யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண் மீதே நேற்று இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்ற இருவரைப் பொலிஸார் துரத்திச் சென்று பிடித்துக் கைது செய்தனர்.
மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறையைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டனர் எனவும், இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தையும், தீவகத்தையும் இணைக்கும் மண்டைதீவு சந்தியில் பொலிஸ் காவலரண் காணப்படுவதால் தீவகப் பகுதிகளில் இருந்து சட்டவிரோத இறைச்சிகள், போதைப்பொருட்கள் என்பவற்றை யாழ்ப்பாணத்துக்குக் கடத்தப்படுவது கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், சோதனைகள் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.