Home Blog Page 2689

போர்க்குற்றவாளியை பாதுகாத்து வருபவருக்கு இன்ரபோல் பதக்கம் வழங்கியது

உலகின் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐ.நா ஆகியவற்றால் போர்க்குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டவரை சிறீலங்கா இராணுவத்தளபதியாக நியமித்த சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவருக்கு உலக பாதுகாப்பு புலனாய்வு நிறுவனமான இன்ரபோல் பதக்கம் வழங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா வந்துள்ள இன்ரபோல் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஜேர்கன் ஸ்ரொக் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறீசேனாவுக்கு பதக்கம் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறப்பாக செயற்பட்டதற்காக இது வழக்கப்பட்டுள்ளது.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறீலங்கா அரசு முஸ்லீம் மக்களுக்கு எதிராக கலவரங்களை ஊக்குவித்திருந்ததுடன், தமிழ் மக்களுக்கு எதிராக பாதுகாப்பு வன்முறைகளையும் அதிகரித்திருந்தது.

இதனிடையே, தமக்கு சிறப்பான வரவேற்றை சிறீலங்கா அரசு வழங்கியுள்ளதாகவும், முன்கூட்டியே தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் குழுவில் சிறீலங்கா இணைந்துகொள்ள வேண்டும் எனவும் ஸ்ரோக் தெரிவித்துள்ளார்.

தமது நிகழ்ச்சி நிரலில் பயங்கரவாதமே முதன்மையாக உள்ளதாகவும், தமது உறுப்பு நாடுகள் 17 தகவல் கோப்புக்களைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ள ஸ்ரோக், அதில் 50,000 பயங்கரவாதிகளின் தகவல்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் தொடர்பாக சீனா,பாகிஸ்தான் படைத்தளபதிகள் பேச்சு

காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து சீன ராணுவ ஆணைய துணைத் தலைவருடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆலோசனை நடத்தியுள்ளார்.

சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் சூ கிலியாங் தலைமையிலான உயர்மட்டக் குழு, பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சீன குழு நேற்று பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்திற்கு சென்றதுடன், அங்கு சூ கிலியாங்கும், பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் ஜாவேத் பஜ்வாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுகள், பிராந்திய பாதுகாப்பு, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் காஷ்மீரின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட தருணத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, சீனாவுக்கு சென்று இந்த விவகாரம் குறித்து முக்கிய தலைவர்களுடன் விவாதித்தார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்கப்பட்ட போது பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்தது. ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிலிருந்து விலக்கிக் கொண்டன.அது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான விவகாரம் எனவும், அதில் மற்ற நாடுகள் தலையிட கூடாது என அந்த நாடுகள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு; இதுவே எனது தீர்வு – சஜித்

ஒற்றையாட்சி முறைக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

‘ஒற்றை ஆட்சி’ என்பதில் மெய்யான அதிகாரப்பகிர்விற்கு இடமில்லை என தமிழ் மக்கள் உறுதியாக நம்முகின்ற நிலையில் ஐதே வின் முக்கிய பிரமுகரான சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்திருப்பது பேரினவாத கட்சிக்ள் அனைத்தின் கொள்கைகளும் ஒன்றே என்பதை காட்டுவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அங்கு தொடர்ந்து பேசிய சஜித் பிரேமதாச,

ஒற்றையாட்சி என்பது வெறுமனே எழுத்துக்களில் மாத்திரம் இருக்கக் கூடாது. நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பிரிக்கப்படாத ஒற்றையாட்சியுடைய நாட்டில் வாழ்கின்றோம் என்ற உணர்வு  ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“புதிய இலங்கைக்கு நவீன ஊடகம்” என்ற தலைப்பில் கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு, அங்கு எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதில் வழங்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் தனது நிலைப்பாடு வெளிப்படையானது எனக் குறிப்பிட்ட அவர், ஒற்றையாட்சி முறைக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் கூறினார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் இதுவே தமது நிலைப்பாடாக இருந்தது. இந்நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கின்றேன் என்றார்.

