பிரதமர் மகிந்தவை இலங்கையை அழித்த தலைவராக அனைத்து சமூகங்களாலும் பார்க்கப் படுகின்றது-தவராசா கலையரசன் எம்.பி

மகிந்தவை இலங்கையை அழித்த தலைவராக சகல சமூகங்களாலும் பார்க்கப்படுவதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டிலே மிக நீண்டகாலமாக வாழ்கின்ற எமது இனத்திற்குரிய அந்தஸ்து இதுவரை கிடைக்கவில்லை. ஆலயங்களின் வரலாறுகள் அழிக்கப்படுகின்றன. இதுவே இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பெரும்பான்மை சமூகத்தின் வாக்கில் வெற்றி பெற்றவன் நான் என்ற எண்ணத்துடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவருக்கு இன்று நாலாபக்கமும் எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளது. இன்று மகிந்தராஜபக்ஸ இந்த நாட்டை அழித்த தலைவராக சகல சமூகங்களாலும் அவர் பார்க்கப்படுகின்றார்“ என்றார்.

Tamil News