இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இளைஞர்களை வலுப்படுத்துவதில் உயர்கல்வியின் முக்கிய பங்கு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் பிரிட்டன் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான தொடர்புகளை அதிகரிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.



