இலங்கை நெருக்கடி : கோட்டாய ராஜபக்ஷ – ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்கு அமைதியற்ற சூழல் தொடர்கிறது. பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியுள்ளார். தொடர் வன்முறை சம்பவங்களில் 9 பேர் வரை இறந்துள்ளனர்.

நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தலைநகர் கொழும்புவில் இராணுவ கவச வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

Tamil News