Home Blog Page 3023

சவேந்திர சில்வா தலைமையிலான கருத்தரங்கை புறக்கணித்த மேற்குலக இராஜதந்திரிகள்

சிறிலங்கா இராணுவத்தினரால் ஆண்டு தோறும் நடத்தப்படும் கொழும்பு பாதுகாப்பு  கருத்தரங்கு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் 29.08 ஆரம்பமானது. இக்கருத்தரங்கை அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் புறக்கணித்தனர்.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். அதைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வரவேற்புரை நிகழ்த்த, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கொட்டேகொட சிறப்புரை ஆற்றினார்.

இதைத் தொடர்ந்து கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்த நிபுணர்களும், உள்நாட்டு இராஜதந்திரிகளும் உரையாற்றினர். இக்கருத்தரங்கில் 42 நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 800 பேர் கலந்து கொண்டதாக சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்தனர்.

Army seminar 2019 1 சவேந்திர சில்வா தலைமையிலான கருத்தரங்கை புறக்கணித்த மேற்குலக இராஜதந்திரிகள்ஆனால் நேற்றைய கருத்தரங்கில் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொள்ளவில்லை.

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எதிர்த்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதனாலேயே சவேந்திர சில்வா தலைமையில் நடைபெறும் இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கில் இவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சனாதிபதி தேர்தலில் சூழலியலாளர் அஜந்தா பெரேரா;தமிழர்களின் பிரச்சனையையும் தீர்ப்பேன் என்கிறார்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச கட்சி சார்பில் சூழலியலாளர் கலாநிதி அஜந்தா பெரேரா போட்டியிடவுள்ளதாக அந்த கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அரசியலில் பெண்களின் பிரவேசம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக கடந்த காலங்களில் பெரிதும் பேசப்பட்ட பின்னணியிலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்டதன் பின்னர், இதுவரை நடைபெற்ற எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் பெண் வேட்பாளர் ஒருவர் போட்டியிடவில்லை.

1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெண் வேட்பாளராக முதல் முதலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க போட்டியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஸ்ரீமனி திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.

இந்நிலையில் 1999ஆம் ஆண்டே இறுதியாக ஜனாதிபதித் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டிருந்தார்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஸ்ரீமனி திஸாநாயக்க ஆகியோர் முழுமையான அரசியல் பின்புலத்தை கொண்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் என்ற போதிலும், கலாநிதி அஜந்தா பெரேரா நேரடி அரசியல் பின்புலத்தை கொண்டவர் கிடையாது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

யார் இந்த கலாநிதி அஜந்தா பெரேரா?

1957 ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி ஆஜந்தா பெரேரா பிறந்துள்ளார். தனது ஆரம்ப கல்வியை கொழும்பு விஸாக்கா கல்லூரியில் தொடர்ந்த அவர், தனது உயர்கல்வியை சென்னை குட்ஷெபட் கல்லூரியில் தொடர்ந்துள்ளார்.

அதன்பின்னர், இங்கிலாந்து சென்ற அஜந்தா பெரேரா, ஹரோ கல்லூரியில் தனது மேல் நிலை கல்வியை தொடர்ந்துள்ளதுடன், இங்கிலாந்தின் ஷெபில்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனிலுள்ள மியூமிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது உயர் படிப்பினை பயின்றுள்ளார்.

ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்ற அவர், மீண்டும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

தான் சூழலியலாளராக தனது தொழில்துறையை தேர்ந்தெடுத்து நாட்டின் சுற்று சூழலை பாதுகாக்கும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி அஜந்தா பெரேரா தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட காரணம்?

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய விதம் தொடர்பில்தான் இந்த நாட்டிலுள்ள பல அரசியல்வாதிகளிடம் கூறிய போதிலும், அவர்கள் அதனை பொருட்படுத்தாது செயற்பட்டமையே தான் அரசியலுக்குள் பிரவேசிக்க காரணம் என இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி அஜந்தா பெரேரா குறிப்பிடுகின்றார்.

