அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் இறால் பண்ணை அமைக்கும் செயற்பாடுகள் உண்மையில் அது அபிவிருத்தியில்லை என்பதுடன், அது முதலாளிகளை மேலும் முதலாளிகள் ஆக்கும் செயல் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளர் தவத் திரு வேலன் சுவாமி அவர்கள் தெரிவித்தார்.
மக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து வாகரை பிரதேசத்தில் இறால் பண்ணை அமைப்பதற்கு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், இரு நாடுகள் என்ற கருத்தியலை நோக்கி மக்கள் நகரும் சூழலில் திட்டமிட்ட வகையில் தமிழனத்தை அழிக்கும் வகையிலேயே, இறால் பண்ணை அமைக்கும் விடயங்கள் அமைந்துள்ளது.
மேலும் அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் இறால் பண்ணை அமைக்கும் செயற்பாடுகள் உண்மையில் அபிவிருத்தியில்லை என்பதுடன், அது முதலாளிகளை மேலும் முதலாளிகள் ஆக்கும் செயல் என்றும் குறிப்பிட்டார்.