Home Blog Page 3104

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும் வரை உண்ணாவிரதம் – பிரதமரும் ஜனாதிபதியும் ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு

பிரதமரும், ஜனாதிபதியும் தம்மை தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறாகள் அத்துடன் இந்த தரமுயர்த்தல் நடவடிக்கைகை தடுப்பது கல்முனையில் உள்ள ஒரு அரசியல்வாதியே என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி  ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் பெரியநீலாவணை பிழிவஸ் ஈஸ்டர்ன் தேவாலய பாதிரியார் அருட்தந்தை தங்கமணி கிருபைநாதனுடன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். thumb large pratest கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும் வரை உண்ணாவிரதம் - பிரதமரும் ஜனாதிபதியும் ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு

இந்த உண்ணாவிரப்போராட்டத்தில் இவர்களுடன் பிரதேச சமூகநல அமைப்புக்களின் சில பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போராட்டகார்கள் தாம் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் எங்கள் விடயத்தில் பொடுபோக்காக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இந்த நல்லாட்சி ஆரம்பித்த நாள் முதல் எங்களுக்கான இந்த விடயம் பாராமுகமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் தடுப்பது கல்முனையில் உள்ள ஒரு அரசியல்வாதியே.

பிரதமரும், ஜனாதிபதியும் எங்களை தொடர்ந்தும் ஏமாற்றிவருகிறார்கள்.

நாங்கள் இங்கு இனவாத, பிரதேசவாத அலையை தோற்றுவித்து பிரச்சினையை உண்டாக்க வரவில்லை. எங்களுடைய போராட்டம் இந்த செயலகத்தை தரமுயர்த்தும் வரை தொடரும். நாங்கள் உணவருந்தாமல்,நீர் கூட அருந்தாமல் எங்கள் உரிமைக்கால போராட்ட இங்கு வந்திருக்கிறோம் என்றனர்.

 

புத்தரின் பெயரால் இறுக்கமடையும் ஆரிய கூட்டுறவு – சிறிலங்கா இந்திய படைத்துறை குடும்ப கூட்டுறவு.

இலங்கை இராணுவத்தை சேரந்த 160 பேர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் புத்தகாயாவிற்கான விசேட யாத்திரையை ஜூன் 15-18 காலப் பகுதியில் இரண்டாவது தடவையாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது.

இரு நாடுகளினதும் ஆயுதப் படையினரிடையே இடைத்தொடர்பு மற்றும் நட்பு என்பவற்றை அதிகரிக்கும் நோக்கில் இரு நாடுகளுக்குமிடையிலான கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த விசேட யாத்திரை ஏற்பாடு கடந்த வருடம் ஆரம்பமாகியது.

இந்த வருட யாத்திரை, கடந்த வருடத்தை விட இரண்டிலிருந்து நான்கு என அதிகரித்த நாட்களுக்கு மட்டுமன்றி இந்தியாவிலிருந்து 160 ஆயுதப் படையினர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இலங்கைக்கு பரஸ்பரம் விஜயம் செய்தல் என்பதையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

யாத்திரையின் போது, இலங்கை ஆயுதப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் புனித மாகாபோதி ஆலயம், 80 அடி உயர புத்தர் சிலை, ராஜ்கிர் மற்றும் நாலந்த அருங்காட்சியகம் என்பவற்றுக்கு விஜயம் செய்வார்கள்.

இலங்கை இராணுவத் தளபதியின் ஒரு விசேட வேண்டுகோளின் பெயரில் வரும் இந்தியக் குழுவினர் இலங்கையிலுள்ள முக்கியமான இடங்களுக்கு விஜயம் செய்வார்கள்.z p07 Indian HC 888 புத்தரின் பெயரால் இறுக்கமடையும் ஆரிய கூட்டுறவு - சிறிலங்கா இந்திய படைத்துறை குடும்ப கூட்டுறவு.

இது, கண்டியில் புனித தந்த ஆலயத்திற்கு விஜயம் செய்து வணக்கம் செலுத்துதல் மற்றும் காலிக்கான விஜயம் என்பவற்றை உள்ளடக்கியிருக்கும். இந்திய ஆயுதப் படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஒரு பெரும் குழு ஒரு விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவையாகும்.