சில அரசியலமைப்புக்களில் ஒற்றையாட்சிமுறை காணப்படுகிறது, சிலவற்றில் சமஷ்டிமுறை காணப்படுகிறது. ஒற்றையாட்சியுடைய இலங்கை பற்றிப் பேசும்போது அது வெறுமனே அரசியலமைப்பு மற்றும் ஆவணங்களினால் மாத்திரமான தகுதியாக அமையக்கூடாது. சகல மதங்கள் மற்றும் சகல இனங்களையும் சேர்ந்த இலங்கையர்கள் அனைவரும் ஒற்றையாட்சியின் குணாதிசயங்களை உணர்வதாக இருக்க வேண்டும். சகலருடைய மனங்களையும் வெல்லக் கூடிய வகையில் ஒற்றையாட்சியை அமைப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இதனை அடைவதற்கு இனவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும். பாகுபாடுகளுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். சிறுபான்மை பெரும்பான்மை என்ற சொற்பதங்களைப் பயன்படுத்த நான் விரும்பவில்லை. நாட்டிலுள்ள ஏதாவது ஒரு தரப்பினர் தாம் தீங்கிழைக்கப்பட்டதாக உணர்ந்தால், அவர்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும். மனிதநேய கொள்கைகளின் அடிப்படையில் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதன் ஊடாகவே அனைவரும் ஒற்றையாட்சியான நாட்டில் வாழ்கின்றோம் என்ற மனநிலையை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

பளையில் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணைகள்

பளை பகுதியில்  மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது .

குறித்த அயுதங்கள் எங்கிருந்து எவ்வாறு கொண்டுவரப்பட்டன, அவற்றை மறைத்து வைத்ததன் நோக்கம், அதற்கு உதவியவர்கள் தொடர்பில்  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் தடுப்பில், யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் பளை சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனின் வாக்கு மூலத்துக்கு அமைய  இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு கூறுகிறது.

T 56 வகைத் துப்பாக்கி ஒன்று,  அந்த துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் இரு மெகசின்கள், அத்துப்பககிக்கு பயன்படுத்தப்படும் 120 தோட்டாக்கள், 11 கைக்குண்டுகள்,  பீ.ஈ.10 ரக வெடிபொருள் என சந்தேகிக்கபப்டும் வெடிபொருள் 10 கிலோ, தொலைநோக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இவ்வாறு மீட்கப்பட்டதாக படையினர் கூறுகின்றனர்

இதவேளை முக்கியஸ்தர்கள் மூவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், புலிகள் அமைப்பை மீள ஏற்படுத்த இரகசிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படும் இரு விடயங்கள் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் தீவிர விசாரணைகள் தற்போதும் இடம்பெற்றுவருவதாக அறிய முடிகிறது.

எனினும் இந்த கைதுகளும் குற்றச்சாட்டுகளும் உள்நோக்கம் உள்நோக்கம் கொண்டவை என பரவலாக நம்மைப்படுவது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் படையினர் மக்கள் மீது தாக்குதல் பெண்கள் உட்பட பலர் காயம்.

கடந்த 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய முகமது ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது

இதனையடுத்து இவ் உடற்பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் நேற்றுமுன்தினம் இரவு பொலிசார் இரகசியமாக புதைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலை பொதுமக்களுக்கு தெரியவந்ததையடுத்து பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயானத்துகுமுன் உள்ள வீதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்காரர்கள் மட்டக்களப்பு  கல்லடி பாலத்தின் நடுப்பகுதியில் வீதியை மறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்  இளைஞர்கள் பெண்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வீதியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

மாலை 6 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் இரவு 9 மணிவரை நீடித்த நிலையில் மட்டக்களப்பு கொழும்பு மற்றும் கல்முனை அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கான போக்குலரத்து முற்றகத் துண்டிக்கப்பட்டது இததனால் மட்டு கல்முனை வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது

இதனை தொடர்ந்து பொலிசார் கலகமடக்கும் பொலிசார் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆர்பாட்டகாரருடன் பொலிசார் பேச்சுநாத்தியபோது ஆர்பாட்டகாரர்கள் அரசாங்க அதிபர் வந்து புதைக்கப்பட்ட உடற்பாகங்களை தோண்டி எடுப்பதாக உத்தரவாதம் தரும் வரை வீதியை விட்டு விலகமாட்டோம் கோரிக்கை விடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன்ர்

இரவு 9.00 மணிக்கு பொலிசார் ஆர்பாட்டகாரர் மீது கண்ணீர்புகை குண்டு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்து தரத்தியடித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் இத் தாக்குதலின் போது பலர் காயமடைந்ததுடன் இரு பெண்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு நகரில் பதற்றம் ஏற்பட்டதுடன் கடைகள் யாவும் மூடப்பட்டு வீதி வெறிச்சேடியதுடன் அப்பகுதில் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்

இதேவேளை கறித்த உடற்பாகங்களை பொது மயானத்தில் அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதனை கடந்த ஜூன் 11 ஆம் திகதி மட்டக்களப்பு புதூர் ஆலையடி மயானத்தில் புதைக்க பொலிசார் முற்பட்டபோது பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தததையடுத்து அங்கு புதைப்பது கைவிடப்பட்டது

போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம்

900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம்.

திகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 18 மணிக்கு
இடம் : Breitscheidtplatz
             Zoo – Berlin

பேர்லின் வாழ்  தமிழ் உறவுகளும்  இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க ஒன்றிணையுமாறு வேண்டுகின்றோம்.

உலகின் இரண்டாவது நுரையீரல் என அழைக்கப்படும் காடும் தீப்பற்றியுள்ளது

உலகின் மிகப்பெரிய காடான அமேசன் காடு தீப்பற்றி எரியும் இவ்வேளையில், உலகின் இரண்டாவது பெரிய காடு என அழைக்கப்படும் ஆபிரிக்கக் காடுகளும் (Sub-Saharan Africa) எரிய ஆரம்பித்துள்ளன. உலகின் இரண்டாவது நுரையீரல் என இந்த மழைக்காடுகள் அழைக்கப்படுகின்றன.

கொங்கோ, கெமரூன், அங்கோலா ஆகிய நாடுகளினூடாகப் பரவியிருக்கும் இந்தக் காடுகளினூடே தீயும் வெகு விரைவாகப் பரவி விட்டது. ஒரு மில்லியன் சதுர மைல்களுக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட இந்தக் காடுகள் அமேசன் காடுகளைப் போலவே கார்பன் டை ஒக்சைட்டை (கரியமலை வாயு) உள்ளெடுத்து ஒட்சிசன் (பிராணவாயு) வாயுவை அதிகளவில் வெளிவிடுகின்றது.

Africa fire 2 உலகின் இரண்டாவது நுரையீரல் என அழைக்கப்படும் காடும் தீப்பற்றியுள்ளது3.3 மில்லியன் சதுர கிலோமீற்றர் சதுர பரப்பளவுள்ள இந்தக் காடுகளில் மிகப் பெரியளவில் தீப்பற்றியுள்ளது. காட்டுத்தீ தொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவினால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள்

அமெரிக்க அதிபர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்று வாக்குறுதி அளித்தார். அதேபோல அமெரிக்காவில் விற்கும் பொருட்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். அப்போது தான் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்கும், பொருளாதாரம் பெருகும் என்று நினைத்தார்.

ஆனால் சீனாவோ இதையிட்டு கவலை கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த டிரம்ப், 200 பில்லியன் டொலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீதான வரியை உயர்த்தினார். இதற்கு சீனாவும் ஈடுகொடுத்து நடந்து கொண்டது.

இரு நாடுகளுக்கிடையான வர்த்தகப் போரில் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டது.

அமெரிக்கா அளித்து வந்த சிறப்பு வர்த்தக சலுகையை டிரம்ப் அண்மையில் நிறுத்தினார்.

அமெரிக்க அதிபர் அணுகுண்டு சோதனை நடத்துவதாக கூறி ஈரானுக்கு எதிராக எடுத்த பொருளாதார தடை நடவடிக்கையும் உலகைப் பாதித்துள்ளது.

