கடினமான அனைத்து சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு சீனா உதவியாக இருக்கும்-சீனா

இலங்கைக்கான சீன தூதுவரை, புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இதையடுத்து இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெடிக்கடி குறித்து, மிக ஆழமாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

அத்துடன், சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் நிதி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் போது “கடினமான அனைத்து சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு சீனா உதவியாக இருக்கும்“ என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

Tamil News