Home Blog Page 2436

வியாளேந்திரனின் சாகா மீது ,பிள்ளையான் குழு தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் குழுவின் பிரதேச உறுப்பினரின் தாக்குதலில் மற்றுமொரு மாநகர சபை உறுப்பினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை மட்டக்களப்பு புதுநகர் பகுதியில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிள்ளையான் குழுவின் பிரதேச சபை உறுப்பினரான குமார் என்பவர் மாநகர சபை உறுப்பினர் அசோக்கின் மீது தாக்குதல் நடத்திய தாககூறப்படுகிறது.கூட்டமைப்பின் புளட் அமைப்பின் மாநகர சபை உறுப்பினரான இவர் கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனின் நெருங்கிய சகாவாவார். தாக்குதலுக்குள்ளான அசோக் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தாக்குதலில் ஈடுபட்ட தாக கூறப்படும் பிள்ளையான் கட்சி உறுப்பினரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிகிறது.

பிள்ளையான் குழுவின் அட்டகாசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாகவும் அரசியல் போட்டி காரணமாக தமது உறுப்பினர் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக வியாழேந்திரன் சார்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கலாம் என தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

‘இலங்கையின் வடக்கு தமிழரின் மரபுவழி தாயகம்,அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்’-தமதேகூ

தமிழ் மக்கள் கூட்டணி,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்தேசியக்கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலானபுரிந்துணர்வு உடன்படிக்கை

 

