இந்தியாவிலிருந்து மருத்துவ உதவி
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இந்திய தூதரகம் ஊடாக இந்திய அரசால் உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
மருந்துகளை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் இன்று உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இரண்டு லொறிகள் மூலம் கொழும்பிலிருந்து மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் எடுத்துவரப்பட்டுள்ளன.