நாட்டை முன்னோக்கிகொண்டு செல்வதற்காக தான் தனது பணத்தில் பஸ்ஸில் சென்று தேநீர் அருந்தி அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடிய போதிலும், அவர்கள் பணம் உழைக்கும் நோக்கிலேயே செயற்பட்டதாக அவர் குற்றம் சுமத்துகின்றார்.

இந்த நிலைமையை மாற்றியமைத்து, நாட்டை சிறந்ததொரு பாதைக்குகொண்டு செல்வதற்காகவே தான் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமது பொறுப்புக்களை சரிவர முன்னெடுக்காத அரசியல்வாதிகளே தன்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்ததாகவும் கலாநிதி அஜந்தா பெரேரா தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதியாக பதவியேற்கும் பட்சத்தில் தமிழர்களின் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பீர்கள்?

தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தான் உரிய வகையில் நடவடிக்கை எடுப்பதாக கலாநிதி அஜந்தா பெரேரா நம்பிக்கை வெளியிடுகின்றார்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்காக தீர்வை தமிழர்களிடமிருந்தே பெற்று, அதற்கான தீர்வுத்திட்டத்தை தான் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலிருந்து வடக்கில் எவ்வாறான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்க முடியாது என கூறிய அவர், அதற்கான பொறுப்பை அந்த மக்களிடமே வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கில் அபிவிருத்தி திட்டமொன்று முன்னெடுக்க வேண்டுமாயின், அந்த மக்களின் தேவையை அறிந்தே அந்த திட்டம் தமது ஆட்சியில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான தலைவர்களை தமிழர்கள் மிக நீண்டகாலமாக தேடிய போதிலும், அவர்களுக்கு அந்த தலைமைத்துவம் கிடைக்கவில்லை என கூறிய அவர், தமிழர்களுக்கான தலைமைத்துவத்தை வழங்க தான் தயாராகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்திய வம்சாவளி தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்து, அவர்களை அடிப்படை தேவைகள் மற்றும் அவர்களின் நாளாந்த சம்பள பிரச்சினை ஆகியவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கலாநிதி அஜந்தா பெரேரா தெரிவிக்கின்றார்.

 

வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக்கு ஐ.நா உதவும் – கனா சிங்கர்

வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்வதுடன், அதற்கான நீதியையும் வழங்க வேண்டும் அதுவே எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்கள் நிகழாது தடுக்கும் என சிறீலங்காவுக்கான ஐ.நா இணைப்பு அதிகாரி கனா சிங்கர் நேற்று (30) வெளியிட்டுள்ள தனது அறிக்கையின் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக வலிந்து காணாமல்போனவர்கள் நாளான நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பலவந்தமாக காணாமல் போவோர் தொடர்பில் சிறீலங்கா அரசு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பல தேசிய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டதும், ஐ.நா அறிக்கையும் அதற்கான ஆதாரங்கள்.

2010 ஆம் ஆண்டே ஐ.நா வலிந்து காணாமல்போனோர் தினத்தை அறிவித்தது. வலிந்து காணாமலாக்கப்படுவது மிகப்பெரும் குற்றமாகும். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களை தேடுவோருக்கும் தனது ஆதரவை தெரிவிப்பதற்காகவே ஐ.நா இந்த நாளை அறிமுகம் செய்தது.

ஆனால் சிறீலங்காவில் தற்போதும் பெருமளவான மக்கள் தமது உறவுகளையும், அதற்கான நீதியையும் தேடி வருகின்றனர்.

எனவே சிறீலங்கா அரசு அனைத்துலக நீதியை மதித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு அது முழுமையாக செயற்பட வேண்டும்.