இந்திய விமானப் படையின் C – 17 குளோப்மாஸ்டர் விமானம் இலங்கை மற்றும் இந்திய பயணக் குழுவினரின் போக்குவரத்துக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலாச்சார மற்றும் வரலாற்று ஈடுபடுதல்களுக்கு மேலதிகமாக, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் ஆயுதப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கிடையில் பெரியளவிலான இடைத்தொடர்புகளும் இதன்போது மேற்கொள்ளப்படும்.

இலங்கைக்கான, இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோர் இலங்கைக்கு வரும் இந்தியக் குழுவினரை வரவேற்பதற்கும் மற்றும் இலங்கைக் குழுவினரை இந்தியாவிற்கு வழியனுப்பி வைப்பதற்குமாக விமான நிலையத்தில் இருந்தனர்.

செய்மதி ஊடாக சிறீலங்காவைக் கண்காணிக்க ஜப்பான் முயற்சி?

இன்று திங்கட்கிழமை, சிறிலங்காவின் முதலாவது செய்மதியான ராவணா 1 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

சிறிலங்கா தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது செய்மதியாக இது கருதப்படுகின்றது என ஆதர் சீ. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது புவியிலிருந்து 400 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள விண்ணிற்கு இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு செலுத்தப்படுகின்றது.

ஜப்பானின் தொழில்நுட்ப உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த செய்மதிக்கு ராவணா 1 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சிறீலங்காவுக்கு உதவிகளை மேற்கொள்வதன் மூலம் அங்கு தமது ஆதிக்கத்தை செலுத்தும் போட்டியில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் ஜப்பான் களமிறங்கியுள்ளது. முன்னர் சிறீலங்காவுக்கு அதிக நிதி உதவிகளை வழங்கிவந்த ஜப்பான் தற்போது தொழில்நுட்ப உதவிகள் என்ற போர்வையில் தனது கண்காணிப்பை இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நிலைநிறுத்த முற்பட்டுவருவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு எதிராக மைத்திரியின் அடுத்த காய்நகர்த்தல் – பூட்டினுக்கு அழைப்பு

அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கு சிறீலங்கா அரச தலைவர் அதிக முயற்சிகளை எடுத்து வருகின்றார். அதன் அடுத்த நகர்வாக ரஸ்யா அதிபர் விளாமிடீர் பூட்டினுக்கு சிறீலங்கா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

ஆசியப் பிராந்திய நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக தஜிகிஸ்த்தானுக்கு சென்றுள்ள சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா அங்கு ரஸ்ய அதிபர் பூட்டினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ரஸ்யாவில் இருந்து சிறீலங்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா கொண்டுவந்துள்ள தடை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன் அதனை எவ்வாறு முறியடிக்கலாம் எனவும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் சிறீலங்காவுக்கு வருமாறு ரஸ்யா அரச தலைவருக்கு மைத்திரி அழைப்பு விடுத்ததுடன், இரு நாடுகளின் உறவுகளைப் பலப்படுத்தும் திட்டங்கள் தொடர்பிலும் ஆரயப்பட்டதாக சிறீலங்கா அரச தலைவர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈரோஸ் அமைப்பின் கிளை அலுவலகம் முல்லைத்தீவில்

ஈழப் புரட்சி அமைப்பின் மாவட்டக்கிளை நேற்று முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிக் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஈழப்புரட்சி அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு ராஜேந்திரா அலுவலகத்தை திறந்து வைத்தார். அமைப்பின் மூத்த உறுப்பினர் திரு நேசரட்ணம் அலுவலகத்தின் பெயர்ப் பலகையினை திரைநீக்கம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் அமைப்பின் தோழர்களான அருளப்பு ராசநாயகம், மலையக மக்கள் இணைப்பாளர் தோழர் ஜீவன், மூத்த உறுப்பினர் திருச்செல்வம் உட்பட அமைப்பின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிறீலங்கா காவல்துறையில் தமிழ் இளைஞர், யுவதிகள்

வடமாகாணத்தில் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் கால்துறைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில், தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் த.கணேசநாதன்  தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையால் தமிழ் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக பெண்கள் தங்கள் பிரச்சினைகளை காவல்துறையினரிடம் தெரிவிப்பதற்கு மொழி பெரும் பிரச்சினையாக  உள்ளதாகவும், இதனால் சட்டத்தை அமுல்ப்படுத்துவதில் காவல்துறை அலுவலகம் பெரும் சவாலை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.

