அமெரிக்காவின் டெக்ஸாசில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அமெரிக்காவின் டெக்ஸாசில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், நேற்றைய நாள் வரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

பலர் காணாமல் போயுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழப்பு அதிகரிப்பினால் குறித்த அனர்த்தத்தை  அந்நாட்டு ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் பேரிடராக அறிவித்துள்ளார்.