தொழில் வல்லுநர்களின் சம்பளத்தில் மீதான புதிய வரிகளை நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வங்கி ஊழியர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் குழாமினர் தற்போது கொழும்பில் இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழில் வல்லுநர்களின் சம்பளத்தில் மீதான புதிய வரிகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

தாமரை தடாகத்துக்கு அருகாமையில் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நிதி அமைச்சுக்கு அருகில் இடம்பெற்று வரும் மற்றுமொரு போராட்டம் காரணமாக காலி முகத்திடலுக்கு செல்லும் வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்தினால் மூடப்பட்டுள்ளது.