1. இணக்கம்
1.1    புதிய கூட்டணி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்று அழைக்கப்படும்.
1.2    தனது கட்சியின் பதிவின் நலன்களை புதிய கூட்டணியான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி (TMTK) சார்பில் பாவிப்பதற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இணங்கியுள்ளது.
1.3    மேற்குறிப்பிடப்பட்ட அங்கத்துவக் கட்சிகளின் இடையே கொள்கை அடிப்படையில் பின்வரும் விதிகளுக்கு அமைய இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகின்றது –
இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கம் மற்றும் செயற்பாடுகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளும் மேற்குறிப்பிட்ட 4 கட்சிகளுடன் ஏனைய கட்சிகளும் இந்த கூட்டணியில் 1.3.1    உள்வாங்கப்படலாம். இதேவேளை, இந்த கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகள் பொதுமக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளை தமது கட்சிகளுக்கு ஊடாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்குள் உள்வாங்கி கூட்டுக் கட்சிகளின் சம்மதத்துடன்  தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தலாம்.
1.3.2    இந்த கூட்டணியின் தலைவராக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் செயற்படுவார். செயலாளராக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஒருவர் செயற்படுவார்.
2. நோக்கம்
சட்டப்படி தமிழ் மக்கள் ஒரு தேசம் , இலங்கையின் வடக்கு கிழக்கு அவர்களின் மரபுவழி தாயகம் , அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்என்று தமிழ் மக்கள் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வழங்கிய ஆணையை ஏற்று மற்றும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கு அமைவாக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி இறுதியாக 2012ல் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் 2013ல் வடக்கு மாகாண சபை தேர்தலிலும் தமிழ் மக்கள் மீண்டும் வழங்கிய ஆணை ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கைத் தீவினுள் தமிழர்களின் மரபுவழி தாயகமான இணைந்த வடக்கு கிழக்கில் இறைமையுடனான உயர்ந்த மட்ட சுயாட்சியை சமஷ்டி அடிப்படையில் பெறுவதற்கும் அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டுக்குமாக அனைத்து ஜனநாயக வழிகளையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்துவதற்கான பலமான கூட்டணியை உருவாக்குதல்.
3. பெயர்
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அங்கத்துவக் கட்சிகள் சேர்ந்து இந்தக் கூட்டணியை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற பெயரில் இயக்க வேண்டும் என்றும் (இதன் பின்னர் இக் கூட்டணி தேசியக் கூட்டணி என்று அழைக்கப்படும்), அதன் சின்னம், கொடி, கூட்டணிப்பாடல் போன்றவற்றை அங்கத்துவக் கட்சிகள் விரைவில் தீர்மானிக்க வேண்டும் என்றும் இத்தால் இணங்குகின்றனர்.
4. செயற்பாடுகள்
அங்கத்துவக் கட்சிகளின் மேற்குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்காக கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள், 4.1    கோபதாபங்கள், குரோதங்கள், விரோதங்கள் எல்லாவற்றையும் களைந்துவிட்டு அகத்திலும் புலத்திலும் உள்ள அனைவரையும் அரவணைத்து அரசியல், ஜனநாயக மற்றும்  ராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
4.2    அங்கத்துவக் கட்சிகளின் மேற்குறிப்பிட்டுள்ள தீர்வுக் கோரிக்கையை அக்கறையுடனும் இதய சுத்தியுடனும் பரிசீலிக்கும் எந்த அரசுடனும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு தீர்வை அடையப் பாடுபடுதல்.
4.3    அரசாங்கத்துடன் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் பொருட்டு உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்தின் ஊடாகவும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
4.4    இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு குறுக்கு வழிகளை கையாளாமல், போர்க் குற்ற விசாரணைகள் மூலம் இன அழிப்பு உண்மைகளை எமது சிங்களச் சகோதரர்களுக்குத் தெரியப்படுத்தி பரஸ்பர அவநம்பிக்கைகள் மற்றும் அச்சங்களை நீக்கி நிலையான சமாதானம் ஏற்பட சகல ஜனநாயக வழிகளையும் பயன்படுத்துதல். இதற்காக சிங்கள புத்திஜீவிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சமூக மற்றும் மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களுடன் நெருக்கமாகச் செயற்படுதல்.
4.5    நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக அகத்திலும் புலத்திலும் உள்ள புத்திஜீவிகளை உள்வாங்கி மூலோபாய கொள்கைவகுக்கும் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குதல். இந்தக் கட்டமைப்பு  தேசியக் கூட்டணியின் கொள்கைவகுத்தல் மற்றும் அரசியல் இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆலோசனைகளை மற்றும் பரிந்துரைகளை வழங்கும். இந்த கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படுபவர்கள் எவ்வகையிலும் கட்சி அரசியலுக்குள் தலையிட முடியாதவர்களாகவும் எந்தகட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களாகவும் இருப்பர்.
4.6    அரசியலையும் அபிவிருத்தியையும் சம அளவில் சமாந்திரமாக கொண்டு செல்லும் நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை தமிழர்களின் தொன்மையான வரலாறு, தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் பண்பாட்டுச் செழுமை ஆகியவற்றைப் பாதுகாத்து மேலும் மேன்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல்.
4.7    புலம்பெயர் மக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உலகநாடுகளின் உதவியுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுயசார்பு பொருளாதார செயற்றிட்டங்களை ஏற்படுத்தி மீண்டும் அவர்களுக்கு வளமான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்த பொருத்தமான ஒரு பொறிமுறையை அல்லது வழியை ஏற்படுத்துதல்.
4.8    சிறையில் வாடும் தமிழ் அரசியல்க் கைதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர், முன்னாள் போராளிகள், பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள், ஆதரவற்ற குடும்பங்கள் ஆகியோரின் பிரச்சினைகள் தொடர்பிலும் மற்றும் நில ஆக்கிரமிப்பு, சிங்களக் குடியேற்றம், பௌத்த மத சின்னங்களைத் திணித்தல், பிறழ்வான வரலாறுகளைத் திணித்தல் ஆகியவை தொடர்பிலும் சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் உதவிகளுடனும் அரசாங்கத்துடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலமும் தீர்வுகாணும் நடவடிக்கைகளை எடுத்தல்.
