இலங்கை: அரசுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் கைவிட வேண்டும்-பிரதமர் மஹிந்த

அரசுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் கைவிட வேண்டும். விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே நாட்டு மக்களிடம் காணொளி வாயிலாக சிங்கள மொழியில்  கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் “தற்போது சாலையில் நடைபெற்றும் போராட்டத்தால் ஒவ்வொரு நொடியும் நாம் பல டாலர்களை இழக்கிறோம்”  என்றும் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில்,  தலைநகர் கொழும்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களில் இன்றும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆளும் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamil News