பிள்ளையானும் சுரேஷ் சலேவும் விடுவிக்கப்படக்கூடாது வலியுறுத்தல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் விடுவிக்கப்பட கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சபையில் தெரிவித்துள்ளார்.

இன்று (12) பாராளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மை வெளிவருவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஸ் சலே ஆகியோர் விடுவிக்கப்பட்டால் உண்மையை வெளிப்படுத்த முடியாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.