இதற்குத் தீர்வாகவே இம்முறை வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ் பேசும் இளைஞர்கள், யுவதிகளை காவல்துறை திணைக்களத்தில் இணைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் த.கணேசநாதன் மேலும் தெரிவித்தார்.

 

லண்டன் ஓவல் மைதான முன்றலில் தமிழர் ஆர்ப்பாட்டம்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் போது, சிறிலங்கா மற்றும் அவுஸ்திரேலியா பங்குபற்றிய போட்டியின் போது, போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் மைதான முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதன் போது சிறிலங்கா அணி ஆதரவாளர்கள் பப்பரே வாத்தியங்களை இசைத்து புலம் பெயர்ந்த மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு இடைபூறு ஏற்படுத்தினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கோவையில் கைதான ஐ.எஸ் சந்தேக நபர்கள்

சிறிலங்காவில் இடம்பெற்ற 21 ஏப்ரல் தாக்குதல்தாரியுடன் சமூகவலைத்தள தொடர்பைக் கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் இந்தியா, கோவையில் சிலர் கைதாகியிருந்தனர். ஷஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் தேசிய புலனாய்வாளர்களினால் கோவை உக்கடம் பகுதியில் 7இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டு செல்போன்கள், உட்பட பல மின்சாதனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கோவை மாநகர நுண்ணறிவு காவல்துறையினர் மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவல்களையடுத்தே இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 13ஆம் திகதி கோவை தெற்கு உக்கடம் அன்புநகரைச் சேர்ந்த ஷாஜகான் (25), கோவை வின்சென்ட் சாலையிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் முகமது உசேன் (25), கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்த ஷேக் சபியுல்ல (36) ஆகியோரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களின் வீடுகளில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மூவரும் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக பணியாற்றி வந்தனர்.  நேற்று காலை 8 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஒரு சந்தர்ப்பவாதி -அருட்தந்தை சக்திவேல்

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் யாரோ ஒருவரின் அரசியலுக்கு பின்னால் நின்று அந்த அரசியலை பாதுகாப்பதற்காக தனது சமய நிறுவனத்தின் அடையாளத்தை பயன்படுத்துகின்றார் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நாடு சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று கூறுபவர்களை மல்கம் ரஞ்சித் திருப்திப்படுத்த முனைகிறார். இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று அவரும் பல தடவை கூறியுள்ளார்.

ரத்தின தேரரின் போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பானது என்றால் எமது அரசியல் கைதிகள் பல போராட்டங்களை செய்தனர், உண்ணாவிரதம் இருந்தனர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இரு ஆண்டுகளாக போராடுகிறார் அவர்களுக்கு மத்தியில் சென்று ஒருநாள் அவர் உட்கார்ந்திருந்திந்தராவென கேள்வி எழுப்பியுள்ளார்.

(சர்வதேச) அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மையில் மக்களுக்கு உதவுகின்றனவா? -சுருதி

விளிம்புநிலை மக்களுக்கு உதவி வழங்கும் அமைப்புக்கள் பல தாசாப்தங்களாக இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் ஐநா 1945இல் ஆரம்பித்த போதே சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் என்ற பெயரில் அமைப்புக்கள் உருவாகின்றன. ஆரம்பத்தில் ஒரு சில அரசசார்பற்ற நிறுவனங்களே இருந்தன. இந்த ஆரம்ப கால அரசசாரபற்ற நிறுவனங்கள் சமூக நலனுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து இயங்கியதால் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இந்த ஆரம்பகால நிறுவனங்கள் ஒரு நற்பெயரை தேடிக்கொடுத்தன.

