நேற்றைய தினம் நாட்டில் மேலும் 43 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, 26 ஆண்களும் மற்றும் 17 பெண்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4002 ஆக அதிகரித்துள்ளது.
இதே வேளை, மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 292,608 ஆக அதிகரித்துள்ளது.