இரண்டு வாக்காளருக்கு ஒரு வாக்களிப்பு நிலையம்

2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு  இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மட்டக்களப்பில் இரு வாக்காளரை மட்டுமே கொண்ட வாக்களிப்பு நிலையத்திற்கு  வாக்குப்பெட்டி எடுத்துச்செல்லப்பட்டு வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வாக்காளரை மட்டுமேகொண்ட வாக்களிக்கும் நிலையமாக கருதப்படும் மாந்தீவு வைத்தியசாலைக்கு இன்று காலை வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டன.

மட்டக்களப்பில் இருந்து படகு மூலம் குறித்த வாக்குப்பெட்டியும் வாக்குச்சீட்டுகளும் கொண்டுசெல்லப்பட்டன.இதற்காக பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பொலிஸாரும் அங்கு சென்று கடமையினை பூர்த்திசெய்தமை குறிப்பிடத்தக்கது.