4.1    இறுதியுத்தத்தில் நடைபெற்றது இன அழிப்புத் தான் என்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலுப்படுத்த மேலும் ஆய்வுகளைச் செய்தும் தரவுகளைத் திரட்டியும் சர்வதேச ரீதியாக அதனை ஏற்றுக்கொள்ளச்செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
4.2    உலகம் முழுவதிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி எம் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலமான ஒரு ஆதரவு சக்தியை உருவாக்குதல்.
5. கட்சிகளின் கடப்பாடுகள்
5.1    தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயற்பாடுகளுக்கு அங்கத்துவக் கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தும், கூட்டாகவும் பொறுப்பாக இருப்பன.
5.2    தமக்கிடையில் எழும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலம் தீர்வுகாணப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
தேசியக் கூட்டணி தொடர்பாக அல்லது முக்கிய விடயங்கள்இ தீர்மானங்கள் தொடர்பாக உறுப்பினர் ஒருவர் தன்னிச்சையாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க முடியாது. தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அல்லது தலைவர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் மட்டுமே கருத்துத் தெரிவிக்க முடியும். எவரேனும் ஒரு கட்சி அங்கத்தவர் தமது சொந்தக் கருத்துக்5.1    வெளியிடும் போது அது சொந்தக் கருத்தென்றும் கூட்டுக் கட்சியான தேசியக் கூட்டணியின் கருத்து அங்கீகரிக்கப்பட்ட உரிய நபரால் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறலாம். ஆனால் அக்கருத்துக்கள் தேசியக் கூட்டணியின் ஒருமைப்பாட்டையோ ஒத்தகருத்துக்களையோ பாதிப்பதாயின் அவர் மேல் தேசியக் கூட்டணி உரிய நடவடிக்கை எடுக்கும்.
5.2    கட்சிகள்; ஒவ்வொன்றும் தத்தமது வேட்பாளர்கள் சம்பந்தமான செலவுகளைப் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். சேர்ந்து நடாத்தப்படும் அரசியல் கூட்டங்களுக்கான செலவுகளை யாப்பு ஒன்று உருவாகும் வரையில் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களே வரையறுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அங்கத்துவக் கட்சிகளின் உத்தியோகபூர்வ கணக்காளர்கள் இவை பற்றி ஆராய்ந்து கட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள்.
6. நிர்வாகச் செயன்முறை
6.1    தேசியக் கூட்டணியின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளை நெறிப்படுத்தும் வகையில் யாப்பு ஒன்று உருவாக்கப்படும். அது அநேகமாக விரைவில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னரே சாத்தியமாகும் என்பது ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதுவரையில் தேசியக் கூட்டணியின் முகாமைத்துவ, நிர்வாக செயற்பாடுகளை எவ்வாறு  நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை அரசியல் பீடம் (உபபிரிவு 6.4ஐப் பார்க்கவும்) முடிவெடுக்கும்.
6.2    தேசியக் கூட்டணியின் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதற்காக ஒழுக்கக் கோவையொன்று விரைவில் தயாரிக்கப்பட வேண்டும். அதுவரையில் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களே ஒழுக்கத்தை வரையறுத்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
6.3    தமது தனித்துவத்தைப் பேணுவது அங்கத்துவக் கட்சி உறுப்பினர்களின் சுதந்திரம் என்றாலும், கூட்டு முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு செயற்படவேண்டும்.
தேர்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும் இந்த தேசியக் கூட்டணியால் உருவாக்கப்படும் 11 அங்கத்தவர்களைக் கொண்ட  அரசியல் பீடம் (Pழடவைடிரசநயர) தீர்மானிக்கும். தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக்கழகம் ஆகியவற்றுக்கிடையில் தலைவருக்கு மேலதிகமாக தமிழ் மக்கள் கூட்டணி 50% மற்  அனைத்தும் 50%என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில் அரசியல் பீடத்தின் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
6.4.1    தேசியக் கூட்டணியின் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் வேறு கட்சிகளை உள்வாங்க தேசியக் கூட்டணி முடிவெடுத்தால் மேற்கண்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் மாற்றம் செய்யப்பட்டு பங்காளி கட்சிகளுக்கு இடையே பகிரப்படலாம் அல்லது விட்டுக்கொடுப்பு செய்யப்படலாம்.
6.5    சகல முடிவுகளும் ஏகமனதாக அல்லது பெரும்பான்மை முடிவுகளுக்கு அமைய மேற்கொள்ளப்படும். அரசியல்பீட அங்கத்தவர்கள் ஏதேனும் விடயத்தில் சமமாகப் பிரிந்திருந்தால் அரசியல்பீட தலைவர் தமது தீர்மானிக்கும் வாக்கை  பாவிப்பார்.
6.6    தேசியக்  கூட்டணியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மூலோபாய கொள்கை வகுக்குங் கட்டமைப்பையும் மற்றும்  விசேஷ தேவைகளுக்காக உப குழுக்களையும் அரசியல் பீடம் உருவாக்கலாம். முக்கியமாக கலை பண்பாட்டுக்கான உப குழு, பால் சமத்துவத்துக்கான உப குழு, சமூக சமத்துவத்துக்கான உப குழு போன்றன தேசியக் கட்டமைப்புகளுக்கான உப குழுக்களுள் அடங்குவன. இவற்றுடன் சிறுவர் முதியோர் நலச்சேவை, முன்னாள் போராளிகளுக்கான நலச்சேவை, மாற்றுத் திறனாளிகளுக்கான நலச்சேவை போன்ற நலச் சேவைகளுக்கான உபகுழுக்கள் போன்றனவும் உருவாக்கப்படலாம். உப குழுக்களில் கட்சிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். அரசியல் பீடத்தின் வழிநடத்தலின் கீழ் இவ்வுபகுழுக்கள்  இயங்குவன.
6.7    தேசியக் கூட்டணியின் அரசியல் பீடம் குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை கூடி நடைமுறை விடயங்களை ஆராயும்.
6.8    தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மூலோபாய கொள்கைவகுக்கும் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும் வரை தற்காலிகமாக மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், கருத்துருவாக்கிகள், படைப்பாளிகள் அடங்கிய ஓர் ஆலோசகர் குழு அரசியல் பீடத்தினால் உருவாக்கப்படும்.
6.9    தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை அரசியல் பீடமே கையாளும். இதன் போது கொள்கைவகுக்கும் கட்டமைப்பு- ஆலோசனை சபையின் பரிந்துரைகளையும் கவனத்தில் எடுத்து தேர்தல் விஞ்ஞாபனம், தேர்தல் உபாயம் மற்றும் வேட்பாளர் நியமனம் ஆகியவை தொடர்பிலான முடிவுகளை அரசியல் பீடம் மேற்கொள்ளும்.