சிறீலங்கா அரசு வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதுடன், அதற்கான நீதியையும் வழங்க வேண்டும் அதுவே எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்கள் நிகழாது தடுக்கும். அதற்கான உதவிகளை ஐ.நா வழங்கத் தயாராக உள்ளது என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை  ரத்து செய்­யப்­பட்டு அனைத்து அரச நிர்­வா­கமும் ஒரே நிர்­வாக கட்­ட­மைப்பின் கீழ் கொண்டுவரப்படும் – சனாதிபதி வேட்பாளர்

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­படும், மாகாண சபை  முறைமை முழு­மை­யாக ரத்து செய்­யப்­பட்டு அனைத்து அரச நிர்­வா­கமும் ஒரு நிர்­வாக கட்­ட­மைப்பின் கீழ் கொண்டு வரும் திட்­டங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ளன, மைத்­திரி, ரணில், மஹிந்த ஆகியோர் பய­னற்ற அர­சியல் கட்­ட­மைப்­பையே முன்­னெ­டுத்து செல்­வார்கள். ஆகவே இத்­த­ரப்­பி­னர்­களை நாட்டு மக்கள் புறக்­க­ணிக்க  வேண்டும் என ஜனா­தி­பதி  சட்­டத்­த­ரணி நாகா­னந்த கொடித்­து­வக்கு தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி தேர்­தலில்  ஒன்­றி­ணைந்த அர­சியல் கட்­சி­களின் ஊடாக சுயா­தீ­னமாக  போட்­டி­யிட தீர்­மா­னித்­துள்­ள­மை­யி­னையும். ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்­வைக்கும் கொள்­கைத்­திட்­டங்­களை தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­கு­மான  ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று  நிப்பொன் ஹோட்­டலில் இடம் பெற்­றது. அதன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு  மேலும் குறிப்­பி­டு­கையில்,

இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­களும் முறை­கே­டாக அர­சியல் நிர்­வா­கத்­தையே கொண்­டுள்­ளது.   ஜனா­தி­பதி தேர்­த­லையும் முறை­யற்ற விதத்­திலே வெற்றி கொள்ள முனை­கின்­றார்கள்.இவ்­விரு கட்­சி­களும்  மக்­களால் புறக்­க­ணிக்­கப்­பட வேண்டும்.

71 வருட கால பழைமை வாய்ந்த அர­சி யல் கட்­ட­மைப்பு முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும். மக்­களின் வரிப்­ப­ணத்தை வீண­டிக்கும் அரச செயன்­மு­றை­களே அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. நீதிக்­கட்­ட­மைப்பு அர­சியல் தலை­யீ­டுகள் இன்றி சுயா­தீ­ன­மாக செயற்­பட்டால் மாத்­தி­ரமே நாடு அனைத்து துறை­க­ளிலும் முன்­னேற்­ற­ம­டையும்.

மக்­க­ளா­ணை­யினை மதிக்கும் கொள்­கைத்­திட்­டங்­களே எம்மால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.  நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­படும், மாகாண சபை  முறைமை முழு­மை­யாக ரத்து செய்­யப்­பட்டு அனைத்து அரச நிர்­வா­கமும் ஒரு நிர்­வாக கட்­ட­மைப்பின் கீழ் கொண்டு வரும் திட்­டங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ளன.

எமது நாட்டின் உள்­ளக விவ­கா­ரங்­களில் சர்­வதேச அமைப்­புக்கள் தலை­யீடு காணப்­ப­டு­கின்­றது. இதற்கு அர­சாங்­கமும், நடை­மு­றையில் உள்ள சட்­டங்­க­ளுமே வழி­மு­றை­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளன. ஆகவே  சட்­டத்தின் வாயி­லா­கவே அனைத்தும் இடம் பெறு­வ­தால்­நீ­தித்­துறை கட்­ட­மைப்பு முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­படும்.

