Home Blog Page 2276

மைத்திரியின் கனடா பயணம் நிறுத்தம் – கனடா பிரதமர் புறக்கணிப்பு?

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரியின் கனடாவிற்கான பயணம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒட்டவாவிலுள்ள இடம்பெறவிருந்த மாநாடொன்றில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 29ஆம் திகதி ஜனாதிபதி கனடாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

எனினும், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடோவை சந்திக்க நேரம் கிடைக்காமையே விஜயம் இரத்தானதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் இடம்பெறும் ரணில் – மகிந்தா மோதலில் மைத்திரி மகிந்தாவுக்கு ஆதரவு அளிப்பதாக மேற்குலகம் குற்றம் சுமத்தி வருவதே இந்த புறக்கணிப்புக்கான காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பொன்சேகா – போர்க்குற்றவாளிகளை மீண்டும் நியமிப்பதில் சிறீலங்கா அரசு தீவிரம்

முன்னாள் சிறீலங்கா இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு கோரி 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டட மகஜரை சிறீலங்கா ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் M.R மாரசிங்க, தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை நாடாளுமன்றத்தில் கையளிக்க தீர்மானித்துள்ளதாக கூறினார்.

ஜனாதிபதி இந்த மகஜரை பெற்றுக்கொள்வதற்கான எந்தவொரு உத்தியோகபூர்வ நேரத்தையும் ஒதுக்கி கொடுக்கவில்லை. ஆனால் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ள அமைச்சரவைக்கூட்டத்துக்கு ஜனாதிபதி வருகை தரும்போது குறித்த மகஜரை கையளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பொன்சேகாவை ஒருமுறை நியமித்துப் பார்க்குமாறு குறித்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் ரணில் தலைமையிலான அரசாங்கத்தை நீக்கியபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சின் கீழ் காவல்துறை திணைக்களத்தையும் கொண்டு வந்திருந்தார்.

எனினும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி காவல்துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அல்ல, சட்டம் ஒழுங்கு அமைச்சுக்குள்ளேயே இருக்கவேண்டுமென ஐக்கிய தேசிய முன்னணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு ஐ.தே.க முன்னணியினர் விடுத்துவரும் கோரிக்கையை மறுத்துவரும் ஜனாதிபதி, சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களத்தையும் கொண்டு வருவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை விடுக்கவும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜனவரி மாதம் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்லா இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். 58 ஆவது படையணியை வழிநடத்திய அவர் பெருமளவான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவர்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலையில் தொடர்புடைய இராணுவப் புலனாய்வு அதிகாரி பிரபாத் பலுத்வற்ற மீண்டும் பணியில் கடந்த 11 ஆம் நாள் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார், தற்போது பொன்சேக்கா பணியில் அமர்த்தப்படவுள்ளார். போர்க்குற்றவாளிகளின் இந்த நியமனங்கள் சிறீலங்கா அரசு அனைத்துலக சட்டவிதிகளை முற்றாக மதிக்கவில்லை என்பதையே காட்டுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினரால் அனுஸ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியமும் இணைந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன் நடாத்திய குறித்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

குறித்த நிகழ்வில் மதத்தலைவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மாவட்ட இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பிரதான ஈகைச் சுடரினை அருட்தந்தை தேவதாசன் அவர்கள் ஏற்றிவைத்ததனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன். அஞ்சலி உரைகளும் இடம்பெற்றது.

பத்து வருடங்களின் பின்னரும் நீதி வழங்கப்படவில்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பேரழிவுகளை ஏற்படுத்திய போர் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை சிறீலங்கா அரசு இன்றுவரை வழங்கவில்லை என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கணகாணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பத்தாவது நினைவேந்தலை தமிழ் மக்கள் உலகம் எங்கும் நினைவுகூர்ந்து வருகையில் மனித உரிமைகள் காண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் (18) வெளியிட்டுள்ளது.

அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தீர்மானம் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளபோதும் போரில் பாதிக்கப்பட்ட எவருக்கும் நீதி வழங்கப்படவில்லை.

இனங்களுக்கு இடையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் ஒன்று போரின் பின்னர் சிறீலங்கா அரசுக்கு கிட்டியிருந்தது. ஆனால் சிறீலங்கா அரசுகள் அதனை பயன்படுத்தவில்லை, போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை, யாரும் தண்டிக்கப்படவில்லை என மனித உரிமைகள் கணகாணிப்பகத்தின் தென்னாசியாப் பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

தீர்மானம் 30/1 இன் படி சிறீலங்கா அரசு 25 சரத்துக்களை நிறைவேற்ற சம்மதம் தெரிவித்திருந்தது. அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டநிபுணர்கள் ஆகியோர் உள்ளடங்கிய விசாரணைக்குழுவை அமைப்பதும் அதில் ஒன்று.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டபோதும் அது முழுமையாக செயற்படவில்லை.

