கொவிட் 19 – கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிவதற்கான 20064 மருத்துவ கருவிகள் சீன விமானம் மூலம் இன்றிரவு இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மேலும் 20 ஆயிரம் மருத்துவ உபகரணங்கள் அடுத்த வாரமளவில் இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மரியநாயகம் மாஸ்டர் அவர்களின் இழப்புச் செய்தியறிந்து ஆழ்ந்த துயரத்தில் வேதனையடைகின்றோம்.மக்கள் கல்விச்சமூகம் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் உயரிய போராளிகள் பொறுப்பாளர்கள் தளபதிகள் என இவரது தேசப்பற்றுக்கென்று தனித்துவமான மரியாதைக்குரியவராக திகழ்ந்தவர்.
இவர் ஆங்கில ஆசிரியராக பள்ளிமுதல்வராக ஆங்கில கல்விக்கான உதவிக்கல்விப்பணிப்பாளராக தனது பணியின் ஊடாக அரச உயர்பதவிகளைப்பெற்று ஓய்வு நிலைபெற்ற சமகாலத்தில் தாயக விடுதலைப்போராட்ட எழுச்சிமிகுகாலத்தை உருவாக்க போராளிகளுடன் இணைந்து பக்கபலமாக உழைத்த உண்மைத்துவமான மனிதர்.
தமிழர் புனவாழ்வுக்கழகம் மன்னார் மாவட்ட தலைவராக இருந்து மக்களுக்கான உடனடிமனிதாபிமான பணிகள்,இடைக்கால பணிகள்,நீண்டகாலபணிகள் என முகாமைத்துவ குழு ஊடாக திட்டமிட்டு மக்களது துன்பியல் இடம்பெயர்வு மீள்குடியேற்ற வாழ்வியலை இனங்கண்டு பணியாற்றயவர்.
மன்னார்மாவட்டத்தில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களை உள்ளடக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தலைவராக பணியாற்றியவர்.
தாயக விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக சமாதான பேச்சுவார்த்தைக்காலபகுதியில் சரவதேச மத்தியஸ்தத்ததுடன் உருவாக்கப்பட்ட இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் விடுதலைப்புலிகள் அமைப்பின் மன்னார்மாவட்டம் சார்பான பிரதிநிதியாக அருட்திரு.சேவியர்குரூஸ் அடிகள், திரு.ப.மரியநாயகம் குரூஸ் இருவரையும் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்துறை நடுவப்பணியத்தால் நியமிக்கப்பட்டவர்களாவர்.
இவரது கண்ணியமான பணியின் மூலம் அவ்வப்போது இலங்கை போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழுவின் நிலவரம் இலங்கை அரசபடைகளின் போர்நிறுத்தமீறல்கள் விடுதலைப்புலிகளின் எதிர்பார்ப்பு க்களை உடனுக்குடன் தெரியப்படுத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் நியாயத்தன்மையினை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிற்கு தெரியப்படுத்தி விடுதலைப்போராட்டத்தை சரவதேச மத்தியஸ்துவம் வகித்தவர்களுக்கு அறியப்டுத்திய தேசப்பற்றாளன்.
தொடர்ந்து வந்த காலம் சிறிலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தமிழர்தாயக பிரதேசம் எங்கும் போர் தொடுத்த காலம் மன்னார் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை மக்கள் எதிர்நோக்கிய அத்தனை இடம்பெயர்வுகளிலும் தானும் ஒருவனாக துயரினைச்சுமந்து அவ்வப்போது மக்களுக்கு தேவையான பணிகளை தமிழர்புனர்வாழ்வுக்கழகத்தின் பணிப்பாளர்களுடன் இணைந்து செயற்படுத்தியவர்.
போரின் உச்சக்கட்டம் வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பாரிய இடம்பெயர்வில் மக்கள் சொல்லொணா துயரத்துள்சிறிலங்கா அரசு நடாத்திய ஆகாய கடல் தரைவழிமூலமான மும்முனைத்தாக்குதலில் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட வேளையில் தனது அன்புக்குரிய வாழ்க்கைத்துணைவி ரமணி அன்ரியை இழந்தார் அவரது ஆறாத்துயருடன் தாயக விடுதலைப்போராட்டமும் ஓரிரு வாரங்களில் மௌனிக்கப்பட்டது.வேதனையின் விழிம்பிலும் அழிவில் இருந்து துவண்டு மீண்டும் தன்னைத்தானே சுதாகரித்துக்கொண்டு தனது இறுதிக்காலம் வரை மக்களுக்கும் மண்ணுக்கும் விசுவாசமாக தன்னால் இயன்ற பணியை பற்றுதியுடன் தனது சொந்த இடமான பறப்பான்கண்டலில் இருந்து செய்து வந்தவர்.
