Home Blog Page 2367

அவசர நிவாரணப் பொருட்கள் வழங்க மகிந்த ராஜபக்ஸ ஏற்பாடு

கிராம சேவகர்கள் பிரிவுகள் மூலம் அவசர நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு மகிந்த ராஜபக்ஸ ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக ஒரு கிராம சேவகர் பிரிவிற்கும் தலா 1 மில்லியன் ரூபாய் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிதி ஊரடங்கு அமுலில் உள்ள காலத்தில் தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு மிகவும் உதவியாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய வருகை தரும் பகுதி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகை தரும் பகுதியை மூடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிச் செல்லும் பகுதி திறந்திருக்கும் என்பதுடன், இலங்கைக்கு வெளியே பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இடைநிறுத்தும் பயணிகள் செயற்பாடும்(Passenger transit) செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் பயணிகள் வருகை தருவதைத் தவிர்ப்பதற்கு துறைமுக அதிகார சபை பின்பற்றும் நடைமுறைகள் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும். கொரோனா வைரஸ் தாக்கத்தின் நிலை நாட்டில் சீராகும் வரை இந்த தீர்மானங்கள் நடைமுறையில் இருக்கும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா – covid 19 வைரஸ் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆய்வறிக்கை

NEW YORK, UNITED STATES OF AMERICA, March 22, 2020 /EINPresswire.com/ — மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனோ – covid 19 வைரஸ் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ( Ministry of Community Health, Welfare and Education) – சமூக நலம், நலன்பேணல் , கல்வி அமைச்சு ஆய்வறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் 170 க்கு மேற்பட்ட நாடுகள்,பிராந்தியங்களில் பரவியுள்ள இந்த கொடிய வைரஸ் தொற்று காரணமாக இதுவரை (மார்ச் 22) 308 130 பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு, 13 444 பேர் உயிரிழந்துள்ளனர்.

அறிக்கையின் ழுழுவிபரம்:

கொவிட்-19 பன்னாட்டளவில் கவலைக்குரிய உலக நலவாழ்வு நெருக்கடிநிலை என்று ஜனவரி 30 அன்றே உலக நலவாழ்வு அமைப்பு கூறியதோடு அது ஒரு பெருந்தொற்று நோய் என்றும் அறிவித்துள்ளது. அதாவது உலகமெங்கும் பரவி பெருந்தொகையான மக்களைப் பாதித்துள்ள நோய் என்று பொருள். உலக நலவாழ்வு அமைப்பு தொடர்ந்து கீச்சக வழி (டுவீட்) செய்த இடுகைகளில் ஆழ்ந்த கவலை தெரிவித்தது. ‘நோய்க்கிருமி பரவும் வேகமும் அதன் கடுமையும் மட்டுமல்லஇ இது தொடர்பான செயலின்மையும் கூட தனக்குக் கவலையளிப்பதாக’க் கூறியது.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்தக் கடுமையான வழிமுறைகளைக் கையாள்வதில் சீனம் வழிகாட்டியது. ஹுபேய் மாகாணத்தில் சற்றொப்ப ஐந்தரை கோடி மக்களைப் பல நாள் அடைத்து வைத்தது. வட இத்தாலியிலும் இதே போன்ற வழிமுறைகள் கையாளப்பட்டுள்ளன. மேலும் பல நாடுகளும் இவ்வாறே செய்யத் தொடங்கியுள்ளன.

புவிக்கோளத்தின் பல பாகங்களிலும் இயல்பு வாழ்க்கைக்குலைவு எப்படியும் இந்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை நீடிக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. கோடை வந்து வெப்பநிலை உயரும் போது தொற்றுநோய் பெரிதும் தணியக்கூடும் என்று நலவாழ்வு அதிகாரிகள் நம்பினாலும் இந்தக் கருத்துக்கு இப்போதைய நிலையில் உறுதியான சான்று இல்லை.

கிருமியியல் வல்லுநர்கள் தொற்றுநோயியல் வல்லுநர்கள் பலரும் கொவிட்-19 தொற்றுநோயாகப் பரவக்கூடும் என்றும் இன்னும் நீண்ட காலத்துக்கு உலகை வலம் வந்து மனித உயிர்களைப் பெரிய அளவில் பலிவாங்கக் கூடும் என்றும் நம்புகின்றனர்இ தடுப்பு மருந்து செய்யப் பல முயற்சிகள் நடந்தாலும்இ சற்றொப்ப இன்னும் ஓராண்டு காலத்துக்கு மேல் கழிந்தாலும் எதுவும் மெய்ப்படும் என எதிர்பார்க்கப்படவில்லை.