80களில் தான் அரசசார்பற்ற நிறுவனங்களின் தொகை பிரமிப்பை தரும் அளவுக்கு அதிகரித்தன. ‘மக்கள் திறனை கட்டியெழுப்புதல்’, ‘வறுமையை ஒழித்தல்’, ‘விளிம்பு நிலை மக்களுக்கு குரல் கொடுத்தல்’ போன்ற வாசகங்களுடன் இவற்றின் வளர்ச்சி இவை மக்களுக்கானவை என்ற செய்தியையே கொடுக்கின்றன. இதை மேலும் ஆராய்ந்து தெளிவோம்.

80களில் நவதாராளவாதம் கோலோச்ச ஆரம்பித்த பின்னர் அரசுகள் பொதுச்சேவைகள் வழங்குவதை குறைத்துக்கொள்ள வற்புறுத்தப்பட்டன. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட அல்லல்களை மட்டுப்படுத்த அரசசார்பற்ற நிறுவனங்கள் களான்கள் போல உலகெங்கும் முளைக்க ஆரம்பித்தன.

80களில் அரசசார்பற்ற  நிறுவனங்களின் தொகை 1400 வீதம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. வளரும் நாடுகளுக்கு அதன் அரசுகளுக்கு ஊடாக முன்னர் கொடுக்கப்பட்ட உதவித்தொகைகளின் பெரும் பங்கு இப்போது அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஊடாகவே கொடுக்கப்படுகின்றன. இன்று ஒரு குறிப்பிட்ட பகுதியில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை அப்பகுதியில் நவதாராளவாதம் மக்களுக்கு ஏற்படுத்தும் அல்லகளின் அளவுகோலாகவே பார்க்க முடியும்.

அரசுகளும், தனியார் பலதேசிய வர்த்தக நிறுவனங்களும் இன்று உலகளாவிய ரீதியில் இருபெரும் அதிகார சக்திகளாக விளங்கும் அதே நேரத்தில் அரசசாரபற்ற நிறுவனங்கள் மூன்றாவது பெரும் சக்தியாக விளங்குகிறது. இந்த மூன்றாவது சக்தி மற்றைய இரண்டு சக்திகளுக்கும் சவாலாக உண்மையில் அடிமட்ட மக்களுக்காகத்தான் இயங்குகின்றனவா? அல்லது மற்றைய இரண்டு சக்திகளுடன் கூட்டாக இயங்குகின்றனவா?maxresdefault 1 (சர்வதேச) அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மையில் மக்களுக்கு உதவுகின்றனவா? -சுருதி

அரசசார்பற்ற நிறுவனங்கள் எங்கிருந்து தம் நிதியை பெற்றுக்கொள்கின்றன என்பதை சிந்தித்தால் இன்னும் சில தெளிவுகள் ஏற்படும்.

இவர்களுக்கு கிடைக்கும் பெரும்பாலான நிதி அரசுகளிடமிருந்தும், அரசு சார்ந்த அமைப்புக்களிடமிருந்தும் தனியார் பலதேசிய வர்த்தக நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகின்றன. இதனால் இவர்கள்நிதி கொடுப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு  மறைமுகமாகவேனும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்பது தெளிவல்லவா?

இவர்கள் ஒருபோதும் நிதி கொடுப்பவர்களுக்கு எதிராக போராட முன்வர மாட்டார்கள். நிதி கொடுப்பவர்கள் போடும் வரம்புகளுக்குள்ளேயே நின்று பெறக்கூடியவற்றையே ஆதரிப்பார்கள்.

அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களாக அரசில் மற்றும் தனியார் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களில் பதவி வகித்தவர்கள் அமர்த்தப்படுகிறார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டும். மனித உரிமை காப்பகம் என்ற அமைப்பின் ஐக்கிய-அமெரிக்க சார்பையும் இதன் முக்கிய பதவிகளில் ஐ-அமெரிக்க அரசின் வெளிவிவகார பிரிவில் பணிசெய்தவர்களை அமர்த்தியதையும் கண்டித்து உலகின் பல பெரிய மனிதர்கள் 2014இல் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள்.

