இந்தியா–இலங்கை உறவு குறித்து இந்திய  தூதுவர் சந்தோஷ் ஜா  கருத்து

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கூட்டாண்மை என்பது பகிரப்பட்ட விழுமியங்கள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நமது மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்விற்கான பொதுவான இலட்சியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று இலங்கைக்கான இந்திய  தூதுவர் சந்தோஷ் ஜா  தெரிவித்தார்.

கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நடைபெற்று வரும் மலையக கல்வி மன்றத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
நம்பிக்கையின் அடிப்படையில், கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், வேகமாக மாறிவரும் உலகில் இளைஞர்கள் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறன்களை வளர்க்கவும் இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது  என்றும் அவர் தெரிவித்தார்.