கொரோனா கிருமிகள் பல விலங்குகளிடம் காணப்பட்டாலும் மனித நலவாழ்வைப் பாதிக்கும் படியான ஏழு வகைகள் உள்ளன. மிகப் பரவலாக இருப்பவை 229E, NL63, OC43, HKU1 இவையே வழக்கமான தடுமன்இ மூச்சுத் தொற்றுகளுக்கும் மிதமான காய்ச்சல்களுக்கும் காரணமாகின்றன.

சில நேரம் விலங்குகளைத் தொற்றும் கொரோனாக் கிருமிகள் பரிணமித்து மனிதர்களை நலிவுறச் செய்து புதிய மாந்தக் கொரோனாக் கிருமி ஆகி விடலாம். இவற்றில் சில: புதிய கொவிட்-2019, 2003இல் ஏற்பட்ட சார்ஸ் தொற்று நோய்க்குக் காரணமான சார்ஸ்-கொவ்இ 2012இல் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட மத்தியக்கிழக்கு மூச்சுநோய் அல்லது மெர்ஸ்–கொவ்.

கொவிட்-19 உடன் ஒப்பிட்டால் சார்ஸ்இ மெர்ஸ் இரண்டிலுமே இறப்பு வீதம் (கிருமித் தொற்றுக்கு ஆளாவோரில் உயிரிழப்போரின் விகிதம்) மிக அதிகம். சார்ஸ் இறப்பு வீதம் 10 விழுக்காடுஇ இன்னுமதிகமாக மெர்ஸ் இறப்பு வீதம் 34 விழுக்காடு.

மாறாக கொவிட்-19 இறப்பு வீதம் 1 முதல் 3.4 விழுக்காடுதான் என்பது இப்போதைய மதிப்பீடு. ஆனால் இந்த மதிப்பீடு மிகவும் தொடக்கநிலைப்பட்ட தரவுகளின் அடிப்படையிலானதுஇ தொற்றுநோயின் செயல்போக்கில் மேலும் தகவல் கிடைக்கும் போது திருத்தம் செய்ய நேரிடலாம்.

நோய்க்கடத்தல் வழிகள்:

முதல் கொவிட்-19 நோய்த்தொற்றுகளை சீன நாட்டின் வூகான் நகரில் உயிர் விலங்கு அங்காடி ஒன்றுடன் தொடர்புபடுத்திச் செய்திகள் வந்தன. ஆனால் கிருமி இப்போது ஆளுக்கு ஆள் பரவி வருகிறது.1 கொவிட்-19 நோயினால் கடுமையாகப் பாதிப்புற்ற ஒருவர் மற்றவர்களுக்கு அதனைப் பரப்ப வாய்ப்புண்டு. அதனால்தான் இந்த நோயாளர்கள் நலம் பெறும் வரை அல்லது மற்றவர்களுக்கு நோய் தொற்றச் செய்யும் இடர்வாய்ப்பு நீங்கும் வரை அவர்களை (எந்த அளவுக்கு நோய்வாய்ப்பட்டுள்ளார்கள் என்பதைப் பொறுத்து) மருத்துவமனையிலோ வீட்டிலோ தனிமைப்படுத்தி வைக்குமாறு நலவாழ்வு அதிகாரிகள் பரிந்துரைக்கிறார்கள். நடப்பு நிலவரப்படி நோய்க்கிருமி உலகின் சில பகுதிகளில் சமுதாய அளவில் எளிதிலும் நிலையாகவும் பரவிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இருமும் போது அல்லது தும்மும் போது வழக்கமாகச் சிதறும் கிருமித்தொற்றிய சளி அல்லது பெரிய நீர்மத் திவலைகள் கிருமிக் கடத்தலுக்கு முதன்மை வழியாகும். இந்தத் திவலைகள் விழும் மேற்பரப்புகளைத் தொடுவதும் கிருமிக் கடத்தலுக்கு வழிகோலக்கூடும் என்பதால்தான் முறையாக அடிக்கடி கைகழுவும்படி அறிவுறுத்தப்படுகிறது.

அ. அடிக்கடி கை கழுவுங்கள்

உங்கள் கைகளை முறையாகவும் முழுமையாகவும் அவ்வப்போது ஆல்ககால் சார்ந்த கைத்தடவியால் தூய்மை செய்யுங்கள்இ அல்லது வழலையும் (சோப்) நீரும் கொண்டு கழுவுங்கள்.

