யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் வாக்கெண்ணும் மையம்; 89 வாக்கெண்ணும் நிலையங்கள்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பொதுத் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும் என யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் க. மகேசன் தெரிவித்தார்.

விசேடமாக சுகாதார நடைமுறைகளுடன் தேர்தல் ஆணையம் வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய இந்த செயற்பாடு நடைபெறுகின்றது.

இன்று (4) காலையில் இருந்து சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படும். அதாவது இம்முறை யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி மாவட்டங்களில் 508 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு ஏதுவாகஇ அதற்கு உரிய ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்களிப்பு தினமான புதன்கிழமை காலை 07 மணி முதல் மாலை 05 மணி வரையில் வாக்களிக்க முடியும். எனவே வாக்காளர்கள் தற்போதைய நிலமைகளை கருத்தில் கொண்டு நேரத்திற்கு சென்ற வாக்களிக்கவும். சுகாதார நடைமுறைளை கடைப்பிடித்து அங்குள்ள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல்களை பின் பற்றி வாக்குகளை அளிக்க முடியும்.

வாக்களிப்பு அன்றைய தினம் முடிவடைந்த பின்னர் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்கு பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு பாதுகாப்பான முறையில் எடுத்து வரப்படும். வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கு பெட்டிகள் பொறுப்பேற்கப்பட்டு, அன்றைய தினம் இரவு பாதுகாக்கப்பட்டு மறுநாள் 06ஆம் திகதி வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் 89 வாக்கெண்ணும் நிலையங்கள் உள்ளன. அவற்றில் 16 தபால்மூல வாக்கெண்ணும் நிலையங்களும், 73 மற்றைய வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் பணிகள் காலை 07 மணிக்கு ஆரம்பமாகும்.

முன்னதாக தபால்மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றின் முடிவுகள் காலை 08 மணிக்கு முதல் அறிவிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் ஏனைய வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு முதல் வாக்கெண்ணும் பணிகள் முடிவடையும் என எதிர் பார்க்கிறோம் – என்றார்