தீவிரமடையும் போராட்டம் – ஜனாதிபதி செயலகம் முற்றுகை

ஜனாதிபதி செயலகம் முற்றுகை

ஜனாதிபதி செயலகம் முற்றுகை

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் சொல்லொனாத் துயரங்களை சந்தித்து நிற்கையில் அதற்கு காரணமான கோட்டா அரசை பதவி விலக வலியுறுத்தி இன்று கொழும்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு காலிமுகத்திடலை நோக்கி பல பகுதிகளில் இருந்தும் பேரணியாக வந்த ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டதில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 04 09 at 7.19.03 PM தீவிரமடையும் போராட்டம் - ஜனாதிபதி செயலகம் முற்றுகை

ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிராக விண்ணைப் பிளக்கும் கோஷங்களுடன் சுலோகங்களை ஏந்தியவாறு தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர், யுவதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் காரணமாக கொழும்பு நகரிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.