முறை­யற்ற அர­சியல் நிர்­வாக கட்டமைப் புக்களுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற  ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் முயற்சிக்கின்றார்கள். இவர்கள் மூவரும்  அரசியலில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள். நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் இம்முறை சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

கூட்டமைப்புடனான சந்திப்பின்போது மைத்திரி அநாகரிகமாக நடந்து கொண்டார் – சாந்தி

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அநாகரிகமாக நடந்துகொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையில் நடைபெற சந்திப்பின் போதே இவ்வாறு இடம்பெற்றதாக அவர்
கூறினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக முல்லைத்தீவில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் பேசிய சாந்தி சிறிஸ்கந்தராஜா;

“காணி விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அழைத்ததற்கமைய பெரும் எதிர்பார்ப்புடன் அவரை சந்திக்க சென்றோம்.

எனினும் அவர் எங்களை ஏமாற்றிவிட்டதோடு, அநாகரிகமான முறையிலும் நடந்துகொண்டார். அவர் எங்களிடம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விபரங்களை தருமாறு கோரினார்.

நாங்கள் எத்தனை தடவைகள் இந்த விடயங்களை அவருக்கு எழுத்துமூலம் வழங்கியுள்ளோம். இன்னும் ஒரு அரச தலைவருக்கு இந்த விடயங்கள் தெரியவில்லையென்பது எங்களை ஏமாற்றும் செயற்பாடே ஆகும்” என தெரிவித்தார்.

FBI முறையான அனுமதியுடனேயே இலங்கைக்கு வந்தது

அமெரிக்காவின் எவ்.பி.ஐ உள்ளிட்ட ஏனைய புலனாய்வு நிறுவனங்கள் முறையான அனுமதியுடனேயே இலங்கைக்கு   வருகை தந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் இலங்கைக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

விசாரணைகளின் போது தடய மாதிரிகளை அவர்கள் பெற்றிருந்தால் அது சட்டரீதியான முறைகளுக்கு அமைவாகவே பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகவே தடய மாதிரிகள் எவ்பிஐ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. இதனால், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு எந்த தடையும் ஏற்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர மேலும் கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லை கிராம மக்களின் நிலை

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளைப் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை காண சென்ற ஒரு ஊடகவியலாளர் தனது கருத்தை விபரிக்கின்றார். இந்தியா – பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகிலுள்ள பாகிஸ்தான் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள சகோத்தி பகுதி மக்களிடம் அவர் உரையாடியுள்ளார்.

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்திலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் சகோத்தி பகுதி உள்ளது. இப்பகுதி இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே தற்போது நடந்து வரும் மோதல் மற்றும் பதற்றம் காரணமாக இப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியாக பல சிரமங்களை சந்தித்து வந்தாலும், இப்பகுதியில் பணியில் உள்ள அதிகளவான இராணுவத்தினால் தங்களின் கவலைகளைக்கூட மெல்லிய குரலிலேயே பேச முடிகின்றது.

தாங்கள் நாட்டிற்காக உயிரைவிடவும் தயாராக இருப்பதாகவும், தற்போது அமைதியான சூழலில் தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் கூறினார்கள்.

இந்தப் பகுதி பற்றி பொது மகன் ஒருவர் பேசும் போது, தான் ராவல்பிண்டி என்னும் இடத்தில் வசித்து வந்ததாகவும், தற்போது சகோத்தி பகுதியில் வந்து குடியேறியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த நகரில் 5 கிலோமீற்றர் சுற்றளவில் தான் பாதுகாப்பாக வாழ முடியும் என்றும், அதற்கு அதிகளவில் செலவாகும் என்பதும்  குறிப்பிடக்கூடிய விடயமாகும் என்றார்.

Indi Park Village இந்தியா – பாகிஸ்தான் எல்லை கிராம மக்களின் நிலைஇன்னொருவர் பேசும் போது, இது எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதால், எந்த துன்பம் வந்தாலும் இந்தப் பகுதியை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் எப்படியோ எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்து தான் ஆகவேண்டும் என்றும் கூறினார்.

சகோத்திக்கு வரும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகிலுள்ள கிராமங்களில் இரு்து பெருமளவில் மக்கள் வெளியேற இந்தியாவே காரணம் என்று கூறினார்.

