சமஷ்டி அடிப்படையிலான தீர்வைப் பெற இலங்கையை அழுத்த வேண்டும் இந்தியா: கிட்டு பூங்கா பிரகடனத்தில் முன்னணி வலியுறுத்து

சமஷ்டி அடிப்படையிலான தீர்வைப் பெற

“வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில், தமிழ்த் தேச அங்கீகாரத்தையும் – அதனுடைய தனித்துவமான இறைமையையும் – சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக அனுபவிக்கக் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வைப் பெற இந்திய அரசும் ஏனைய நட்பு நாடுக ளும் இலங்கையை வலியுறுத்த வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்று வெளியிட்ட பிரகடனத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது. 13ஆவது திருத்தத்துக்கு எதி ராக நேற்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்ன ணியால் நடத்தப்பட்ட பேரணி யின் இறுதியில் கிட்டு பூங்கா வில் வைத்து பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது.

அதன் முழு விவரம் வருமாறு:

‘தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத் தத்திற்குள் முடக்கும் சதி முயற் சியை முறியடிப்போம்” என்ற நோக்கத்துடன் தமிழ் மக்களின தும், வெகுசன அமைப்புக்களி னதும் பங்குபற்றலுடன் நடை பெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத் தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம்.

சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ்த் தேசமா னது – தனது அடிப்படையான அரசியல் உரிமைகளான வடக்கு கிழக்கு இணைந்த தாய கம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வில் எப்போதுமே உறுதியாக இருக் கும் என்ற செய்தியைச் சிங்கள தேசத்துக்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் இத் தொடர் போராட்டம் வலி யுறுத்திக் கூற விரும்புகின்றது. சிங்கள – பௌத்த பெரும் பான்மை மக்களின் ஏகோபித்த வாக்குகளால் ஆட்சிப்பீடம் ஏறியுள்ள இன்றைய அரசாங் கத்தால் இலங்கைக்கான நான் காவது அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. அதை இந்த வருடத்துக்குள் நிறைவேற்றவுள்ளதாக இவ்வரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப் பட்டும் உள்ளது.

அது இறுக்க மான ஒற்றையாட்சிக்கு உட்பட் டதாகவே அமையும் என்பதை யும், அரசாங்கம் உறுதிப்படக் கூறியுள்ளது. இந்த அரசியல மைப்பை ஒரு தலைப்பட்டச மாக நிறைவேற்றுவதற்குரிய மூன்றில் இரண்டு பெரும்பான் மையையும் இந்த அரசாங்கம் கொண்டுள்ளது. இலங்கையில் கொண்டுவரப்பட்ட மூன்று அரசியலமைப்புக்களும் இதே போன்றதொரு சிங்கள பெரும் பான்மைப் பாராளுமன்ற உறுப் பினர்களைக் கொண்டே நிறை வேற்றப்பட்டிருந்தது. அச்சந் தர்ப்பங்களிலெல்லாம் தமிழ்த் தலைமைகள் அந்த ஒற்றை யாட்சி அரசியல் யாப்புக்களை எதிர்த்திருந்ததுடன், வடக்கு, கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்ப டையிலான தீர்வை வலியுறுத்தி வந்ததன் விளைவாகவே, தமிழர் களுக்கு இனப்பிரச்னையொன்று உண்டு என்னும் விடயத் தைத் தக்கவைக்கக்கூடியதாக இருந் தது.

இவ்வாறிருக்க, 1980 களில் இலங்கையை மையமாகக் கொண்டிருந்த அமெரிக்க – இந் திய பூகோளப்போட்டி காரணமாகவே இந்தியா தனது நலனை அடைவதற்காக தமிழர்களின் இனப்பிரச்னையைக் கையிலெ டுத்திருந்தது. 1987 இல் இலங் கையானது, இந்திய நலன்சார்ந்து செயற்பட தயாரான நிலையில், இந்தியா தனது தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதிப்ப டுத்தி, சிங்கள தரப்புடன் உடன்பட்ட பின்னர், எந்த ஒற் றையாட்சிக் கெதிராக தமிழ்த் தரப்பை பயன்படுத்தியதோ, அதே ஒற்றையாட்சிக்குள்ளான 13 ஆம் திருத்தத்தையே தமிழ்க் களுக்கான தீர்வாக இலங்கை அரசு முன்வைத்திருந்த நிலை யில், தமிழ்த் தரப்பை இந்தியா கைவிட்டிருந்தது. இந்நிலை யில் அப்போதிருந்த தமிழ்த் தரப்புகளாலும் ஒற்றையாட்சிக் குட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டிருந் தது.

இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேர்மையான தலைமைத்துவத்தின் காரணமாக ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயல்பாடுகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந் தது. 2005 இன் பின்னர், இந் திய சீனா பூகோளப்போட்டி மீண்டும் இலங்கையில் உருவா கியிருந்த பின்னணியிலேயே ஓர் இனப்படுகொலையூடாக போராட்டம் மௌனிக்கப்பட் டிருந்தது. இதன் பின்னர், இந்தியா மீண்டும் தனது ஆதிக் கத்திலுள்ள தமிழ்த் தரப்புக் களைப் பயன்படுத்தி, தமிழ் அரசியலை ஒரு துருப்புச்சீட்டா கக் கையாண்டு இலங்கை அர சோடு பேரம்பேசி வருகின்றது. இலங்கை, சீனாவின் விவகாரத் தில் இந்திய நலன்களுக்கு அச்சு றுத்தல் ஏற்படாத வகையில் செயற்படுமானால், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழரின் அரசியலை ஒற்றை யாட்சிக்குள்ளான 13ஆம் திருத் தத்திற்குள் முடக்குவதற்கும் இணங்கியுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே, இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ்த் தரப்புகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடு தலைக் கழகம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கட்சி உள் ளிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இணைந்து 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி கூட்டாக கையொப்ப மிட்ட கடிதத்தை 18-01-2022 அன்று இந்திய தூதுவரிடம் கையளித்துள்ளனர். இதன்மூலம், 13 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள சரத் துக்கள் புதிய அரசியலமைப்பி லும் உள்வாங்கப்படும் பட்சத்தில், இந்திய ஆதிக் கத்துக்குட்பட்ட வடக்குகிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், புதிய ஒற்றை யாட்சி அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவதனூடாக, தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்ற நிலைமையையே உரு வாக்கி, நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் ஏற்றுக் கொண்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்கிவிட்டதாகவும், இனப்பிரச்னை இதனூடாக தீர்க்கப்பட்டு விட்டதாகவும் உலகுக்கு பறைசாற்றுவதற்கு தயாராகிறார்கள்.

இந்த ஆபத்திலிருந்து தமிழ்த் தேசத்தை மீட்டெடுப்பதற்கு, தமிழ்த் தேச மக்கள் அணிதிரள் வதன் ஊடாகவே தடுத்து நிறுத்த முடியும் என்னும் யாதார்த் தத்தை விளங்கிக் கொண்டு, இந்தத் தொடர் போராட்டம் பின்வருவனவற்றை பிரகட னப்படுத்துகிறது்- – தமிழ்த் தேச மக்கள் தொடர்ச்சியாக ஒற்றையாட் சியை நிராகரித்து, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை 70 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வந்தி ருக்கின்ற நிலையிலே, 2009 இல் இனவழிப்புக்கு உள்ளாக் கப்பட்ட பின்னரும், ஒற்றை யாட்சியை நிராகரித்தும், தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத் தைக் கோரியும் ஒவ்வொரு தேர்தல்களுடாகவும் தங்களது ஏகோபித்த ஆணையை வழங்கி வந்திருக்கிறார்கள். – வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் – அதன் இறைமையும், சுயநிர் ணய உரிமையையும் அங்கீகிக் கப்படுகின்ற தீர்வுக்குப் பதிலாக – ஒற்றையாட்சிக்குள் இருக்கக் கூடிய ஒரு கட்டமைப்பாக (13 ஆம் திருத்தச் சட்டமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ) இருக்குமானால் அவ்வகையான செயல், தமிழ் மக்களுடைய ஆணைக்குத் துரோகம் இழைக் கும் வகையிலேயே அமையும் என்ற விடயத்தை இப்போராட் டம் பிரகடனப் படுத்துகிறது.

-தமிழ் மக்கள் – காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட் சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத் தத்தையோ அல்லது வேறு எந்தவொரு திருத்தத்தையோ வலியுறுத்துகின்ற தரப்புக்கள், அம்முயற்சியை கைவிட வேண் டுமென இப்போராட்டமூடாக வலியுறுத்துகிறோம். – இந்திய அரசானது இலங் கையோடு நல்லுறவை பலப் படுத்திக்கொள்வதையோ அல் லது தனது பூகோள -அரசியல் நலன்களைப் பேணுவதையோ அல்லது தென் ஆசிய பிராந்திய வல்லரசாக தன்னை நிலைநிறுத் திக்கொள்வதையோ தனது பூகோள நலன்களைப் பூர்த்தி செய்வதற்காக தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்கி, தமிழ் மக்க ளின் நலன்களை முற்றாகப் புறக் கணிக்கும் செயற்பாட்டை நிறுத் துமாறு கோருகின்றோம்.

Tamil News