ஏன்? சோப்பும் நீரும் கொண்டு உங்கள் கைகளைக் கழுவுவது அல்லது ஆல்ககால் சார்ந்த கைத்தடவி பயன்படுத்துவது உங்கள் கைகளில் இருக்கக் கூடிய கிருமிகளை அழித்து விடும்.

ஆ. சமூகத் தொலைவு பேணுங்கள்

உங்களுக்கும் இருமுகிற அல்லது தும்முகிற எவர் ஒருவருக்கும் இடையில் குறைந்தது ஒரு மீட்டர் (3 அடி) தொலைவு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏன்? இருமுகிறவர்கள் அல்லது தும்முகிறவர்கள் மூக்கிலிருந்தோ வாயிலிருந்தோ சிறு நீர்மத் துளிகள் சிதற விடுகிறார்கள். இந்தத் துளிகளில் நோய்க்கிருமி இருக்கக் கூடும். இருமுகிறவர் கொவிட்-19 நோயாளராக இருந்து நீங்கள் அவருக்கு நெருக்கத்தில் இருந்தால் அந்தத் துளிகளை நீங்கள் மூச்சில் இழுத்துக் கொள்ள நேரிடலாம்.

இ. கண் காது மூக்கு தொடுவதைத் தவிர்ப்பீர்!

ஏன்? கைகள் பல பரப்புகளைத் தொடுவதால் கிருமிகள் ஒட்டிக்கொள்ள வாய்ப்புண்டு. தொற்றிய பின் கைகள் இக்கிருமிகளை உங்கள் கண்இ காதுஇ மூக்குக்கு மாற்றி விடலாம். அங்கிருந்து கிருமி உங்கள் உடலில் நுழைந்து உங்களை நோயாளி ஆக்கி விடக் கூடும்.

ஈ. மூச்சுத் தூய்மை காப்பீர்

நீங்களும் உங்களைச் சுற்றியிருப்பவர்களும் நல்ல மூச்சுத் தூய்மை கடைப்பிடிக்கச் செய்யுங்கள். இருமும் போது அல்லது தும்மும் போது மடித்த முழங்கையால் அல்லது துடைதாளால் வாயையும் மூக்கையும் பொத்திக் கொள்ளுங்கள். துடைதாளை உடனடியாகக் குப்பையில் சேருங்கள்.

ஏன்? திவலைகள் கிருமியைப் பரவச் செய்கின்றன. நல்ல மூச்சுத் தூய்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம் தடுமன்இ ஃப்ளூஇ கொவிட்-19 போன்ற நோய்க்கிருமிகளிலிருந்து உங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பாதுகாக்கின்றீர்கள்.

உ. உங்களுக்குக் காய்ச்சல்nஇருமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் விரைவில் மருத்துவக் கவனிப்பு நாடுங்கள்.

நலமில்லை என்றால் வீட்டிலேயே இருங்கள். காய்ச்சல்இ இருமல்இ மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மருத்துவக் கவனிப்பு நாடுங்கள்இ முன்கூட்டி அழையுங்கள். உள்ளூர் மருத்துவ அதிகாரி பிறப்பிக்கும் கட்டளைகளின் படி நடந்து கொள்ளுங்கள்.

ஏன்? உங்கள் பகுதியில் உள்ள நிலைமை பற்றிய புத்தம்புதுத் தகவல் தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் இருக்கும். முன்கூட்டியே அழைத்துச் சொல்வது உங்கள் நலவாழ்வுப் பேணுகையாளர் விரைந்து உங்களைச் சரியான நலவாழ்வு வசதியிடத்துக்குப் போகச் சொல்வதற்கு உதவும். மேலும் இது உங்களைப் பாதுகாத்துக் கிருமிகளும் பிற கிருமித் தொற்றுகளும் பரவாமல் தடுக்க உதவும்.

தொற்றுநோயின் எதிர்காலப் போக்கு:

நோய்க் கட்டுப்பாட்டுக்கும் தடுப்புக்குமான மையங்களைச் சேர்ந்த (cdc) முதுநிலையாளர் ஒருவர் இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்க ஊடகங்களிடம் கூறிய செய்தி: ‘இந்த ஆண்டோ அடுத்த ஆண்டோ ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் பலரும் இந்த நோய்க்கிருமிக்கு ஆளாவார்கள்.’

இது வரை உலக அளவில் மிகப் பெரும்பாலான நோய்த்தாக்கு நேர்வுகள் மிதமாகவே இருந்துள்ளன. ஆனால் கொவிட்-19 நோயாளர் இறப்பு வீதம் 1 விழுக்காடு என்றால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டும் பத்தாயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும் என்று பொருள்.

இந்தக் கணக்கு விவரங்களைச் சற்றே சரியாகப் பொருத்திப் பார்க்க: குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டும் வரும் இன்ஃப்ளுயென்சா நோய்க்கிருமியின் நோயாளர் இறப்பு வீதம் 0.1ம%. ஒவ்வோராண்டும் உலகெங்கும் அதனால் 6இ00இ000 (ஆறு இலட்சம் பேர்) உயிரிழப்பதாக மதிப்பீடு செய்யப்ப்டுகிறது. இதைப் போல் கொவிட்-19 பத்து மடங்கு உயிர்பறிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதனை உறுதி செய்ய இப்போதைய நிலையில் போதிய தரவுகள் இல்லை.

நடப்பு நிலவரத்தில் தொற்று நோயியல் வல்லுநர்கள் பெரிதும் அச்சப்படுவது என்னவென்றால் திடீரென்று நோய் வெடித்துப் பரவினால் மேலும் பலரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கும். பல நாடுகளில் நலவாழ்வு அமைப்புகளால் அதற்கு முகங்கொடுக்க முடியாமற்போகும் என்பதே. அப்படிப்பட்ட நிலைமையில் மேலும் பலர் அவர்களை உயிரோடு வைத்துக் கொள்ள மருத்துவமனைப் படுக்கைகள் அல்லது உயிர்வளியூட்டிகள் இல்லாமையால் உயிரிழப்பார்கள்.

கல்விக் கூடங்களை மூடுதல் பெருந்திரள் கூடுகைகளைக் கைவிடுதல்இ வீட்டிலிருந்தபடி பணிசெய்தல் தானே தனித்தொதுங்கல் கூட்டங்களைத் தவிர்த்தல் போன்ற காப்பு வழிமுறைகளைக் கொண்டு இவ்வாறான பேரிடர்ச் சூழலைத் தவிர்க்க முடியும் என இந்த வல்லுநர்கள் கருதுகின்றார்கள்.

நோய்ப்படும் நேர்வுகள் பெரிய அளவில் உயர்வதைத் தடுப்பதற்கான இந்த உத்தியைத் தொற்று நோயியல் வல்லுநர்கள் வரைபடத்தின் ‘வளைகோட்டைத் தட்டையாக்குதல்’ என்றழைக்கிறார்கள். வளைகோட்டைத் தட்டையாக்குதல் என்பதன் பொருள்: இப்போது செயலாக்கப்படும் சமூகத் தொலைவாக்க வழிமுறைகள் அனைத்தும் நலிவுறுதலைத் தடுப்பதற்கானவை என்பதை விடவும் மக்கள் நோயுறும் வேகத்தை மட்டுப்படுத்துவதற்கானவையே

மொத்த நோய்ப்படல் நேர்வுகளைக் குறைக்கா விட்டாலும் கூடஇ தொற்று நோயின் வீதத்தை மட்டுப்படுத்துவது அதிமுக்கியமானதாய் அமையக் கூடும்.’ என்கிறார் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் உயிரியலராய் இருக்கும் ஒருவர்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சமூக நலம், நலன்பேணல் , கல்வி அமைச்சு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Report by: TGTE’s Ministry of Community Health, Welfare and Education.

Twitter: @TGTE_PMO

Facebook: https://www.facebook.com/TGTE.Secretariat/

Email: [email protected]

Phone: +1-614-202-3377

Web: WWW.TGTE.ORG and WWW.TGTE-US.ORG
Transnational Government of Tamil Eelam
TGTE
+ 1-614-202-3377

மாவட்டங்கள் இடையே பயணத் தடை; ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணங்கள் மேற்கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை இடத்துக்கு
இடம் அழைத்துச் செல்வதும் முற்றாகத் தடை
செய்யப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி
யளிக்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளைக் கொண்டுசெல்வதற்கும்
இடமளிக்கப்படும். விவசாய மற்றும் வர்த்தக துறைக்குப் பொறுப்பான அமைச்சர் இப்பணிகளைமுறையாக நிர்வகிக்கவேண்டும்.

கட்சித் தலைவர்களின் அவசர மாநாடு நாளை: கூட்டுகின்றார் மஹிந்த

தலைவர்கள் கூட்டமொன்றை அவசரமாகக் கூட்டுகின்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ. தற்போதைய சூழலில் உடனடியாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.

முக்கியமாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடு மற்றும் நாட்டின் அனர்த்த நிலைமையால் அரசுக்கு பெருமளவு நிதி தேவைப்படுவதால் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டவேண்டிய அவசியம் குறித்து இதன்போது கட்சித் தலைவர்கள் சிலர் வலி யுறுத்தவுள்ளனர்.