வாழும்வரை தனக்கென்று எந்த வித சுயநல எதிர்பார்ப்பின்றி தன்னலம் கருதாது பொதுநல சிந்தனையுடன் வாழ்ந்த தேசப்பற்றுமிக்க மரியநாயகம் மாஸ்டர் மக்கள் மனங்களில் நிறைந்தவராக என்றும் இருப்பார்.இவருக்கான இறுதிவணக்கத்தையும் இறுதி அஞ்சலியையும் இதயபூர்வமாக இணையவழியில் பகிர்வதில் ஆத்மதிருப்தியடைகிறேன்.
கொரோனா தொற்று சந்தேக நபர்களை பரிசோதித்து கண்டறியும், 40,000 (Detection Kits for Covid-19 (PCR-Fluorescence Probing including Reagents+Swabs+tubes) கருவிகள் சீனாவிலிருந்து நன்கொடையாக வருகின்றன. முதல் 20,000 இன்று வருகிறது. மேலும், பெருந்தொகை முக கவசங்களையும் தருகிறோம் என சீனா சொல்கிறது.
கொரோனாவின் வீரிய வளர்ச்சியை கண்டறிய இலங்கையில் தேவையான அளவில், “பீசீஆர்” (Polymerase Chain Reaction) பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை. கொரோனா தொற்று சந்தேக நபர்கள் 45,000 பேர்வரை உள்ளார்கள் என இராணுவ-பொலிஸ் புலனாய்வுதுறை சொல்கிறது. இன்னமும் கண்டறியப்படலாம்.
ஆனால், ஒருநாளைக்கு 350 பேர்தான் பரிசோதிக்கப்படுகிறார்கள். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 2,000 பரிசோதனைகளாவது நடத்தப்பட வேண்டும். பரிசோதனை முடிந்து “நெகடிவ் ஓகே சான்றிதல்” பெற்று முடிந்து வீட்டுக்கு போன நபரும், “மீண்டும் கொரோனா பொசிடிவ்” என்று மருத்துவமனைக்கு திரும்பியுள்ளார். ஆகவே ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று முறை சோதனை செய்வதுதான் சரி. இதுதான் நிலைமை
இந்நாட்டில் இன்று உண்மையான கொரோனா தொற்றாளர்கள் எத்தனை பேர் என எவருக்கும் தெரியாது. அரசுக்கு இந்த உண்மை வெளிப்படுவதில் விருப்பமில்லை. அரசாங்கத்துக்கு “நாங்கள் சிங்கப்பூரை விட, கியூபாவைவிட கெட்டிக்காரர்கள்” எனக்காட்ட வேண்டியுள்ளது. தேர்தல்வரை, கொரோனாவின் வீரிய வளர்ச்சியை, மறைத்து காட்ட வேண்டிய அரசியல் தேவை இந்த அரசுக்கு இருக்கிறது. ஆகவேதான் இதை இழுத்துக்கொண்டே அரசு இருந்தது.
இதனாலேயே, ஜீஎம்ஒஏ (GMOA) என்ற வழமையான அரசு சார்பு மருத்துவர் அமைப்பே, இன்று அரசின் மீது சீறிப்பாய்ந்து, பரிசோதனைகள் நடத்துங்கள் என கூறுகிறது. எதிர்கட்சிகளாகிய நாமும் இதை வலியுறுத்தி கூறுகிறோம்.
இந்த அழுத்தங்கள் காரணமாகவே இன்று இந்த சோதனை கருவிகள் சீனாவில் இருந்து வருகின்றன. இவற்றை பயன்படுத்தி, உடனடியாக அரசாங்கம், பரிசோதனைகளின் தொகையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன்.
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தட்டாங்குளம் காட்டுப்பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நடவடிக்கை வாரிக்குட்டியூர் இளைஞர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதை அறிந்த வாரிக்குட்டியூர் பகுதி இளைஞர்கள் பூவரசங்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததுடன் அப்பகுதிக்கு சென்று முற்றுகையிட்டனர். இதன்போது கசிப்பு காச்சும் செயற்பாட்டை முன்னெடுத்த நபர்கள் தப்பிஓடினர்.