அனைத்துலக நீதிபதிகள் விசாரணைகளில் ஈடுபடுவதை சிறீலங்கா அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் எதிர்க்கின்றனர். போர் வெற்றி வீரர்களை தண்டிக்க முடியாது என அவர்கள் வாதிடுகின்றனர். அனைத்துலக நீதியாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டால் அவர்கள் மீதான அரசியல் அழுத்தங்கள் குறைவாகவே ஏற்படலாம்.

மிகவும் சிறிய அளவே முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. இது இனங்களுக்கு இடையில் முரன்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்கலாம், நாட்டின் உறுதித்தன்மையையும் பாதிக்கும் அதனை தடுக்க வேண்டும் என்றால் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் அதன் தலைவர் மிசேல் பச்சிலற் தெரிவித்திருந்தார்.

201905asia srilanka war பத்து வருடங்களின் பின்னரும் நீதி வழங்கப்படவில்லை - மனித உரிமைகள் கண்காணிப்பகம்பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது என்ற உறுதிமொழியையும் சிறீலங்கா அரசு நிறைவேற்றவில்லை. அதற்கான மாற்று தடைச்சட்டத்தை சிறீலங்கா முன்வைத்துள்ளது. அது மட்டுமல்லாது அந்த சட்டத்தை பயன்படுத்தி தற்போதும் படையினர் மக்களை கைது செய்து தடுத்துவைத்து வருகின்றனர்.

கைது செய்தவுடன் துன்புறுத்தல்களும், பாலியல் வன்கொடுமைகளும் தற்போதும் இடம்பெறுவதாக 2016 ஆம் ஆண்டு சிறீலங்காவக்கு பயணம் மேற்கொண்ட ஐ.நாவின் சிறப்பு தூதுவர் தெரிவித்திருந்தார். படையினர் நிலைகொண்டுள்ள நிலங்களை மீளக் ஒப்படைப்பதும் மெதுவாகவே நடைபெறுகின்றது.

போர்க் குற்றங்கள் மேற்கொண்டவர்களை தண்டிக்காது, அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்லா இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். 58 ஆவது படையணியை வழிநடத்திய அவர் பெருமளவான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவர்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலையில் தொடர்புடைய இராணுவப் புலனாய்வு அதிகாரி பிரபாத் பலுத்வற்ற மீண்டும் பணியில் கடந்த 11 ஆம் நாள் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.

புனித ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கருத்துச் சுதந்திரத்தையும் தடுக்கின்றது. தற்கொலைத் தாக்குதலுக்கு பின்னர் இடம்பெற்ற காடையர்களின் தாக்குதல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் சிறீலங்கா காவல்துறை மெதுவாகச் செயற்படுகின்றது.

போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ள நிலையிலும் சிறீலங்காவில் வாழும் ஒவ்வொரு மக்களினதும் மனித உரிமைகளை பாதுகாக்க சிறீலங்கா அரசு முன்வரவேண்டும். அது நடைபெறவேண்டுமெனில் நீதி வழங்கப்படுவதுடன், இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும். மனித உரிமைகளை மேம்படுத்தும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரினவாதிகளால் 27 முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் – செய்திகள் இருட்டடிப்பு

அண்மையில் சிங்கள பேரினவாதிகள், முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்கள் மீதும்,அவர்களின் குடியிருப்புகள் மீதும் மேற்கொண்ட தாக்குதல்களில் பாரியளவிலான பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இச்செய்திகள் ஓரளவிற்கு வெளிவந்தபோதும் முஸ்லீம்களின் வழிபாட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லீம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலில், குருநாகல் மாவட்டத்தில் 23 பள்ளிவாசகளும் ஒரு அரபுக் கல்லூரியும் தாக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் 3 பள்ளிவாசல்களும்,கம்பகாவில் 1 பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன . இத்தாக்குதல்களில் பள்ளவாசல்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அங்கிருந்த புனித திருக்குரான் நூகளும் எரியூட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.musque fai பேரினவாதிகளால் 27 முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் - செய்திகள் இருட்டடிப்பு

 

இந்த சம்பவங்களை வெளியுலகிற்கு குறிப்பாக இஸ்லாமிய நாடுகளுக்கு தெரியாமல் மறைக்க சிறிலங்கா அரசும் அவர்களுக்கு துணைபோகும் முஸ்லீம் அரசியல் வாதிகளும் முயல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.