வடக்கின் நிலைமைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் இங்கு எடுத்துக் கூறவுள்ளனர்.

முன்னதாக இன்று காலை மாவை சேனாதிராசா பிரதமருடன் தொலைபேசியில் உரையாடி மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாமல் உள்ளது என்று தெரிவித்திருந்தார். அது தொடர்பிலும் நாளைய கூட்டத்தில் பேசப்படவுள்ளது.

அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களின் விநியோகம் –சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு

இன்றைய உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் விரிவடைந்து வரும் இச் சூழ்நிலையில் நாம் வசிக்கும் நாடான சுவிற்சர்லாந்திலும் அதன் தாக்கம் அதிகரித்தவண்ணமே உள்ளது. நாம் அனைவரும் இதனை அறிந்து கொண்டுதான் உள்ளோம்.

சுவிஸ் அரசானது ஆரம்பத்திலேயே வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. எனவே இவ் இக்கட்டான சூழ்நிலையை நாம் உதாசீனப்படுத்தாமல் சுவிஸ் நாட்டின் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை மற்றும் அரசின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம் எனவே இச் சூழ்நிலையில் நாம் எமது வீடுகளை விட்டு வெளியே செல்லுதல் என்பது பாதுகாப்பற்றது அத்தோடு சுவிஸ் அரசும் அத்தியாவசியம் அற்று வெளியே செல்லவேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

எனவே இச்சூழலில் ஜெனிவா, லவுசான், சூரிச், வாலிஸ், லுசேர்ன், பாசல் மற்றும் திச்சினோ ஆகிய மாநிலங்களில் யாருக்கேனும் வெளியில் சென்று அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் வைத்தியரின் ஆலோசனையின் அடிப்படையில் சீட்டுகள் மூலம் மாத்திரைகளைக் கொள்வனவு செய்வதில் சிரமமான சூழலில் உள்ளவர்கள் மற்றும் விசேட தேவை உள்ளவர்களுக்கு (குழந்தைகளுடன் இருப்பவர்கள், வயதானவர்கள், நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் மற்றும் மனதளவில் பலவீனமானவர்கள்) மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் நாம் உதவ எண்ணியுள்ளோம்.

கீழே உள்ள துண்டுப்பிரசுரத்தில் போடப்பட்ட கால அட்டவணைப்படி அதில் உள்ள தொடர்பு எண்களூடாக எம்மை தொடர்பு கொள்ளும் போது உங்களுக்கு உதவ நாம் காத்திருக்கின்றோம்.எம்முடன் சேர்ந்து இச்சேவையைச் செய்யவிரும்பின் எம்மைத்

தொடர்பு கொள்ளளவும்.
நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு- சுவிற்சர்லாந்து

WhatsApp Image 2020 03 23 at 12.21.10 அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களின் விநியோகம் –சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு

1 2 அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களின் விநியோகம் –சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு

மனிதப் புதைகுழியாக மாறுகின்றது இத்தாலி- இறந்தவர்கள் எண்ணிக்கை அரசு கூறுவதை விட அதிகம்

கோவிட்-19 வைரசின் தாக்கம் இத்தாலியை நாசமாக்கி வருகின்றது. ஒவ்வொரு நாளும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் அவர்களின் சடலங்களை எடுத்துச் சென்று உள்ளூர் மயானங்களில் புதைக்கும் பணிகளை இராணுவத்தினரே மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (20) 627 பேர் பலியாகிய நிலையில், சனிக்கிழமை (21) 793 பேர் பலியாகியுள்ளனர். அங்கு சனிக்கிழமை வரை 4,825 பேர் மரணமடைந்துள்ளனர்.

சடலங்களை தாங்கியவாறு அணிவகுத்துச் செல்லும் இராணுவ வாகங்களின் காட்சி பெர்கோமா நகரத்தின் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த காட்சிகள் அனைத்துலகத்தின் கவனத்தையும் ஈர்த்துக்ளது. இத்தாலியின் வடபகுதி நகரான லம்பாடியே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.

இந்த நிலமை 6 மாதங்கள் தொடருமாக இருந்தால் நாம் மிகப்பெரும் மனிதப்புதைகுழியை தயார் செய்ய வேண்டிவரும் என இறுதிக் கிரிகைகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் பணியாளர் கார்லோ றொசினி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் தற்போதைய மையப்புள்ளியாக இத்தாலியே உள்ளது. அங்கு 4,825 பேர் பலியாகியுள்ளதுடன், 53,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை அங்கு 427 பேர் மரணமடைந்துள்ளனர்.