இந்நிலையில் கசிப்பு காச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும், பெரல்கள் என்பவற்றை வாரிக்குட்டியூர் பகுதி இளைஞர்கள் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து மதுபாண நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் கிராமங்களில் அதிகரித்துவருகின்றமை குறிப்பிடதக்கது.
மரக்கறி செய்கையாளர்களின் நன்மைகருதி வவுனியாவிலிருந்து வேறு மாவட்டங்களிற்கு மரக்கறிகளை கொண்டு செல்லும் மொத்த வியாபாரிகளின் விபரங்கள் வவுனியாமாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த வியாபாரிகளுடன் தொடர்புகொள்வதன் மூலம் வவுனியாவில் மரக்கறிசெய்கையில் ஈடுபடுவர்கள் தமது உற்பத்திபொருட்களை விற்பனை செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்ததவகையில்
தயாபரன் 776172821ஓமந்தையில் இருந்து வவுனியா வரை.,
டிக்ஸன் 770881553 வவுனியா மாவட்டம்,
சத்தியமோகன் 779446017 வவுனியா மாவட்டம்,
சந்திரகுமார் 773640417 நெடுங்கேணி,
தங்கவேல் தங்கரூபன் 779669 994 நெடுங்கேணி,
அகிலநாதன் 77155817 நெடுங்கேணி,
முருகதாஸ் 770755021 நெடுங்கேணி,
விநோ765331276 நெடுங்கேணி,
சிறிகாந்தன் 771667890 வவுனியா மாவட்டம்,
விக்கினேஸ்வரன் 768649698 (அனைத்து மாவட்டங்கள்)ஆகிய மொத்தவியாபாரிகளது தொலைபேசி இலக்கங்களை வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் வழங்கியுள்ளது.
கொரோனா வைரசின் தாக்கத்தினால் மேற்குலக நாடுகள் அதிக பாதிப்புக்களை சந்தித்து வருவதுடன், இதுவரையில் 95,403 பேர் பலியாகியுள்ளதுடன், 1,598,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 355,401 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்:
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டன் பகுதியில் இன்று (9) வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிலும், முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இரு பெண்களும் உடன் பிறந்த சகோதரிகளான சந்தியோகு லிண்டா (40), மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார். மற்றையவர் சந்தியோகு டெரன்சி (25). இவர் மன்னார் அஞ்சல் அலுவலக பொறுப்பதிகாரியாவார்.
குறித்த இருவரும் கடமை முடிந்த நிலையில் மன்னாரில் இருந்து கட்டை அடம்பன் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்த குறித்த இரு பெண்களினதும் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்தின் சாரதி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இங்கிலாந்தில் ஒப்பீட்டு ரீதியில் பெருமளவிற்கு இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலிருந்தும், ஆபிரிக்கா, கரிபியன் போன்ற நாடுகளிலிருந்தும் வந்து குடியேறிய; முறையே ஆசியர்களையும், கறுப்பினத்தவர்களையுமே கொரோனாவானது ஒப்பீட்டளவில் கூடியளவில் தாக்கியுள்ளது (படம்1).
இதற்கான காரணத்தை அறிய ஆய்வுகள் இனித்தான் தொடங்கப்பட வேண்டும். ஆனால் அமெரிக்காவிலும் கறுப்பினத்தவர்களே கூடுதலாக நோயினால் தாக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சிக்காக்கோவில் தாக்கப்பட்டவர்களில் 70 விழுக்காடு கறுப்பினத்தவர்களே (சிக்காக்கோ மக்கள் தொகையில் 33% மட்டுமே அவர்கள்) ஆவார்கள். அங்கு மேற்கொண்ட ஒரு ஆய்வில் சில முடிவுகளைப் பெற்றுள்ளார்கள்.
கறுப்பினத்தவர்கள் கூடியளவு சொந்த வீட்டினைக் கொண்டிராமை. (இட நெருக்கடி)
2.இன்றியமையாத சேவைகளில் கூடியளவு கறுப்பினத்தவர்கள் வேலை செய்தல்.
3.கறுப்பினத்தவர்கள் கூடியளவு மருத்துவக் காப்புறுதி பெற்றிராமை.