6.10  அரசியல் பீடத்தில் கட்சிகளுக்கு  பிரிவு 6.4 இல் வழங்கப்பட்டுள்ள விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலேயே ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களுக்குமான வேட்பாளர்கள் நியமனம் அமையும். இதன்படி, யாழ் – கிளிநொச்சி  மாவட்டத்தில் போட்டியிடும் 10 வேட்பாளர்களும் தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியகட்சி,  ஈழத் தமிழர் சுயாட்சிக்கழகம் ஆகியவற்றுக்கிடையில் 5:2:2:1 என்ற எண்ணிக்கையில் போட்டியிடுவர். தமிழ் மக்கள் கூட்டணி நலஉரித்துக்கள் சார்ந்த இரு வேட்பாளர்களைத் தமக்கென ஒதுக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கலாம். எனினும் மற்றைய தேர்தல் மாவட்டங்களில் நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் இயற்றப்படலாம். தேர்தல் தேவைகளிற்கேற்ப அங்கத்துவக் கட்சிகள் தமது எண்ணிக்கையில் மாற்றஞ் செய்யலாம்.
6.11  தேசியக் கூட்டணியின் தலைவரே பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் செயற்படுவார்.  தேசியக் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற குழுவின் தலைவராக செயற்பட முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் பாராளுமன்ற குழுவின் தலைவர் பதவி அரசியல் பீடத்தினால் தீர்மானிக்கப்படும்.
 4.4    தேசியபட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில்  பொருத்தமானவர்களை நியமிக்கும் அதிகாரத்தை  அரசியல்பீடம் கொண்டிருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேசியபட்டியல் ஊடாக நியமனம் பெறுபவர் எத்தனை ஆண்டுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கலாம் என்பதையும் அரசியல் பீடம் தீர்மானிக்கும். இது தொடர்பிலான முடிவு ஒருவரின் நியமனம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாகவே தீர்மானிக்கப்பட வேண்டும்.
4.5    இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தப்படும் கூட்டணியின் பெயர்,  சின்னம், அரசியல் பீட உறுப்பினர்களின் பெயர் விபரங்கள், மற்றும் தேவையான விபரங்கள் ஆகியவை உள்ளிட்ட பதிவு ஒன்று அனைத்து பங்காளிக் கட்சிகளின் செயலாளர்களின் ஒப்பங்களுடனும் தேர்தல் திணைக்களத்தில் மேற்கொள்ளப்படும்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின்; அங்கத்தவர்கள் அந்தந்தக் கட்சிகளின் ஒப்புதலின்றி கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது வேறு ஏதும் கட்சிகளுடனோ இணைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அங்கத்துவ கட்சிகள் அவர்களை ஏற்கவுங்; கூடாது. அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும்.
4.4    அந்தந்தக்கட்சியின் அல்லது அமைப்பின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பதுடன் தேசியக் கூட்டணியின் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டுச் செயற்படவேண்டும்.
4.5    தேர்தல் சம்பந்தமான தேசியக் கூட்டணியின் தீர்மானங்கள் அனைத்தும் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் செயலாளர் அல்லது அவர் சார்பில் தேர்தல் திணைக்களத்துடன் தொடர்பு கொள்பவரால் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். தேசியக் கூட்டணி தேர்ந்தெடுக்கும் நபர்களின் பெயர்களே முறையாக தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்பட வேண்டும்.
4.6    தனது கட்சியின் பதிவின் நலன்களை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவடையும் வரை புதிய கூட்டணியான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு நல்கும். அதன்பின்னர் குறித்த பதிவை நான்கு கட்சிகள் சேர்ந்த புதிய கூட்டணிக்கு வழங்கி தமது கட்சியின் பெயரை வேறு பெயராக மாற்ற வேண்டும். அத்துடன் தமிழ் மக்கள் கூட்டணியின் பதிவின் போது அப்பெயரை பதிவு செய்வதற்கு எந்தவிதத்திலும் தடையாக இருக்கக்கூடாது.
7. பொதுவானதும் முக்கியமானதும்
7.1    தமிழ் அரசியலை உயர்ந்த ஒரு நிலையை நோக்கி கொண்டு செல்வதற்காக தேசிய  கூட்டணியின் கீழ் எந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் தமது சொத்துக்கள் மற்றும் வருமானங்களை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக வெளிப்படுத்துவது ஊக்குவிக்கப்படுகின்றது. வேட்பாளர் தெரிவு, பொறுப்புக்கள் மற்றும் பதவிகள் நியமனம் ஆகியவற்றின்போது இந்த விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
7.2    இந்தத் தேசியக் கூட்டணி ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் வேட்பாளர்கள் தமது மாதாந்த படிகளின் 8 சதவீதத்தினை பொதுமக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்காக இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அவர்கள் விரும்பிய ஒரு  அறக்கட்டளை நிதியத்துக்கு மாதாந்தம் வழங்க வேண்டும். இது பற்றிய அறிவித்தல், விபரங்களுடன் தேசியக் கூட்டணிக்கு வழங்கப்பட வேண்டும். அது தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு நிதியமாகவும் அமையலாம். அதேவேளை, ஆகக்குறைந்தது 2 சதவீதத்தினை தேசிய கூட்டணியின் பொதுவான செலவீனங்களுக்காக வழங்கவேண்டும்.
7.1    இளையோர்களையும் புதியவர்களையும் அரசியலுக்குள் உள்வாங்கும் பொருட்டு ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆகக்குறைந்தது 10% அவர்களுக்காக இடம் ஒதுக்கப்படவேண்டும். இதனை உறுதிப்படுத்தும் பொறுப்பு தேசியக் கூட்டணி கட்சிகளுக்கு இருக்கிறது.
7.2    அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் வகையில் தேர்தல்களில் பெண் வேட்பாளர்களை முடிந்தளவு நிறுத்துவதற்கு அங்கத்துவ கட்சிகள் பிரயத்தனம் செய்யவேண்டும். தேசியக் கூட்டணியின் ஆண்: பெண் பிரதிநிதித்துவம் 50:50 என்ற விகிதாசாரத்தில் நாளடைவில் ஏற்படும் வகையில் அங்கத்துவக் கட்சிகள் முயற்சி எடுக்கவேண்டும்.
7.3    இந்த தேசியக் கூட்டணியின் கீழ் பாராளுமன்றத்துக்கு அல்லது ஏனைய பொறுப்பான பதவிகளுக்கு தெரிவுசெய்யப்படும் ஒருவர் மீது ஆதாரபூர்வமாக நம்பகத்தன்மையான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் முறையான விசாரணை நடைபெறும் வரை அவர் தனக்கு வழங்கப்பட்ட நியமன ரீதியான பதவியில் இருந்து தற்காலிகமாக விலகிக்கொள்ளவேண்டும். இதற்கான ஆவணங்களில் கையொப்பம் இட்ட பின்னரே அவர் தமது பதவியை ஏற்றுக்கொள்ளலாம்.
7.4    தேர்தல்களில் வெற்றிபெறுபவர்கள் தமது அதிகாரத்தை  தமது சொந்த பந்தங்களுக்காக துஷ்பிரயோகம்  செய்யக்கூடாது. திறமை, தகுதி மற்றும் யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வேலைவாய்ப்பு கொடுக்கப்படவேண்டும்.
7.5    தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் அதன் அங்கத்தவர்களும் இந்தக் புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ள நிபந்தனைகளுக்கு அல்;லது ஏற்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மீறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவோ அல்லது இந்தக் தேசியக் கூட்டணியை வலுவற்றதாக்கவோ கூட்டுக் கட்சிகளுக்கு அதிகாரம் உண்டு.