பிராந்திய ரீதியான தகவல்களே வெளியிடப்படுகின்றன. எனவே மாகாண ரீதியில் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். பெருமளவான மக்கள் அங்கு இறக்கின்றனர், ஆனால் அவர்களின் மரணம் கொரோனா வைரசின் மரணமாக கணிக்கப்படவில்லை. ஏனெனில் அவர்கள் வீடுகளில் அல்லது வயாதனவர்கள் பராமரிக்கப்படும் இல்லங்களில் இறக்கின்றனர் என பெர்கோமா நகரத்தின் தலைவர் கோர்ஜியோ கொரி றொய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.italy66 மனிதப் புதைகுழியாக மாறுகின்றது இத்தாலி- இறந்தவர்கள் எண்ணிக்கை அரசு கூறுவதை விட அதிகம்

கடந்த 15 நாட்களில் தனது நகரத்தில் மட்டும் 164 பேர் இறந்துள்ளதாக அனால் 31 பேர் மட்டும் தான் கொரோனா வைரசினால் இறந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 56 பேர் இறந்துள்ளனர்.

25 பிரேதப் பெட்டிகள் புதைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. ஓவ்வொரு நாளும் இந்த உள்ளூர் மயானத்தில் 25 சடலங்களை தாம் புதைப்பதாக அதன் செயலாளர் குலியோ டெலவிற்றா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஒரு நிலமையை தாம் முன்னர் எப்போதும் சந்தித்ததில்லை என றொசினி தெரிவித்துள்ளார். இந்த மாதம் முதல் அவர் 95 சடலங்களை புதைத்துள்ளார். மார்ச் மாதம் 8 ஆம் நாளில் இருந்து லம்பாடியில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மரணவீட்டில் கலந்துகொள்வதும் ஆபத்தானது எனவே இறந்தவர்கள் உடனடியாக பெட்டிக்குள் இடப்பட்டு கிருமிகள் வெளியில் பரவாதவாறு மூடப்படுகின்றனர். பின்னர் பெட்டிகள் நேரிடையாக புதைக்கும் இடத்திற்கே அனுப்பப்படுகின்றன. என தொற்றுநோய் தொடர்பான ஆய்வாளர் அலசன்றோ கிரிமால்டி அல்ஜசீனரா ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

எனவே உறவினர்கள் உரிய பாதுகாப்பு உடைகளுடன் சிறிது நேரமே இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட உறவினர்கள் எனில் காலதாமதம் ஆகின்றது.

இத்தாலி ஒரு கத்தோலிக்க நாடு, ஆனால் மரணவீட்டில் மக்கள் கலந்து தமது மத நடைமுறைகளை பின்பற்றமுடியாத ஒரு நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் திடீரென காணாமல்போவது அங்குள்ள மக்களிடம் பெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.italy76 மனிதப் புதைகுழியாக மாறுகின்றது இத்தாலி- இறந்தவர்கள் எண்ணிக்கை அரசு கூறுவதை விட அதிகம்

உறவினர் ஒருவர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டால் ஏனையவர்கள் பார்க்க முடியாதவாறு அவர் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றார், அவருக்கு நோய் தீவிரமாகினால் அதன் பின்னர் அவரை நிரந்தரமாக பார்க்க முடியாத நிலை ஏற்படுகின்றது.

இவ்வாறு நிiனைத்துப் பாருங்கள், நீங்கள் உங்கள் தாயாருடன் வீட்டில் இருக்கிறீர்கள், தாயாருக்கு நோய் அறிகுறிகள் தென்படுகின்றது. நோயாளர் காவுவண்டி வந்து அவரை ஏற்றிச் செல்கின்றது. அதன் பின்னர் நோய் தீவிரமடைந்தால், நீங்கள் அவரின் கல்லறையை தான் காண்பீர்கள். அவரின் சடலத்தைக்கூட பார்க்க முடியாது.

உயிர் பிரியும்போது அவர் என்ன நினைத்திருப்பார்? நான் அவருடன் என்ன பேச நினைத்திருப்பேன் என்பது எல்லாம் நிiனைவுகளாகவே இருக்கும்.

இறுதி அஞ்சலிகளைக் கூட கூட்டமாக செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டேலவிற்றாவின் சகோதரர் ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். நோயாளர்காவு வாகனம் அவரை ஏற்றிச் சென்றது. டேலவிற்றா 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார், அதேசமயம் அவரின் சகோதரர் இறந்துவிட்டார்.