போன்ற சில காரணங்கள் முதற் கட்ட சிக்காக்கோ ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவற்றினை முறையே இங்கிலாந்திலுள்ள ஆசியர்களின் பாதிப்புடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
1.வீட்டு உடமையாளர் – இதனைப் பொருத்தவரை ஆங்கிலேயரில் 68% ஆகக் காணப்படும் அதே வேளை இந்தியர்களில் (ஆசியர்களில்) இது 74% ஆக சிறப்பாகவேயுள்ளது. {Source: Ethnicity facts and figures 2016 -2018}
இன்றியமையாத சேவைகளில் வேலை – படம் 2 இனைப் பாருங்கள். மருத்துவர்களில் மட்டுமே ஒரளவிற்கு ஆசியர்கள் உள்ளார்கள். இங்கும் வெள்ளையர்களே கூட. செவிலியர்கள், அம்பூலன்சில் வேலை செய்வோர் வெள்ளையர்களே கூடுதல்.
இங்கு இலவசிய மருத்துவம் (NHS) என்பதால் காப்புறுதி பொருந்தாது.
எனவே அமெரிக்கக் காரணங்கள் இங்கு பொருந்தி வரவில்லை. இங்கும் இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
எனது நோக்கில் பின்வருவன காரணங்களாகவிருக்கலாம். (இது ஒரு துறை சார்ந்த ஆய்வன்று)
1.ஒப்பீட்டு ரீதியில் எம்மவர்களிற்கு நாள்பட்ட நோய்கள் கூடுதலாகவிருத்தல். எடுத்துக் காட்டாக, நீரிழிவு 2 (type 2) வகையானது ஒரு வெள்ளையரைத் தாக்குவதை விட ஆறு மடங்கு கூடுதலாக தென்னாசியர்களைத் தாக்குகின்றது.
கை கழுவுதல்-
முகநூலில் வேண்டுமானால் கை கழுவுவது எமது முன்னோரின் பழக்கம் எனக் கம்பு சுற்றலாம், ஆனால் கொரோனா வரும்வரை எம்மில் பலரிற்கு தொற்று நீக்க எவ்வாறு கை கழுவுவது எனச் சரியாகத் தெரியாது. ஒப்பீட்டு ரீதியில் ஏற்கனவே வெள்ளையினத்தவர்கள் கூடியளவு விழிப்புணர்வு கொண்டவர்கள். உண்பதற்கு கைகளைப் பயன்படுத்தும் நாம் கூடியளவில் இதில் கவனம் செலுத்த வேண்டும். வெறும் தண்ணீரில் கையை நனைப்பது தொற்று நீக்கப் பயன்படாது. அதே போன்று எம்மவர்களிடம் முகத்திரை அணிவது பற்றிய விழிப்புணர்வும் குறைவு (அதாவது மாசடைந்த கையினாலேயே முகத்திரையினைத் தொடுவது போன்ற).
கூட்டமாக வாழ்தல் – ஒப்பீட்டுரீதியில் இதுவும் எம்மிடம் கூடுதல். உறவினர்கள், நண்பர்கள் எனப் பல்வேறு வகைகளில் நாம் சமூகத் தூரமாக்கலினை மீறி விடுகின்றோம்.
மதப் பிற்போக்குத்தனங்கள் – இந்துக்களும், கிறித்தவர்களும் சரி எம்மவர்கள் மத வழிபாடுகளிற்காக மார்ச் இறுதி வரை இங்குள்ள வழிபாட்டுத் தலங்களிற்குச் சென்றே வந்தார்கள். மேலும் இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் எச்சரிக்கையின்றியிருத்தல். அதாவது மதம் அறிவியலைவிடப் பெரியது என்ற கருத்து. இவ்வாறான பிற்போக்குத்தனம் வெள்ளையினத்தவர்களிடம் குறைவு.
போரிற்கேயே தப்பி வந்த எம்மை கொரோனா என்ன செய்யும் என்ற அசட்டை சில ஈழத் தமிழர்களிடமுண்டு.
அச்சத்திற்கும், எச்சரிக்கைக்குமிடேயேயான சமநிலை பற்றிய விழிப்புணர்வு இன்மை. சிலர் நோய் வந்தாலே சா என்ற அச்சத்திலேயே இருக்க, வேறு சிலர் இது ஒரு வழமையான காய்ச்சல் போன்றது என எண்ணியுள்ளார்கள். ஒரு சமநிலையான அணுகுமுறை குறைவு (இது அமெரிக்க ஆய்விலும் தெரிய வந்தது).
நாங்கள் வேரோடு வேறொரு மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு இந்த மண்ணில் நடப்பட்டவர்கள். எனவே இயல்பாகவே சிக்கல்கள் எமக்குக் கூடுதலாகவேயிருக்கும். எனவே ஒப்பீட்டு ரீதியில் கூடியளவு எச்சரிக்கையடைய வேண்டியவர்கள் நாமே.