இஸ்ரேலிய படைகளால்  33 குழந்தைகள் உட்பட 149 பாலஸ்தீனியர்கள் படுகொலை

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் கடந்த ஆண்டில் 33 குழந்தைகள் உட்பட 149 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக
புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்களில் 112 பேர் (74 சதவீதம்) காசா பகுதியில் கொல்லப்பட்டனர், மற்றும் 37 (33 சதவீதம்) பேர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கொல்லப்பட்டனர் என கூறப்படுகிறது.

காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களில் 69 பேர் இஸ்ரேலிய வான் தாக்குதல்களின் கீழ் உயிரிழந்தனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் கொல்லப்பட்ட சம்பவமும் இங்கு பதிவாகியுள்ளது.தாக்குதலில் அவர்களின் வீடு முற்றாக அழிக்கப்பட்டது

15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் எடுத்துச்சென்றன.இத்துடன் இஸ்ரேல் கைப்பற்றி வைத்திருக்கும் பாலஸ்தீனர்களின் உடல்களின் எண்ணிக்கையை 306 ஆக உயர்ந்துள்ளது.

இந்த கொடுமைகள் பற்றி ஐநா அமைப்போ,மனிதவுரிமைகள் பேசும் மேற்கத்திய அமைப்புகளோ எதுவும் கண்டுகொள்ளாமல் இருப்பது இவற்றின் நம்பகத் தன்மையை மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கி நிற்கிறது.

குரோனா வைரஸ் உயிரிழப்பு 800 ; 37,000 பேர் பாதிப்பு

கு ரோனா வைரஸ் பலி எண்ணிக்கை சீனாவில் ஞாயிறன்று கணக்கின் படி 803 ஆக அதிகரித்துள்ளது, வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,000 பேர்களாக அதிகரிப்பு.

சார்ஸ் வைரஸ் பலியைக் காட்டிலும் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா பீறிட்ட மையமான ஹூபேயில் மேலும் 81 பேர் மரணமடைந்துள்ளனர். சார்ஸ் வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 774, கரோனா பலி எண்ணிக்கை 803 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த டிசம்பரில் ஹூபே மாகாணத்தில் உள்ள சந்தை ஒன்றில் காட்டு விலங்குகள் இறைச்சி விற்கப்பட்டது, இதிலிருந்து இந்த கரோனா வைரஸ் பரவி தற்போது உயிரைக் குடித்து வருகிறது, இந்த வைரஸ் பற்றி முதன் முதலில் அறிவித்த மருத்துவரை சீனா அடக்கியது, கடைசியில் அவரே வைரசுக்குப் பலியாக மக்கள் கோபம் சீன அரசு மீது அதிகரித்து வருகிறது.

மேலும் வூஹானில் 60 வயது அமெரிக்கரும் கரோனாவுக்குப் பலியானதாக நேற்று செய்திகள் வெளியானதும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் ஜப்பானிய நபர் ஒருவரும் கரோனாவுக்கு வூஹான் மருத்துவமனையில் பலியானதாகக் கூறப்படுகிறது.

கரோனா பாதிப்பினால் யாரும் அங்கு செல்ல முடியாததாலும் சீனாவிலிருந்து பொருட்கள் வெளியே செல்வதிலும் முடக்கம் ஏற்பட்டுள்ளதால் சீன பொருளாதாரம் பின்னடைவு கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் 33 பேருக்கு கரோனா இருப்பது தெரியவந்ததையடுத்து அங்கும் கடைக்காரர்கள் கடைகளை மூடிவிட்டுச் சென்றனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் முகமூடிகளுக்கும் சீனாவில் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்னேஸ்வரன் தலைமையில்”தமிழ் மக்கள் தேசிய கூட்டணி” உருவானது

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணியான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி யின் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (09) ரில்கோ விருந்தினர் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலான சுப நேரத்திலேயே கைச்சாத்திடப்பட்டது.

தமிழ் மக்கள் கூட்டணி , ஈ.பீ.ஆர்.எல்.எப், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளுக்கிடையே இன்று (09) இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தலைமையில் புதிய அணியொன்று உருவாக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தது.

ஆயினும் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி நிலைமைகளால் அது குறித்தான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது அந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் இன்று வெளியிடப்பட்டது.

வடக்கு தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு;21 பேர் பலி

தாய்லாந்தில் படை வீரர் ஒருவர் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதுடன், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தாய்லாந்தின் நகோன் ராட்சாசிமா எனும் நகரத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் தாய்லாந்து முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

இளநிலை அதிகாரியான ஜக்ரபந்த் தோம்மா, ஒரு படை முகாமில் இருந்து ஆயுதங்களைத் திருடுவதற்கு முன்பு தனது மூத்த அதிகாரியைக் கொன்றார்.
110824554 bc4a239e 7d24 4b91 b094 5c6bcd2e1ae4 வடக்கு தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு;21 பேர் பலி
பிறகு, அங்குள்ள வணிக வளாகத்துக்கு சென்ற சந்தேக நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டை நடத்தினார்.