நாங்கள் எல்லோரும் தனித்தனியாகவே அவருக்கு அஞ்சலிகளைச் செலுத்தினோம், ஒன்றாக கூடவே எங்களால் இயலவில்லை. இந்த நோயின் தாக்கம் தணிந்த பின்னரே டேலவிற்றாவின் சகோதரரின் கல்லறையில் முறையான அஞ்சலிகள் செலுத்தப்படும், அப்போது தான் அங்கு கண்ணீர்கள், நினைவுகள், வணக்கங்கள் எல்லாம் இடம்பெறும் அதுவரை அவர்கள் காத்திருக்கின்றனர்.

செய்தித் தொகுப்பு : ஆர்த்தீகன்

தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)

‘தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் மக்கள் அரணாக நிற்கும்.தமிழ் மக்களுக்கு கூட்டடமைப்புடன் சிலவிடையங்களில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் கூட,மக்களின் ஆணை நிச்சயம் எமக்கு கிடைக்கும்’ என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பிரதான வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் இலக்கிற்கு வழங்கிய நேர்காணல்

கேள்வி – எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் வெற்றிக்கான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன ?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று தன்மை கொண்டது. காரணம் எமது தேசியத் தலைவரின் அங்கீகாரத்தோடு உருவாக்கப்பட்டது. நிச்சயமாக தமிழ் மக்களின் பலத்தோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட எமது மக்களின் ஆணை நிச்சயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்கும்.

அந்த அடிப்படையிலே இம்முறை வன்னி மாவட்டத்திலே 5 ஆசனங்களை நிச்சயமாகப் பெறுவோம். மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் தான் நிற்கிறார்கள் என்பது இந்தத் தேர்தலிலே உறுதி செய்யப்படும். நாடாளுமன்றத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 21 அல்லது 22 ஆசனங்களை பெற முயற்சிப்போம். எங்கள் மக்கள் எங்களோடு தான் நிற்கிறார்கள் என்பதையும் இந்த தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற நிலை ஏற்படுகின்ற போதிலும் தேசியத் தலைவரின் சிந்தனை எம்மிடமுண்டு என்பதையும் இது எடுத்துக் காட்டும்.

இன்று தென்னிலங்கை எமது மக்களை பிரித்தாளக்கூடிய சுயேட்சைக் குழுக்களை களம் இறக்கியுள்ளது. அத்துடன் எமக்கு எதிரான தமிழ்க் கட்சிகள் , சிங்களக் கட்சிகளுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் நிலை உள்ளது என்பதை நான் இங்கே சொல்லிக் கொள்ள வேண்டும். வன்னி மாவட்டத்திலே 27 சுயேட்சைக் குழுக்கள் களமிறங்கியிருக்கின்றதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் எங்களின் மக்களின் அரணாக நிச்சயமாக செயற்படும். ஏனையவர்கள் இந்த வாக்குகளை பிரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் செயற்பாட்டைத் தான் மேற்கொள்ளப் போகிறார்கள்.

சில கருத்து வேறுபாடுகள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மக்களுக்கு கோபம் இருந்தாலும், நிச்சயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் தங்கள் குரலாக அரணாக இருக்கும்.

தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் மக்கள் அரணாக நிற்கும். இந்த விடயம் தேர்தலுக்காக சொல்லப்படுகின்ற விடயமல்ல. உண்மையான யதார்த்தமான விடயமாக எடுத்துச் சொல்கின்றோம். விடுதலைப் புலிகள் தங்கள் அரசியல் பரப்புரை மூலம் 22 ஆசனங்களை எங்களுக்கு பெற்றுத் தந்தார்கள். அதை நாங்கள் நிரூபிக்க முடியும்.

கிழக்கிலுள்ள பத்திரிகையாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முனைப்பு காட்டியிருந்த போது, நான் வன்னிக்கு சென்று தேசியத் தலைவர் அவர்களை சந்தித்து அந்த அங்கீகாரத்தைப் பெற்றவன் என்ற முறையில் அதற்கு நான் சாட்சியாக முடியும். ஆகவே அதை பலவீனப்படுத்த முடியாது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். பலன் தருவார்கள். அந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒருபோதும் தமிழர்களின் இறையாண்மையை விட்டுக் கொடுக்காது. ஆதரிக்கும். அப்படியான ஒரு செயற்பாட்டையே நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

எங்களின் மக்களை எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்காத ஒரு செயற்பாட்டையே நாங்கள் மேற்கொண்டு வந்தோம். இன்று மக்கள் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயம் கேட்கின்றது என்று சர்வதேசம் சொல்லும் அளவிற்கு நாங்கள் நிலைமையை மாற்றியிருக்கின்றோம்.

