ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் அடிக்கடி இடம் பெறுவது அதன் பண்புகளில் ஒன்றாக காணப்பட்டாலும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் 2025.05.06 ந் திகதி இடம் பெறவுள்ளது. இதனை அடுத்து பல கட்சிகள், சுயேட்சை குழுக்களை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிக்காக உழைத்து வருகின்றனர். இதற்காக மக்கள் மத்தியில் வீடு வீடாக சென்று பிரச்சார நடவடிக்கைகளிலும் தேர்தல் பரப்புரை கூட்டங்களையும் நடத்தி வரு வதை அவதானிக்க முடிகிறது.
எது எவ்வாறாக இருந்த போதிலும் தேர்தல் காலங்களில் மக்களிடம் வாக்குகளுக்காக பல பொய் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். இது குறித்து திருகோணமலையை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் கோகிலா தெரிவிக் கையில் ஆனாலும் தற்போதைய அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களையும் தங்கள் கைக ளில் கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர் இவ்வாறான நிலையில் வேட் பாளர்கள் பதவிகளை தக்க வைக்கவும் ஆட்சியில் இடம் பிடிக்கவும் காலா காலம் பல வாக்குறுதிகளை மக்களிடத்தில் வழங்குகின்றனர். ஏமாற்றத்துடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அரசியலுக்காக பிழைப்பு நடாத்துகின்றனர் இவ்வாறான நிலை எதிர்காலத்தில் மாற வேண்டும் என்றும் தமிழ் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை குறைத்து தங்கள் பிரதேச அதிகாரங்களில் அக்கறை கொண்டு தற் போதைய அரசாங்கம் செயற்படுகின்றது “ என்றார்.
தேர்தல் காலத்தில் மாத்திரம் மக்கள் செல்வாக்கினை பெற பல பிரயத்தனங்களை கையாள்கின்றனர் இதனால் பல கட்சிகளுக் கிடையில் பல போட்டிகள் வட்டாரங்களில் இடம் பெறுகின்றது . இக் குறித்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வட்டார மக்களின் செல் வாக்குகளை பெற மறைமுகமான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் இதனால் வன்முறைச் சம்பவங்கள் கூட இடம் பெற்றுள்ளன இதனை கண்காணிக்க பல தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் முறைப்பாடுகளை மக்கள் முறைப்பாடு செய்ய மாவட்ட ரீதியில் தேர்தல் ஆணைக்குழு மூலமான அரசாங்க தேர்தல் திணைக்களங்கள் நிறுவப்பட்டுள்ளன இதனடிப்படையில் தேர்தல் ஆணைக் குழு வின் தகவலின் படி மார்ச் 20 தொடக்கம் 30 வரையான காலப் பகுதியில் மொத்தமாக 3828 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இதில் 24 வன்முறைச் சம்பவங்களும், தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் 3563 முறைப்பாடுகளும் ஏனைய முறைப்பாடுகளாக 241 உம் காணப்படுகிறது.
இவ்வாறான தேர்தல் நிலவரங்கள் குறித்து நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (CAFFE) நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவிக்கையில் “அண்மையில் நடைபெற்று முடிந்த இரு தேர்தல் களையும் வைத்து ஒப்பிடுகின்ற போது மக்களின் ஆர்வம் இம் முறை தேர்தலில் சில பிரதேசங்களில் குறைவாக உள்ளதை அவதானிக்க முடிகிறது. இதற்கான காரணமாக 2024 ல் அண்மையில் ஜனாதிபதி தேர்தல் ,பொது தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 2018ல் இறுதியாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம் பெற்றது இருந்த போதிலும் இம் முறை சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம், வன்முறைச் சம்பவங்கள், அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல் போன்றன குறைவாகவே உள்ளது. பிரச்சார அதிகரிப்பு அதிகமான ஆர்வம் வன்முறை சம்பவங்கள் தேர்தலுக்கு பின்பு அதிகமாக இடம் பெறவாய்ப்புள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான் குடி மற்றும் திகாமடுல்லவில் உள்ள அக்கரைப்பற்று,சம்மாந்துறை, பொத்துவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் நகர், சாவகச்சேரி போன்ற பிரதேசங்களில் வன்முறை சம்பவங்கள் இடம் பெறலாம் என அவதானிக்கப்படுவதுடன் தற்போதைய நிலையில் சுமூகமாக உள்ளது” என்றார்.
இவ்வாறான சூழ் நிலையில் ஆளும் அரசாங்கம் உட்பட தேசிய கட்சிகளை பிரதி நிதித்துவப்படுத்தி பல பிரச்சாரங்கள் உட்பட பல ரூபாக்களை இதற்காக செலவு செய்கின்றனர் . வேட்பாளர்கள் தங்களின் வெற்றிக்காக தேர்தல் விளம்பரங்களுக்காக பதாகைகள்,ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவற்றை தங்கள் வட்டாரங்களில் உள்ள பகுதிகளில் காட்சிப்படுத்தியும் ஒட்டியும் வருகின்றனர். இது சட்டத்துக்கு முரணாக இருந்த போதிலும் தலை மறைவில் நின்று இரவு நேரங்களில் பொலிஸாருக்கு தெரியாமல் செய்து வருகின்றனர்.