பாகிஸ்தான் தங்களின் மக்களை எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு மிக அருகில் இருந்து ஏன் இடம்மாற்றம் செய்ய முயற்சிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர் பதில் எதுவும் அளிக்கவில்லை. மேலும் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே வாழும் மக்கள் தொடர்பாக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளைப் போல பாகிஸ்தானும் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்று கேட்டதற்கு இல்லை என அந்த அதிகாரி பதிலளித்தார்.

மற்றுமோர் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், இங்கிருந்து மக்கள் வெகு தூரம் செல்ல வேண்டாம். எங்களால் அவர்களை பாதுகாக்க முடிகிற வரையில் நாங்கள் அவர்களை இங்கு வாழ அனுமதிப்போம். தங்கள் நாட்டை மிகவும் நேசிக்கும் மக்கள் வேறு இடத்திற்குச் செல்ல மாட்டார்கள் என தெரிவித்தார்.

இந்த எல்லைக்கோட்டுக்கு அருகில் வாழ்வது மிகவும் எளிதான விடயம் அல்ல. 2015முதல் எல்லை தாண்டிய மோதல்களால் ஏறக்குறைய 70பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அதிலும் இந்த ஆண்டு மட்டும் 27பேர் இறந்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்னர் இந்தப் பகுதியில் 45 வயதான ஒருவரும், 3 வயது சிறுமியும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இறந்துள்ளனர்.

இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரில் மனித உரிமை மீறல்களை முடிவிற்குக் கொண்டுவர வேண்டுமென சர்வதேச சமூகத்தையும், இஸ்லாமிய நாடுகளையும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஆனால் பெரும்பாலான நாடுகள் காஷ்மீர் இருதரப்பு பிரச்சினை என்றும், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இதனை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றன.

இந்தியாவுடனான போர் அபாயம் குறித்து மக்கள் பேசும் போது, நாட்டிற்காக தாங்கள் சாகவும் தயாராக உள்ளதாகவும், யுத்தத்தின் மூலம் இளைய சமுதாயத்தினர் உயிரிழப்பதை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஒரு முதியவர் கூறினார். இறந்த சடலங்களை இனியும் எங்களால் காண முடியாது என்றும், எல்லைக்கு அப்பாலுள்ள மக்களும் தங்களைப் போன்றவர்களே அவர்களுக்கு நாங்கள் கெடுதல் நினைக்க மாட்டோம் என்றும் கூறினார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு கல்லடி பாலத்தினை மறித்து தாக்குதல் நடாத்தியது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி சீயோன் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான காத்தான்குடியை சேர்ந்த பயங்கரவாதி முகமட் ஆஷாத்தின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில்
போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அன்றைய இரவு கல்லடி பாலம்
மறிக்கப்பட்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கல்லடி பாலத்தினை மறித்து போராட்டம் நடாத்தியவர்களை பொலிஸார் கண்ணீர்குண்டு தாக்குதல் மற்றும் குண்டாந்தடி தாக்குதல் நடாத்தி கலைத்திருந்த நிலையில்
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான செல்வி மனோகர்,சுஜீகலா உட்பட ஐந்து பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது,அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியது,போக்குவரத்தினை தடைசெய்தது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இதன்போது குறித்த உடற்பாகங்கள் பொதுமக்களின் எதிர்ப்பினையும் மீறி புதைக்கப்பட்டது தொடர்பில் அரசாங்க அதிபருக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

விசாரணைகளை தொடர்ந்து ஐந்து பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பேசுவதனால் அமெரிக்கா தனது பொருண்மிய பயங்கரவாதச் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும்- ஈரான்

