“சமூக ஊடகங்களை முடக்க அரசு முயற்சி” -இலங்கை எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

சமூக ஊடகங்களை முடக்க அரசு முயற்சி

வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக சமூக வலைதள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘கோட்டா கோ ஹோம்’ உள்ளிட்டவற்றின் குரலை முடக்கியதைப் போன்று சமூக வலைதளங்களின் குரல்களையும் முடக்குவதற்கான நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது” என  அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Tamil News