அரசசார்பற்ற நிறுவனங்கள் சிறுதிட்டங்களையே முன்னிலைப்படுத்தும். உறுதியான கொள்கைகள் கொண்ட அமைப்புக்களை ஆதரிக்காது. இத்தகைய அமைப்புக்களுக்கு போட்டியாகவே அவை இயங்கும்.

இதனால் மக்களின் பிரச்சனைகளின் மூலத்தையும் தீர்வுகளையும் ஆராய்வதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் தடையாகவே இருக்கின்றன. தனிமனித முயற்சியிலேயே தீர்வுகள் இருப்பதாக காட்டி மக்களை மடக்கி வைத்திருக்கின்றன. இவை சிறு தொகுதி மக்களுக்கே உதவி தருவதால் மக்களை பிளவுபடுத்துவும் வழிசெய்கின்றன.

நவதாராளவாதத்தின் தாக்கத்திற்கும் அரசு பொதுச்வேவைகளை மட்டுப்படுத்துவதற்கும் எதிராக மக்கள் இயற்கையாகவே போராடியிருப்பார்கள். இடதுசாரிகள் இதை முன்னின்று நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு சமூகத்தில் போராட்டத்தை நடத்தக்கூடிய இடதுசாரிகளை இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் தமக்கு பணிபுரிபவர்களாக மாற்றி அவர்களின் சக்திகளையும் திசைதிருப்பி விடுகின்றன. அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆரம்பத்தில் தமக்கு தேடிக்கொண்ட நற்பெயரும் போராட வேண்டிய இடதுசாரி மக்களை இவ்வாறு திசைதிருப்ப உதவுகிறது. போராட வேண்டிய மக்கள் அரசசார்பற்ற நிறுவனங்களால் திசைதிருப்பப்படுவது ஒரு பெரும்பிரச்சனையாகவே உள்ளது.

இந்நிறுவனங்கள் போராட வேண்டியவர்களில் சிலரை தம் நிறுவனத்தில் உள்வாங்கி  போராட வேண்டிய மக்களை பிரிக்கிறார்கள். இவ்வாறு உள்வாங்கப்பட்டவர்கள் தமது நோக்கத்தை குறுக்கி மக்கள் எதிர்நோக்கும் பெரிய பிரச்சனைகளை தவிர்க்க வழிசெய்கிறார்கள். இதனால் இன்று உண்மையான முற்போக்கு கொள்கைகளை கொண்ட மக்கள் அமைப்புக்கள் அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து உதவி பெறுவதையே தவிர்த்தே இயங்குகின்றன.

மக்களுக்கான நீதியை ஒரு ‘மனித உரிமைகள் தொழிலாக’ மாற்றியதில் இந்த அரசசாரபற்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரும் பங்குண்டு. மக்களுக்கான நீதியை மனித உரிமை என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவுகின்றன.

அநீதியின் உண்மை முகத்தை மறைத்து அதிகாரவர்க்கம் செய்யும் கொடூரங்களையும் போராடும் மக்களின் செய்கைகளையும் ஒரே தராசில் போட்டு இருவரிலும் குறைகண்டு பேசும் ஒரு கலாசாரத்தை உருவாக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் வழி செய்திருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்ட காலத்தில் இதை ஈழத்தமிழர்கள் அப்பட்டமாக அனுபவித்தார்கள். ‘மனித உரிமைகள் என்னும் புதிர்’ என்ற நூலில் ரீபிள் என்ற கனேடிய பேராசிரியர் இதை மேலும் விளக்குகிறார். ஐநாவால் மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து நவதாராளவாதம் அதற்கு எதிராகவே செயற்படுகிறது என்பதை இவர் விபரிக்கிறார்.