தாக்குதலுக்கு உள்ளான வணிக வளாகம் தற்போது பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அங்கு சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தப்பியோடி மறைந்திருந்த இந்த படையினர் பாதுகாப்புப் படையினரால் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறியமுடிகிறது.

 

வவுனியாவில் தொடரும் இராணுவச் சோதனை- மக்கள் அசௌகரியம்.வீடியோ இணைப்பு

வவுனியாவில் இரண்டு இடங்களில் இராணும் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அண்மைய நாட்களில் யாழ் மாவட்டத்தில் இருந்து தென் பகுதிக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே இச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

புதூர் மற்றும் ஓமந்தைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இச் சோதனையின் போது பேரூந்துகளில் இருந்து வரும் பயணிகள் பகல் இரவு நேரங்களிலும் கீழே இறக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.

அதற்குமப்பால் புதூர் பிரதேசத்தில் சில மீற்றர் தூரம் நடந்து சென்றே மீண்டும் பேரூந்தில் ஏறிச்செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரவு நேரங்களில் தூர இடங்களுக்கு செல்பவர்கள் பெரும் அசளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறு சோதனைகளின் போது போதைப்பொருள் மீட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் முக்கியமாக பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படும் மார்க்கங்கள் தொடுர்பில் இதுவரை பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தாது பயணிகளை அசளகரியத்திற்குள்ளாக்குவதாகவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முல்லை மக்களின்; 11,232 ஏக்கர் காணி முகாவலி திட்டத்தில் அபகரிப்பு.!

முல்லைத்தீவில், தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட ஏறத்தாள 3744 ஏக்கர் காணிகளை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அபகரித்துள்ளதுடன், அருகிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டு தற்போது இந்தக் காணிகளின் மூன்று மடங்காக 11,232 ஏக்கர் காணிகள் மகாவலி (எல்) என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு, சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்கான முயற்சிகள் கச்சிதமாக இடம்பெறுவதாக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய குளக்காணிகளுக்குப் பதிலாக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டதாகவும் அவ்வாறு மாற்றுக் காணியாக வழங்கவுள்ள மானாவாரி விவசாய நிலங்களும், ஏற்கெனவே தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தால் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் எனவும் அவர் தெரிவித்தார்.

‘குறிப்பாக, 1984ஆம் ஆண்டு தமிழ் மக்கள், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணியில் இருந்து, வலுக்கட்டாயமாகஇராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டிருந்தனர். பின்னர் அம்மக்கள், 2011ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில், தமது பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்பட்டனர். அப்போது அம்மக்களுடைய பூர்வீக வாழ்வாதார நிலங்கள் முழுமையாகச் சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டிருந்தது.

‘குறிப்பாக அவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகளின் புள்ளி விவரங்களைப் பொறுத்தவரையில், கிட்டத்தட்ட 3,744 ஏக்கர் காணிகள் அங்கு அபகரிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த, இக்காணி விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துத் தெரிவிக்கும்போது, 408 ஏக்கர் காணிகள் அதில் 103 பேர் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்தார்.

‘அத்துடன், சிங்கள மக்களுக்கு அக்காணிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை எனத் தனதுரையின் முற்பகுதியில், பிரதமர் கூறியிருந்தார். தொடர்ந்து அவருடைய கருத்தில் சிங்கள மக்களுக்குக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். ஆனால் நிச்சயமாக, நெலும்வௌ என்ற குளத்தைப் பற்றி மாத்திரம்தான் அவர் சொல்லியிருக்கின்றார் என நான் எண்ணுகின்றேன். அதுவும் பொய்யான தகவலாகும்.

‘எம்முடைய மாவட்டச் செயலகப் புள்ளிவிவரத்தின்படி, உந்தராயன் குளத்தின் (நெலும்வௌ) கீழ் 264, அமையன் குளம் (கிரிஇப்பன் வௌ) தமிழ் மக்களின் பராமரிப்பில் இருந்தபோது 360 ஏக்கர், அடையக்கறுத்தான் 75 ஏக்கர், சாம்பல்குள வயல் 300 ஏக்கர் என, குளத்தின் கீழான சுமார் 899 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.

‘குறிப்பாக, ஆமையன்குளம் சம்பந்தமாக ஒரு புள்ளிவிவரத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். குறித்த ஆமையன் குளம் (கிரிஇப்பன் வௌ) 103 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட நிதியில் அக்குளம் மறுசீரமைக்கப்பட்டு, முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேரடியாக இங்கு வந்து, அக்குளத்துக்கு கிரிஇப்பன்வௌ எனப் பெயர் மாற்றம் செய்து, சிங்கள மக்களின் பாவனைக்காகக் கையளித்திருந்தார்.

‘இக்குளத்தின் கீழ், தமிழ் மக்கள் 360 ஏக்கர்களில் தான் பயிர்ச்செய்கை மேற்கொண்டிருந்தனர். 900 ஏக்கர் வரையில் நீர் பாய்ச்சக்கூடிய அளவுக்கு குளம் தற்போது மறுசீரமைக்கப்பட்டு உள்ளதுடன், காடுகள் அழிக்கப்பட்டு, 900 ஏக்கர் வரையில் காணிகள் எடுக்கப்பட்டு, சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

‘இவ்வாறாக அபிவிருத்தி என்ற போர்வையில், தமிழ் மக்கள் ஏற்கெனவே பயிர்செய்கையில் ஈடுபட்ட காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன், அருகே உள்ள எமது காட்டு வளங்கள் அழிக்கப்பட்டு மேலதிகமான காணி அபகரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கும் ஒரு திட்டமாகத்தான் அங்கு நடைமுறைப்படுத்திக்கொண்டு வருகின்றனர்.

