இந்திய இலங்கை கடற்படை தளபதிகள் சந்திப்பு

இந்திய இலங்கை கடற்படை தளபதிகள் சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னாவின் அழைப்பின் பேரில், இந்திய கடற்படையின் தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார் , நான்கு நாள் உத்தியோகபூர்வ  பயணமாக  இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் செய்துள்ள அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், பாதுகாப்புச் செயலர், பாதுகாப்புப் படைத் தளபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.

அத்தோடு வியாழக்கிழமை (15) திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிலும் பிரதம அதிதியாக கலந்து கொள்வுள்ளார்.

இந்நிலையில்,  தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார் இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்னவை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது  இரு கடற்படையினரிடையிலுமான ஆளுமைவிருத்தி செயற்பாடுகளை மேலும் வலுவாக்குதல் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துதுதல் ஆகிய விடயங்கள் குறித்து   கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.