2015இல் யுஎஸ்எயிட் நிறுவனத்தின் தலைவராக முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவைரான கெயில் சிமித் என்பவரை சனாதிபதி ஒபாமா நியமித்தார். ஐ-அமெரிக்காவின் இராணுவ தேவையையும் யுஎஸ்எயிட்  நிறுவனத்தையும் இணைக்கும் முயற்சியின் அடுத்த ஒரு படியாக பலர் இந்நியமனத்தை விமர்சித்தார்கள். கெயில் சிமித்; ஆபிரிக்காவின் மோசமான ஆட்சியாளர்களுடன் நெருக்கமானவர் என்பதும் இவ்விமர்சனங்களுக்கு காரணமாக இருந்தது. நாடுகளுக்கு உதவிகள் வழங்குவதன் மூலம் அந்நாட்டில் ஐ-அமெரிக்க கொள்கைகளுக்கு வழிசெய்யலாம் என்பது இவரின் நம்பிக்கையாக இருந்தது. யுஎஸ்எயிட் நிறுவனத்தின் ஊடாக ஐ-அமெரிக்கா தனது இராணுவ தலையீடுகளையும் கிளர்ச்சி-எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது அண்மைக்காலத்தில் விரிவடைந்து வருகிறது.HISG NGO graphic (சர்வதேச) அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மையில் மக்களுக்கு உதவுகின்றனவா? -சுருதி

அரசசார்பற்ற நிறுவனங்கள் யாவுமே நன்மை செய்யவில்லை என்றும் சொல்லிவிட முடியாது. அவசரகால நிலைமகளில் அரசசார்பற்ற நிறுவனங்களே முதலில் உதவிக்கு வருகின்ற. இப்படியான அவசரகால நிலைமைகளிலும் கூட பல அரசசார்பற்ற அமைப்புக்கள் ஒரே வேலையை செய்வதால் நிதியை விரயமாக்குகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் பின்னர் எழும்பும். இருந்தாலும் ஒரு உதவியும் இல்லாமல் இருப்பதைவிடவும் இது சிறந்ததே. அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒருமுகம் கொண்ட பிரச்சாரங்களில் நிச்சயமாக வெற்றிகள் ஈட்டியிருக்கின்றன. உதாரணமாக கொத்தடிமை கலாசாரத்தை ஒழித்தல்;, நிலகண்ணிவெடி தடை போன்றவை இவை கண்ட வெற்றிகள்.

அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசியல் சார்பற்று இயங்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்கள் இயங்கும் சூழல் முற்றுமுழுதாக ஒரு அரசியல் சூழலாகவே இருப்பதால் அவர்கள் அரசியலற்று இயங்குவது சாத்தியமில்லை. ஆகையால் மக்களை ஏமாற்றாமல் தம் அரசியலையும் அவர்கள் தெளிவாகவே விளக்கினால் என்ன?

ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்ட காலத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களின் நடத்தைகள் பலவகையில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தன.

இவற்றின் உச்சக்கட்டமாக,  ஒரு இனவழிப்பு நடக்கப்போகிறது என்று தெரிந்தும் சிங்கள அரசு வெளியேறச் சொன்னவுடன் இந்த அமைப்புக்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு அன்று வெளியேறி சாட்சியமில்லாத ஒரு இனவழிப்புக்கு வழி செய்தன.z p 06 Enhanced 1 (சர்வதேச) அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மையில் மக்களுக்கு உதவுகின்றனவா? -சுருதி

இவையெல்லாம் இந்நிறுவனங்கள் யாருடைய நலனை முன்னிறுத்தி இயங்குகின்றன என்பதை தெளிவு செய்கிறதல்லவா?

இன்றும் புலம்பெயர் ஈழத்தமிழர் மத்தியில் இயங்கும் சில அரசசார்பற்ற அமைப்புக்களின் பின்னணியையும் அவை எமது மனித வளங்களை பிளவுபடுத்துகின்றவா என்பதையும் நாம் ஆராய்ந்து தெளிய வேண்டும். நாம் இவற்றுடன் இணைந்து செயற்பட்டாலும் இவற்றின் பின்னாலுள்ள சக்திகளையும் இவை எமது இலக்கிற்கு எதிரானவையா என்பதையும் ஆராய்ந்து தெளிய வேண்டியது எமது கடமை.