இந்தியா செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

திருகோணமலையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் படகு மூலம் இன்று காலை இந்தியாவின் இராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.

ஏற்கனவே 2006 முதல் 2019 வரை மண்டபம் இலங்கை அகதிகள் முகாம் என்ற முகாமில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி, மண்டபத்தில் உள்ள காவல் நிலையத்தை நேரடியாக அணுகி தங்களை அகதிகளாக அறிவித்துள்ளனர்.

ஜெயமாலினி, பதுர்ஜான், ஹசிம் கான் மற்றும் பாதுஷிகா ஆகியோர் திருகோணமலையில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் கடற்படை  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தியாவின் தமிழகத்திற்கு அகதிகளாக நுழைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.