‘கோட்டா வீட்டுக்குப் போ’ என தொடர் போராட்டம் நடந்து வரும், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக, படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் படங்களுடன் நீதி கோரும் பதாதைகள் வைக்கப்படுள்ளன.
ஊடகவியலாளர்கள் நிமலராஜன், சிவராம், லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, கீத் நொயார், போத்தல ஜயந்த ஆகியோரின் படங்களுடன் இந்த பதாதைகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.