுள்ளதாகவும் மீள அறிவிக்கப்படும் வரை இலங்கைகான தனது சேவைகள் இடம்பெறாது எனவும் ப்ளய் டுபாய் அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமையை மிக உன்னிப்பாக அவதனிப்பதாகவும் தெரிவிக்கும் ப்ளய் டுபாய் விமான சேவையை பயன்படுத்தும் நாடுகளின் இலங்கை முக்கியமானது என அண்மையில் அந்த விமான சேவை நிறுவனம் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது அந்த சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.