*இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினரிடையே எகிப்தில் இன்று பேச்சுவாா்த்தை!*

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகளிடையே எகிப்தில் இன்று திங்கட்கிழமை (6) பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடாத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் காஸாவில் போா்நிறுத்தத்தை மேற்கொள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20 அம்சத் திட்டத்தை முன்மொழிந்திருந்தாா்.

அத் திட்டத்தின் சில அம்சங்களை ஏற்றுக்கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலின் பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது. இதையடுத்து, காஸாவில் நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, தங்களால் கைது செய்யப்பட்டுள்ள பலஸ்தீனா்கள் மற்றும் காஸா மக்களை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டு அதன் முதல்கட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவாா்த்தை எகிப்து நாட்டில் இன்று திங்கட்கிழமை நடைபெறுகிறது. இதில் அமெரிக்க பிரதிநிதியாக ஸ்டீவ் விட்காஃப் பங்கேற்பாா் என எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

காஸாவில் 2023, ஒக். 7-ஆம் திகதி போா் தொடங்கி இரண்டு ஆண்டுகளை நெருங்கிவரும் நிலையில், இந்தப் பேச்சுவாா்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.