இது குறித்து ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . குறித்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்ட சில விடயங்கள் பின்வருமாறு “ தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கைகள் மற்றும் ஊடக வெளியீடுகளின் படி தற்போதைய உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலத்தில் தேர்தல் சட்ட மீறல்களில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதை ட்ரான்பேரன்சி இன்டர்நெசனல் ஸ்ரீலங்கா (TISL) அவதானிக்கிறது. ஆளுங்கட்சி பிரதிநிதிகளை அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கும் உள்ளூராட்சி பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி வெளியிடும் சர்ச்சைக்குரிய பொது அறிக்கைகள் கவலையை அதிகரிக் கின்றன இத்தகைய கருத்துகள் வாக்காளர் சுதந்திரத்தின் மீது முறையற்ற செல்வாக்கு செலுத்தப்படுவதற்கான தீவிர கவலைகளை எழுப்பு
கின்றன.
மேலும் செயல்படும் ஜனநாயகத் திற்கு அவசியமான சமத்துவம் ,பாரபட்சமின்மை, பொறுப்பான தலைமைத்துவம் ஆகிய கொள்கைகள் கவலைக்குரிய வகையில் புறக்கணிக் கப்படுவதையும் இது வெளிப்படுத்துகின்றது. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை உறுதி செய்வதற்கும் ,தேர்தல் முடிவு களின் நம்பகத் தன்மையை பாதிக்கக் கூடிய எந்த வொரு செயலையும் தவிர்ப்பதற்கும் ,மீண்டும் தங்களை அர்ப்பணிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களை TISL கேட்டுக் கொள்கிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் மாத்திரம் வாக்கு கேட்டு வரும் இவர்கள் தேர்தல் முடிந்ததன் பிற்பாடு கவனிப்பாரில்லை எமது கிராமத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் பல குறைகளாக காணப் படுகிறது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் தான் எம்மை போன்ற பாமர மக்களுக்கு விடிவு கிடைக்கும் என திருகோணமலை நகரை சேர்ந்த சாரதியான விஜயன் தெரிவித்தார்.
எல்லா கட்சிகளும் வாக்குகளைப் பெறு வதற்காக மட்டுமே செயல் படுகின்றன; மக்கள் நலனில் உண்மையான பற்றுதல் குறைவாகவே உள்ளது.
முன்னர் ஆட்சி செய்த அரசாங்கம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. புதிய வேட்பாளர்கள் வந்தால் ஏதேனும் மாற்றம் வரும் என நம்புகிறோம். என்ற நிலைப்பாடே மக்கள் மத்தியில் காணப்படுகிறது .
இம் முறை தேர்தலைப் பொறுத்தமட்டில் சமூக வலைத்தளங்கள் வழியாக அரசியல் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இப்போது வேட்பாளர்களின் உண்மையான செயல்பாடுகளை அனைவரும் அறிந்துகொள்கிறோம்.”ஒட்டுமொத் தமாக ஏனைய தேர்தல்களை விடவும் தற்போது இடம் பெறவுள்ள தேர்தல் மக்கள் தங்கள் உள்ளூர் பகுதிகளை அபிவிருத்தி செய்யவும் நிலையான அபிவிருத்திக்காகவும் காத்திருக்கின்றனர்.
“குப்பை அகற்றும் பணிகள் முறையாக நடைபெறவில்லை; தெருக்களில் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.” இதனை சீர் செய்யவேண்டும் என்பதுடன் நீர் வழங்கல் மற்றும் பாதை சீரமைப்பு போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.” தேர்தல் வாக்குறுதிகள் “கடந்த தேர்தலில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை; இம்முறை மாற்றம் வேண்டும்.” என்பதை வாக்களித்த மக்கள் எதிர் பார்க்கின்றனர் .
“புதிய வேட்பாளர்கள் புதிய யோசனை களுடன் வந்தால், அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.” சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கள் குறைவாக உள்ளன; இது சமூகத்தில் பெரும் பிரச்சினையாக உள்ளது.”
“பெண்கள் மற்றும் சிறுபான்மை யினருக்கான நலத்திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.” சமூக ஒற்றுமை மற்றும் சமாதானம் “மக்கள் இடையே நல்லிணக்கத்தை பேணுவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் இவ்வாறு முக்கிய பங்கு வகிக்கின்றதை கண்டு கொள்ளலாம் என்பதுடன் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகவும் காணப் படுகிறது.