அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைத் தூதரகம் வெளியிட்ட நினைவு Coffee Table Book முதல் பிரதியை, அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கரிடம் இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க வழங்கினார்.
இலங்கை–அமெரிக்க நீண்டகால நட்பு, இருதரப்பு உறவுகள், அமெரிக்க உதவிகள் மற்றும் இரு நாடுகளின் வளர்ச்சிக்கு பங்களித்த முக்கிய நபர்கள் தொடர்பான தகவல்களை இந்த நூல் கொண்டுள்ளது.
இந்த நூலை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தூதுவர் தெரிவித்தார்.