அமெ­ரிக்கா ஈரா­னுடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான சந்­திப்பை மேற்­கொள்ள விரும்­பினால்  2015ஆம் ஆண்டு செய்­து­கொள்­ளப்­பட்ட அணு­சக்தி உடன்­ப­டிக்­கையைப் பேணி  ஈரா­னிய மக்­க­ளுக்கு எதி­ரான பொருண்மிய பயங்கரவாதச் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­வதை நிறுத்த வேண்டும் என  ஈரா­னிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரீப் நேற்று  வியா­ழக்­கி­ழமை வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

மலே­சிய கோலா­லம்பூர் நக­ருக்கு விஜயம் செய்­துள்ள அவர் அங்­கி­ருந்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு விளக்கம் அளிக்­கை­யி­லேயே இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்  ஈரானின் அணு­சக்தி நட­வ­டிக்­கைக்கு கடி­வா­ள­மிடும் வகையில் செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து  தனது நாட்டை கடந்த வருடம் வாபஸ் பெற்­றது முதற்­கொண்டு  இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான பதற்­ற­நிலை அதி­க­ரித்­துள்­ளது.

அமெ­ரிக்கா அந்த உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து விலகி  ஈரா­னுக்கு எதி­ரான தடை­களை மீள நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­மைக்கு பதி­லடி கொடுக்கும் முக­மாக   ஈரான் அந்த உடன்­ப­டிக்­கையின் கீழான உறு­திப்­பா­டு­க­ளி­லி­ருந்து படிப்­ப­டி­யாக விலகும் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.

மேற்­படி தடைகள் தொடர்­பான நிவா­ரணம் அளிக்­கப்­ப­டா­விட்டால்  அந்த அணு­சக்தி உடன்­ப­டிக்கை தொடர்­பான மேலும் பல மீறல்கள்  எதிர்­வரும் செப்­டெம்பர் மாத ஆரம்­பத்தில் முன்­னெ­டுக்­கப்­படும் என ஈரான் அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ளது.

அமெ­ரிக்கா ஈரா­னிய மக்­க­ளுக்கு எதி­ரான பொரு­ளா­தார போரொன்றில் ஈடு­பட்­டுள்­ளது.  அமெ­ரிக்கா  ஈரா­னிய மக்­க­ளுக்கு எதி­ராக  பொரு­ளா­தார தீவி­ர­வா­தத்தில் ஈடு­பட்டு தடை­களை விதிக்கும் போரோன்றை முன்­னெ­டுத்­துள்­ளதை நிறுத்­தா­த­வரை எமக்கு அமெ­ரிக்­கா­வுடன் சந்­திப்பை மேற்­கொள்­வது சாத்­தி­ய­மில்லை”  என ஜாவத் ஸரீப்  தெரி­வித்தார்.

அவர்  கோலாலம்­பூரில் இடம்­பெற்ற இஸ்­லா­மிய உல­கி­லான பாது­காப்பு குறித்து நடை­பெற்ற கூட்­டத்தில்  கலந்து கொண்டு உரை­யாற்­றிய பின்­னரே ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான இந்த சந்­திப்பை மேற்­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆகையால் அவர்கள் (அமெ­ரிக்­கர்கள்) பேச்­சு­வார்த்தை இடம்­பெறும் அறைக்குத் திரும்ப வேண்­டு­மானால்  அவர்கள் ஒரு அனு­ம­திச்­சீட்டை கொள்­வ­னவு செய்ய வேண்­டி­யுள்­ளது. அந்த அனு­ம­திச் சீட்டு   அந்த உடன்­ப­டிக்­கையை (2015ஆம் ஆண்டு  அணு­சக்தி உடன்­ப­டிக்­கையை) பேணு­வ­தாகும்” என அவர் தெரிவித்தார்.

நாம் சந்திக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சந்திப்பை மேற்கொள்ள விரும்பவில்லை.  எமக்கு சந்திப்பை மேற்கொள்ள அது தொடர்பில் ஒரு பெறுபேறு தேவையாகவுள்ளது” என அவர் கூறினார்.

ஜாவத் ஜரீப் நேற்று மாலை மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட்டுடன் சந்திப்பை மேற்கொண்டார்.