பிறேசிலில் இடம்பெற்ற தாக்குதலில் 11 பேர் பலி

நேற்று (19) பிறேசிலின் வட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நிகழ்த்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறேசிலில் உள்ள பெலெம் நகர் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், ஆனால் தாக்குதலின் நோக்கம் தெரியவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாக்குதலாளிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதும், ஒருவர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜி1 இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் ஆறு பெண்கள், ஐந்து ஆண்கள் அடங்குவதாகவும், உந்துருளி மற்றும் மூன்று வாகனங்களில் வந்த ஏழு பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிக்கு மீளவும் பணி வழங்கப்பட்டது எவ்வாறு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை வழிநடாத்தியவராகக் கருதப்படும் மேஜர் புலவத்த,சிறிலங்கா இராணுவத்தபதியின் நேரடி உத்தரவுக்கமைய மீளவும் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளார்.major prabath bulathwatte crop கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிக்கு மீளவும் பணி வழங்கப்பட்டது எவ்வாறு

குறித்த அதிகாரியின்கீழ் இயங்கிய குழவினர் தி நேசன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கீத் நொயரை தாக்கியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது தெரிவிக்கப்படுகிறது.

கீத் நொயா கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த மேஜர் புலவத்தகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.keith noyar கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிக்கு மீளவும் பணி வழங்கப்பட்டது எவ்வாறு

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நபர் ஒருவருக்கு எவ்வாறு மீளவும் பணி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மனிதவுரிமை பற்றி உரத்துக் கூவுவோரும், ஊடகத்துறை சார்ந்தவர்களும் இவ்விடையத்தில் மௌனம் சாதிப்பது வியப்பளிப்பதாக உள்ளது.

முஸ்லிம்கள் மீதான சிங்களவர்களின் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டவையே

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னர் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் தமிழர்களே பாதிக்கப்பட்ட போதும், சிங்கள பௌத்த குழுக்கள் இதனை சாட்டாக வைத்து திட்டமிட்ட வகையில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதன்மூலம், இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்று ஏனையவர்களுக்கு காட்ட முனைகின்றனரா என எண்ணத் தோன்றுகின்றது என தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் மட்டுமே. கிறிஸ்தவ தமிழ் மக்கள் அல்லது கிறிஸ்தவ சிங்கள மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் இந்த சம்பவத்தில் பௌத்த சிங்கள மக்கள் இறந்ததாக நான் அறியவில்லை.

இந்நிலையில் வடமேல் மாகாண தாக்குதல் சம்பவங்களை அவதானிக்கும் போது, முஸ்லிம் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்காக அப்பாவி முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பௌத்த சிங்களவர்களே தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். மேலும் அவர்களை துன்புறுத்தியுள்ளனர்.

ஆகவே இந்த வன்முறை நிகழ்வை வைத்துப் பார்த்தால், தாக்குதலை மேற்கொண்ட பௌத்த சிங்களவர்கள், இந்த நாடு ஒரு பௌத்த சிங்கள நாடென காட்டுவதாக நினைக்கத் தோன்றுகிறது என்றார். அத்துடன் இந்தத் தாக்குதல்கள் திட்டமிட்டே நடத்தப்பட்டதாகவும் நினைக்கத் தோன்றுகின்றது.

ஏனெனில் 1983 களில் நடைபெற்ற ஓர் சம்பவத்திற்காக திட்டமிட்ட வகையில் பொரளையில் இருந்து அங்கிருந்த தமிழர்கள் விபரங்களை பெற்று, அவர்களை தாக்கினார்கள். வெள்ளவத்தையில் கூட தமிழர்கள் பெயரை கூறி அவர்களை தாக்கினார்கள்.இதே போலவே தற்போதும் எந்த பாதிப்பினையும் சந்திக்காத சிங்கள பௌத்தர்கள் இதனை ஓர் காரணமாக வைத்து முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.

இதன் ஊடாக இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என காட்டிக்கொள்ள முனைகின்றனர். அதற்காக நாம் முஸ்லிம் தீவிரவாதிகளை ஒன்றும் செய்யக் கூடாது என கூறவில்லை.ஆனால் அவர்களை ஓர் காரணியாக வைத்து சாதாரண முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.

