திருகோணமலையில் கன மழை தொடர்ச்சியாக பெய்து வரும் காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நேற்று முதல் பெய்து வருகின்ற தொடர் அடை மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் மற்றும் வயல் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.
திருகோணமலை , கிண்ணியா, தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரம் உட்பட பல கிராமங்கள் நீரினால் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளாந்த சில தொழில் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளதுடன் வீடுகளுக்குள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்ததால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.