ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பெய்த கனமழை காரணமாக சுமார் 171 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
இந்த வெள்ளத்தினால், ஜேர்மனியில் இதுவரை குறைந்தது 144 பேர் இறந்துள்ளனர் என்றும் அதே நேரத்தில் 27 பேர் அண்டை நாடான பெல்ஜியத்தில் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
ஜேர்மனியின் ஸ்டெயின்பர்க் அணையில் விரிசல் விழுந்துள்ளதால் அந்த அணை எந்த நிமிடத்திலும் உடையும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதனருகே இருந்த 4 ஆயிரத்து 500 பேர் உடனடியாக வேறிடத்திற்கு மாற்றப் பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இரு நாடுகளிலும் வெள்ளத்தினால் காணாமல் போன நூற்றுக் கணக்கானவர்களை தேடும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.