‘எமது மக்கள் கடந்த காலங்களில் ஏறத்தாள 3,744 ஏக்கர் காணிளில்தான் பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்தனர். அக்காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன், அருகிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டு தற்போது இந்த காணிகளின் மூன்று மடங்காக 11,232 ஏக்கர் காணிகள் மகாவலி (எல்) என்ற பெயரில் அபகரித்துவைத்துள்ளனர் என்பதுதான் உண்மை.

‘எனவே, பிரதமர் கூறிய புள்ளிவிவரங்களும் கருத்துகளும் பொய் என இதில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நிச்சயமாக எமது மக்களுடைய காணிகள் யாருக்கு எவ்வளவு ஏக்கர், யார் அந்தக் காணிகளுக்கு உரிமையாளர்களாக உள்ளனர் போன்ற சகல ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.

‘அந்த வகையில், இக்காணிகளை அபகரிப்புச் செய்வதை விடுத்து, தமிழ் மக்களுக்குரிய காணிகள் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாகும். இது ஒரு புறமிருக்க, 25.06.2018ஆம் திகதி, கமநலச் சேவைத் திணைக்களத்தினூடாக மாவட்டச் செயலகம் வெளியிட்ட புள்ளிவிவரத்திலும், நான் குறிப்பட்ட இந்தக் காணி புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

‘இவ்வாறு அரச திணைக்களங்களாலும் இவ்வாறான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ள போதும், பிரதமர் இவ்வாறான பொய்த் தகவல்களை வெளியிடுவது அழகல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளை, பிரதமர் மாற்றுக் காணி வழங்குவது தொடர்பிலும் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

‘அந்தவகையில், இந்த மாற்றுக் காணிகள் என்ற விடயத்தில், ஏற்கெனவே குளத்தோடு பயிர்ச்செய்கை செய்துவந்த தமிழ் மக்கள், தற்போது மானாவாரி ஆதாவது மழையை நம்பி பயிர்ச் செய்கையில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். அதுவும் ஒரு குறுகிய நிலப்பரப்பில், விவசாயம் செய்துவருகின்றனர்.

‘தமிழ் மக்கள் கடந்த காலங்களில், பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட குளங்களோடு சேர்ந்த வயல் நிலங்கள், பாரிய அளவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதாவது, முன்பு 1 ஏக்கர் எனில், தற்போது அதை மூன்று ஏக்கர் அளவிற்கு விருத்தி செய்து, குளங்களும் அதற்கு ஏற்றால் போல் பெரிதாக்கப்பட்டு, மறுசீரமைக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கும் வேலைகள் கச்சிதமாக இடம்பெறுகின்றன.

‘இந்த விடயத்துடன் ஒப்பிடும்போது, தமிழ் மக்களுக்கு மாற்றுக்காணி எங்கு தரப்போகின்றனர். மாற்றுக்காணி என்று கூறிக்கொண்டு குளத்தோடு உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்துள்ளனர்.

‘மானாவாரிக் காணிகள்தான் மற்றுக் காணிகளாக வழங்கப்படும் என்ற நிலையிலும், காடுகளை அழித்துத்தான் அந்தக் காணிகளை தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற நிலையிலும் இருந்தால் மழையை நம்பித்தான் பயிர்ச்செய்கையில் ஈடுபடவேண்டும் என்ற நிலைக்கு எமது தமிழ் மக்கள தள்ளப்படுகின்றனர்.

‘மேலும், ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் இரண்டு ஏக்கர் மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என நிர்ப்பந்தப்படுத்தி, மாற்றுக் காணிக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆனால், அவ்வாறு மாற்றுக்காணியாக வழங்கப்படும் என்ற அந்தக் காணிகள் கூட, ஏற்கெனவே அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு 4-5 ஏக்கர் வரையில் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள்தான். அதற்கான ஆவணங்கள் தமிழ் மக்களிடம் உள்ளன.

‘அப்படியாக இந்த மாற்றுக்காணியாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட காணிகளும், 625 தமிழ் பயனாளிகளுக்குரிய காணிகள்தான் இக் காணிகளாகும். இவ்வாறிருக்க அக்காணிகளை இரண்டு ஏக்கர் வீதம் மாற்றுக்காணியாக மீண்டும் தமிழ் மக்களுக்கு வழங்குவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

‘அந்த 625பயனாளிகளின் காணிளை விட, 825ஏக்கர் காணிகள் தோட்டச் செய்கைக்காக கோட்டைக்கேணி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள காணிகளை அபகரித்து ஒருவருக்கு தலா 25ஏக்கர் வீதம், 33சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது.

‘இவ்வாறு சிங்கள மக்களுக்கு 25ஏக்கர் வீதம் காணிகளை வழங்கிவிட்டு,ஏற்கனவே தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளை, மீண்டும் தமிழ் மக்களுக்கு இரண்டு ஏக்கர் வீதம் வழங்குகின்றோம்என்றுசொன்னால் அதைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

‘தமிழ் மக்களுடைய இந்தக் காணிகள் அனைத்தும் அவர்களுக்கே சேரவேண்டும் என்பதே அவர்களுடைய கோரிக்கையாக உள்ளது. எமது தமிழ் மக்கள் கடந்த பத்து வருடமாக இந்த காணிகளுக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். நிச்சயமாக அந்த மக்கள் தொடர்ந்தும் போராடத்தான்போகின்றனர்.

