இலங்கையில் கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில், 15,854 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இவற்றில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலே இனங் காணப் பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் மட்டும் 1235 டெங்கு நோயாளர்கள் இனங் காணப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கொழும்பை அடுத்து கம்பஹா மாவட்டத்தில் 491 டெங்கு நோயாளர்கள் இனங் காணப் பட்டுள்ளனர்.
இதே போன்று ஏனைய பல மாவட்டங்களில் இவ்வாறு அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங் காணப் பட்டுள்ளனர்.