பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருகோணமலையில் மீனவர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த சிறு வலைகள் மற்றும் தூண்டல்கள் மூலமாக மீன்பிடியிலீடுபடுவோர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் தேசிய மீனவப் பெண்கள் சம்மேளனம் ஆகியன ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் திருகோணமலையினை சேர்ந்த மீனவக் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் காணப்படும் பொருளாதாரச் சுமை, எரிபொருள் விலையேற்றம், மின் மற்றும் நீர்ப்பட்டியல்களின் விலையேற்றம்

என்பவற்றை அரசு உடனடியாக முகம்கொடுத்து அதற்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கையெழுத்திடப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மஹஜர் ஒன்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவ சமூகத்தினரால் ஆளுநரது செயலாளரிடம் வழங்கப்பட்டது