 

 

 

ரிஷாட் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது

அமைச்சர் ரிஷாட் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை சிறீலங்கா பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 17 ஆம் நாள் வெளியிடப்பட்ட அந்த ஒழுங்கு பத்திரத்தில் திகதி குறிக்கப்படாத பிரேரனையாக குறித்த நம்பிக்கையில்லா பிரேரனை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கையொப்பம் இட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளதுடன் அமைச்சர் மீதான 10 குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளது.

21 ஆம் திகதி முற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. அன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டும் சபாநாயகர் , மேற்படி நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் கலந்துரையாடி விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்கான திகதியை நிர்ணயிப்பார்.

 

பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு -மன்னார் தமிழரசு கட்சி

கடந்த வாராம் கூட்டு எதிர் கட்சியினால் வன்னி பாரளுமன்ற உறுப்பினரும் கைத்தொழி வணிக வர்தக அமைச்சருமான ரிசாட் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட தமிழராசு கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டத்தை மேலும் நீட்டிப்பதற்கு ஆதரவு வழங்குவத இல்லையா என்பது தொடர்பாகவும் அமைச்சர் ரிசாட் பதிவுதீன் மீதுகொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையிலா பிரேரனை தொடர்பாகவும் எவ்வாறு பாராளுமன்றத்தில் தீர்மானம் மேற்கொள்வது தொடர்பாக மன்னார் மாவட்ட தமிழ் அரசு கட்சி உயர்மட்ட குழுவின் கலந்துரையாடல் நேற்றைய தினம் (18) மாலை 4 மணியளவில்
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதன் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது தற்போது அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அவசர்காலச்சட்டத்தினால் தமிழ் மக்கள் திட்டம் இட்டு பழிவாங்கப்படுவதனாலும் பல்கலைகழக மாணவர்கள் முன்னால் மாகாணசபை உறுப்பினர்கள் மீது திட்டம் இட்டு குற்ற நடவடிக்கைகள் எடுப்பதனால் நிச்சயமாக அவசரகால சட்டத்தை நிச்சயாமக எதிர்க்கவேண்டும் என ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்ப்பட்டது

குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன்

அவசரகால சட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இல்லாவிட்டாலும் பாராளுமன்றத்தில் நிச்சயம் வெற்றி பெரும் ஆனலும் இவ் அவசர கால நிலமையினை பயன்படுத்தி எமது மக்கள் பலிவாங்கப்படுகின்றனர்
எனவே நம்பிக்கையில்லா பிரேரனையின் காலப்பகுதி ஒருவ்மாதம் ஆகும் அவ் காலப்பகுதி நிறைவடைந்த பின்னர் மீண்டும் பாராளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் போது அதற்காக ஆதரவை வழங்கப்போவது இல்லை என எமது மன்னார் மாவட்ட உயர் மட்ட குழு தீர்மானிதுள்ளோம்

அதே நேரத்தில் குண்டு வெடிப்பில் சம்மந்த பட்ட ஒருவரை விடுவிப்பதற்காக அமைச்சர் ரிசாட் பதிவுதீன் மூன்றுதடவை இராணுவதளபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும்

அவர் மூலமாக மன்னார் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சீர்குழைந்துள்ளதாகவும் அதே நேரத்தில் அன்மையில் தாராபுரபகுதியில் அமைச்சருக்கு சொந்தமான விடுதியில் சந்தேத்திற்கு இடமான இலக்கத்தகடு கண்டுபிடிக்கப்பட்டது ஆனலும் குறித்த இலக்க தகடானது இலங்கை மோட்டார் வாகன அமைப்புனால் (RMP) வினியோகிக்கப்படவில்லை எனவும் எதோ ஒரு வகையில் தவறான நடவடிக்கைகாகவே குறித்த இலகக்க தகடு பயன் பட்டிருக்கலாம் எனவும்
இது தொடர்பான முழுமையான விசாரணைகள் நடத்துவதற்காகவாவது அவர் மீதி கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையிள்ளா பிரேரனையை ஆதரித்து அவருக்கு இந்த தற்கொலை குண்டுதாக்குதலுக்கும் தொடர்பு உள்ளத இல்லையா என்பது தொடர்பாகவும் குறுகிய காலத்தில் அவர் எவ்வாறு செல்லவ்ந்தராக வந்தார் என்பது தொடர்பாகவும் விசாரிக்கவேண்டும் என தெரிவித்தார்

அத்துடன் ஒட்டு மொத்த மன்னார் தமிழ் அரசு கட்சி உயர்மட்ட குழுவினராலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவாக வாக்களிக வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.