 

சிறீலங்காவில் நீதியை நிலைநாட்ட அனைத்துலக சமூகம் வேறு வழிகளைத் தேடவேண்டி வரும் – ஐ.நா மனித உரிமைகள் நிபுணர் குழு எச்சரிக்கை

போர்க்குற்றவாளி என அடையாளம் காணப்பட்டவரை இராணுவத் தளபதியாக சிறீலங்கா அரசு நியமித்தது சிறீலங்கா அரசு மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை சிதைப்பதுடன், நாட்டின் உறுதித்தன்மைக்கும் ஆபத்தானது. நீதி விசாரணைகளை மேற்கொள்ள சிறீலங்கா அரசு தவறினால் அனைத்துலக சமூகம் அதனை நிலைநாட்ட வேறு வழிகளைத் தேடவேண்டி வரும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று (27) வெளியிட்டுள்ள அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் மிகவும் கவலையை தோற்றுவித்துள்ளது. சிறீலங்கா அரசு முன்னைய குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்ட ஒருவரை இராணுவ அதிகாரியாக சிறீலங்கா அரச தலைவர் நியமித்துள்ளது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உட்பட பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புக்களைத் தோற்றுவித்துள்ளது.

இந்த நியமனமானது பல தரப்பட்ட சமூகத்தினரிடம் தவறான தகவல்களை கொண்டு செல்லும் என்பதுடன் மக்கள் அரசு மீது நம்பிகையை இழப்பார்கள். மேலும் இது சிறீலங்காவின் உறுதித்தன்மையையும் சீர்குலைக்கும்.

போரின் போது 58 ஆவது படையணியை வழிநடத்திய சில்வா பெருமளவான மனித உரிமை மீறலகளை மேற்கொண்டிருந்தார். எனவே அவரை 2012 ஆம் ஆண்டு ஐ.நாவின் அமைதிப் படைக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவில் இருந்து ஐ.நா நீக்கியிருந்தது. ஆனால் அவர் மீதான குற்றங்கள் இன்றுவரை விசாரணை செய்யப்படவில்லை.

ஐ.நாவின் தீர்மானம் 30-1 இல் கூறப்பட்டதை சிறீலங்கா அரசு ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை. படையினர் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பில் எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை. எனவே இது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.

சிறீலங்கா அரசின் இந்த செயற்பாட்டை 2017 ஆம் ஆண்டு சிறீலங்காவக்கு பயணம் மேற்கொண்ட உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

நீதி விசாரணைகளை மேற்கொள்ள சிறீலங்கா அரசு தவறினால் அனைத்துலக சமூகம் அதனை நிலைநாட்ட வேறு வழிகளைத் தேடவேண்டி வரும். அதற்குத் தேவையான அனைத்துலக நீதி விசாரணைகளை நாம் நாடவேண்டி வரும்.

மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவரை உயர் பதவியில் அமர்த்தும்போது அங்கு மேலும் மனித உரிமை மீறல்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. எனவே சிறீலங்கா அரசு போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடாபில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அது படைத்தரப்பாக இருந்தாலும் இடம்பெறவேண்டும். அதன் மூலம் தான் சிறீலங்கா படையினரை மறுசீரமைக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்ட புத்தகத் திருவிழா

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் விருப்பத்தின் பேரில் இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் புத்தகத் திருவிழா 2019 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் ஆயர், வடக்கு மாகாண அரச அதிகாரிகள், புத்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள், இராணுவ அதிகாரிகள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வை மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். யாழில் முதன்முதலாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இக்கண்காட்சி எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

book2 யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்ட புத்தகத் திருவிழாஇக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர் கதைகள், வழிகாட்டி நூல்கள், ஈழத்துப் படைப்புக்கள் உட்பட உள்ளுர் மற்றும் இந்தியப் புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவை 30 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் உரையாற்றிய மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட், புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைப்பது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது என்றும், இவ்வாறான நிகழ்வுகள் எமது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் குறிப்பிட்டார்.