கொடூரமாகத் தாக்கப்பட்ட சீன குடியேறி: கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்ட் ஹார்லெமில் தள்ளுவண்டியில் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த சீன குடியேறியான யாவ் பான் மா, (61) கொடூரமாகத் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு சுவாசக் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது என்றும் மூளையில் இரத்தக் கசிவும் இருந்தது என்றும் அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 31ம் திகதி அவர் மரணமடைந்தார் என்று நியூயார்க் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 49 வயது ஜரோட் போவல் மீது கொலை முயற்சி, தாக்குதல், வெளிநாட்டவருக்கு எதிரான வெறுப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.