காலிமுகத்திடலில் தொடரும் ஆர்ப்பாட்டம் -பெருமளவு காவல்துறை வாகனங்கள் குவிப்பு

காவல்துறை வாகனங்கள் குவிப்பு

இலங்கை – கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் அதேவேளை போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் பெருமளவு காவல்துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகள இடம்பெறப்போகின்றனவா என்ற  கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், நியாயபூர்வமான அமைதியான ஆர்ப்பாட்டங்களை அச்சுறுத்தல் மூலம் அடக்குவதற்கான கோழைத்தனமான வெட்கக்கேடான முயற்சி இது என சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகின்றன.

Tamil News