பொருளாதார நெருக்கடி: வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் 6465 குடும்பங்கள் பாதிப்பு

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் பொருளாதார நெருக்கடி காரணமாக 6465 குடும்பங்களும் 931 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பொருளா தார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் கேட்கப்பட்ட போதே அவர் அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் 6465 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. அத்துடன் 931 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 213 கர்ப்பிணித் தாய்மாரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.