நாங்கள் சிங்கள தேசத்திடம் இனி நியாயம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் சர்வதேசம் பதில் சொல்லும் நிலைக்கு நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்.

அந்த வகையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான வகையில் மக்களின் இறையாண்மையுடன் கடமையாற்றும். அந்த வகையில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவார்கள். எங்களுக்கு பலம் தந்தவர்கள் மக்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களுக்காக பயணிக்கும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலே ஏனையவர்களை புறந்தள்ளி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் பலமாக நிச்சயம் வெற்றி பெறும்.

கேள்வி -உங்கள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் கோடீஸ்வரன் அவர்கள் தற்போது தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அவர் அப்படி உள்வாங்கப்பட்டால் எதிர்ப்போம் எனக் கூறியிருந்தீர்கள். இப்போது என்ன மனநிலையில் இருக்கின்றீர்கள்?

இந்தக் கருத்தை இங்கு சொல்ல முடியாது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டும். அந்த வகையில், எங்கள் கட்சியைக் கூட்டி இறுதி முடிவை எட்ட இருக்கின்றோம். அதனால் அது பற்றி இங்கு கூறமுடியாது.

கேள்வி – உங்களுடன் இருந்த பலர் இன்று விக்னேஸ்வரன் ஐயாவுடன் இணைந்து போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. இது உங்களுக்கு ஆபத்தாக அல்லது உங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கின்ற ஒரு செயற்பாடாக அமையாதா?

அது அவர்களின் சிறுபிள்ளைத் தனமான செயற்பாடு. அவர்களை வெளி உலகிற்கு காட்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதை வைத்து தாங்கள் பெரியவர்கள் என்று எண்ணுகின்றனர் நிச்சயம் தோல்வியைத் தழுவுவார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் வரையும் தான் அவர்களின் நிலைப்பாடு, சிந்தனை, வெற்றிவாகை எல்லாம் இருக்கும்.

போகின்றவர்களை நாங்கள் தடுக்க முடியாது. இருந்தாலும் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான். அந்த அங்கீகாரத்தை அவர்கள் பெற்றுக் கொண்டு தாங்கள் பெரியவர்கள் என நினைத்து செல்பவர்களுக்கு மக்கள் நல்லதொரு பாடத்தைப் புகட்டுவார்கள் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

உரிய மருத்துவ பற்றுச்சீட்டு மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது.

குளோரோகுயின் “Chloroquine” என்ற மருந்தால் மாத்திரம் கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுக்க முடியாது என்பதால் குறித்த மருந்தை தேவையற்ற வகையில் கொள்வனவு செய்ய வேண்டாம் என கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு செயலணி பொது மக்களை கேட்டுள்ளது.

உரிய மருத்துவ பற்றுச்சீட்டு இன்றி குளோரோகுயின் “Chioroquine”மற்றும் கைரொக்சிகுளொரோகுயின் “Hydroxychioroquine” எனப்படும் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என அனைத்து மருந்தக உரிமையாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் வைத்திய சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய 5 இலட்சம் குளோரோகுயின் மாத்திரைகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் உத்பல இந்திரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடு முழுவதிலும் பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களை இனம் கண்டு அந்த இடங்களில் கிருமி ஒழிக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம், குணசிங்கபுர தனியார் பஸ் நிலையம், மருதானை ரயில் நிலையம், கொச்சிக்கடை புனிய அந்தோனியார் தேவாலயம் மற்றும் கங்காராம விஹாரை ஆகிய இடங்களிலேயே இந்த கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த யாழ் வியாபாரிகள்

மூன்று நாட்கள் ஊரடங்குச் சட்டத்தை சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்தியதை தொடர்ந்து யாழில் அத்தியாவசியப் பொருட்களை வாக்குவதற்கு அதிக மக்கள் கடைககளுக்கு சென்றதால் பதற்றம் ஏற்படிருந்தது.

மக்கள் தமக்கிடையில் குறிப்பிட்ட தூரத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தொற்று நோயை கட்டுப்படுத்தலாம் என்ற அரசின் நடைமுறையை கூட மக்கள் மதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை கடைகளுக்கு சென்ற மக்கள் பொருட்களை குறிப்பிட்ட அளவுகளில் மட்டுமே வாங்கவேண்டும் என சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. ஒரு கிலோ பருப்பு, தகரங்களில் அடைக்கப்பட்ட மீன் வகை இரண்டு என்பன உட்பட பல பொருட்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடைகளில் பெருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டதுடன், வடபகுதியின் பெரும் சந்தையான மருதனார்மடம் சந்தையிலும் காய்கறிகள் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் வலிகாமம் பிரதேச சபையின் அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.