‘ஆனால் இந்த தமிழ் மக்களுக்கு இரண்டு ஏக்கர் மாற்றுக்காணி வழங்கும் நடைமுறை ஏற்றுக்கௌ;ளமுடியாது. சிங்கள மக்களுக்கு ஒரு மாதிரியாகவும் தமிழ் மக்களுக்கு வேறு மாதிரியான காணி வழங்கல்கள் என்ற நிலையை மாற்றி, நிச்சயமாக எமது தமிழ் மக்களுக்குரிய சொந்தக் காணிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

‘குளங்களின் கீழான தமிழ் மக்களின் வயல் நிலங்களை அத்துமீறி அபகரித்துவிட்டு, மானாவாரிக் காணிகள் வழங்கும் நடவடிக்கையினை செய்யவேண்டம்.

‘குளங்களின் கீழான தமிழ் மக்களின் காணிகள் வழங்கப்படுவதுடன், மானாவரிக் காணிகளிலும் தமிழ் மக்களுக்குரிய காணிகள் வழங்கப்படவேண்டும். மேலும், சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தமிழ் மக்களின் இக் காணிகள், நிச்சயமாக அவர்களிடமிருந்து மீளப்பெற்று, எமது மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

போரில் பல இழப்புக்களை சந்தித்த பெரிய பண்டிவிரிச்சதன் கிராம இளைஞனின் சாதனை.

வசதிபடைத்த நகர்புற இளைஞர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் பின்தங்கிய கிராமப்புறங்களில் வாழும் இளைஞர்களுக்கு எட்டாக் கணியாகவே காணப்பட்டு வருகிந்தது இவற்றை தகர்க்கும் முறையில் மன்னாரைச் சேர்ந்த எஸ்.ஜெ.வோல்டிசொய்ஸ்சா முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக (ADP) 29 வயதில் பொறுப்பேற்க உள்ளார்.

இவர் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் படித்து, கடந்த கால யுத்தத்தில் பல இன்னல்களை சந்தித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பல்கலைக்கழக படிப்பை சிறப்புற முடித்திருந்தார்.

அதன் பின்னர் தனது கடின முயற்சியினால் முகாமைத்துவ உதவியாளராக (ஆயு) பணியாற்றி, பின்பு தனது திறமையினால் சமூக சேவை உத்தியோகத்தராக மன்னார் மடு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்தார். அதனைத் தொடர்ந்து தனது முயற்சியினாலும் திறமையினாலும் இலங்கை திட்டமிடல் சேவை பரீட்சையில் (SLPS) சித்தியடைந்து, நாளைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக (ADP) பொறுப்பேற்க உள்ளார்.

குடும்ப வறுமைக்கு மத்தியிலும் பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் உள்ள பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தில் படித்து கல்வி ரீதியான பதவிகளில் உயரிய பதவியொன்று வகிக்கும் முதல் நபர் என்ற பெயரை எடுத்து இந்த ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார் என அவ்வூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இலை மறை காயக இருக்கும் இளைஞர்கள் கல்வியை ஆயுதமாக எடுத்து அரசியலிலும் அரச உயர் பதவிகளிலும் பிரசன்னமாகி தமிழ் மக்களின் உரிமைகளை வெண்றெடுப்பதற்கு போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

தலைமைப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணாவிட்டால் பாதகமான நிலை: பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினைக்கு பொதுத் தேர்தலுக்கு முன்னர் தீர்வைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், சாதகமான பெறுபேற்றை எதிர்பார்க்க முடியாது என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“நான் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியபோதிலிருந்து, பிழையான வழியில் செல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

ஜனநாயக ரீதியாகத்தான் நாம் செயற்பட்டோம். இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை நான் செயற் குழுவின்போது விமர்சித்தேன் என்ற காரணத்தினால்தான் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன்.

அதாவது, புதிய தலைமைத்துவமொன்றை ஐக்கிய தேசியக் கட்சியினர் விரும்புகிறார்கள் என்று கூறிய காரணத்திற்காகத்தான் நான் நீக்கப்பட்டேன். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினைகள் உள்ளமை உண்மைதான். எனினும், பெரும்பான்மையான உறுப்பினர்கள் சஜித் பிரேமதாஸவுக்குத்தான் ஆதரவளிக்கிறார்கள். எனவே, நாமும் அவருக்கு சார்பாகத்தான் செயற்பட வேண்டியுள்ளது.

இந்தப் பிரச்சினைக்குப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் தீர்வினைக் காணவேண்டும். அப்படியில்லை என்றால், பொதுத்தேர்தலிலும் சிறப்பான பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியாது. நான் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருடன் எந்தக் காரணம் கொண்டும் முரண்பட்டமை கிடையாது. எனக்கும் அவருக்கும் தனிப்பட்டரீதியாகப் பிரச்சினைக்கூட இல்லை. இருப்பினும், அவரது செயற்பாடுகள் தவறு என்ற காரணத்தினால்தான் தற்போது எதிர்ப்பினை வெளியிடுகிறேன்” என்றார்.