பிரித்தானிய பாரா­ளு­மன்­றம் இடை­நி­றுத்தம் – வலுவாகும் எதிர்ப்புகள்

பிரித்­தா­னிய பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்தம் செய்­வ­தற்கு  எடுத்த தீர்­மானம்  குறித்து  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும்  பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்­கை­யின்றி வில­கு­வ­தற்கு எதிர்ப்பைக் கொண்­ட­வர்கள் ஆகியோர் கடும் சினத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அத்­துடன் பிர­த­மரின் இந்­ந­ட­வ­டிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து நாட­ளா­விய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும் பிர­த­மரின் பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்­து­வ­தற்­கான  திட்­டத்­திற்கு எதி­ராக சட்ட ரீ­தி­யான  சவால் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­துடன்  ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் கையொப்­ப­மிட்டு முறைப்­பா­டொன்றை தாக்கல் செய்­துள்­ளனர்.

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதத்­தி­லி­ருந்து  ஒக்­டோபர் மாதம் வரை­யான 5 வாரங்­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்தம் செய்­வது  பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வது சம்­பந்­த­மான பிறிக்ஸிட் செயற்­கி­ரமம் தொடர்பில்  விவா­தத்தை  நடத்­து­வ­தற்­கான நேரத்தை அனு­ம­திப்­ப­தாக உள்­ள­தாக  அர­சாங்கம் கூறு­கி­றது.

இந்த நட­வ­டிக்கை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்கை எது­வு­மின்றி வில­கு­வ­தற்கு முட்­டுக்­கட்டை போடு­வதை தடுத்து நிறுத்­த ஜன­நா­ய­கத்­திற்குப் புறம்­பாக முன்னெடுக்கப்பட்ட முயற்­சி­யென அதன் எதிர்ப்­பா­ளர்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்தம் செய்யும் மேற்­படி திட்­டத்­திற்கு எலி­ஸபெத் மகா­ரா­ணியார்  நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை அனு­ம­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும்  இது நிச்­ச­ய­மாக பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்­கை­யின்றி வெளியே­று­வ­தற்­கான எதிர்ப்­பிற்கு தடை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு அர­சியல் நகர்­வல்ல  எனவும் அமைச்சர் மைக்கேல் கொவ் தெரி­வித்தார்.

பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட தின­மான ஒக்­டோபர் 31ஆம் திக­திக்கு பெரு­ம­ளவு நேரம் உள்­ள­தாக அவர் கூறினார்.

பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை தெரி­விக்­கையில், பாரா­ளு­மன்றம் இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­ட­தற்கு பின்னர் எதிர்­வரும் ஒக்­டோபர் 14ஆம் திகதி மகா­ரா­ணி­யாரின்  உரை இடம்­பெ­ற­வுள்­ள­தாக குறிப்­பி­ட்டார்.

”இந்த நாட்டை முன்­னோக்கி கொண்டு செல்­வ­தற்­கான  திட்­டங்­களை முன்­னெ­டுக்க பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கி­ய­தற்கு பிற்­பாடு  வரை காத்­தி­ருக்க தான் விரும்­ப­வில்லை” என போரிஸ் ஜோன்ஸன் கூறினார்.

மகா­ரா­ணி­யா­ரு­ட­னான சந்­திப்பின் போது பங்­கேற்ற பாரா­ளு­மன்றத் தலைவர் ஜாகொப் றீஸ் மொக் கூறு­கையில், இந்தப் பாரா­ளு­மன்­றத்தின் கூட்டத் தொட­ரா­னது  கடந்த 400 வருட காலத்­தி­லேயே மிகவும் நீண்ட கூட்­டத்­தொடர் ஒன்­றாக விளங்­கு­வதால்  அதனை இடை­நி­றுத்தி புதிய கூட்­டத்­தொடர் ஒன்றை ஆரம்­பிக்க உரிமை உள்­ளது என்று  தெரி­வித்தார்.